Skip to main content

பாஜக, பாமக, தேமுதிக கொடுத்த லிஸ்ட்... அதிமுக சீனியர்கள் அதிர்ச்சி...

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

 

உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாது என்று அனைவரும் சொல்லி வந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு 15 நாளில் வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நாங்குநேரியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசியதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்டது. 

 

admk Alliance



அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவில் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கான இடங்களை பெறுவது சம்மந்தமாக அதிமுகவிடம் பேச ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு சென்னை, மதுரை ஆகிய இரண்டு மாநகராட்சிகளை கேட்டு அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறது. 
 

இதேபோல் பாமகவும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஏற்கனவே தொடங்கியதோடு, தாங்கள் போட்டியிடும் இடங்களை கண்டறிந்து எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறது. அதில் சென்னை, வேலூர், சேலம் ஆகிய மூன்று மாநகராட்சிகளை பாமகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது. பாஜகவும் உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த இடங்களில் தாங்கள் போட்டியிட விரும்புகிறோம் என்று ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறது. அதில் சென்னை, திருப்பூர், நாகர்கோவில், கோவை, ஓசூர் ஆகிய 5 மாநகராட்சிகளை கேட்டிருக்கிறார்கள். 


 

 

பாஜக, பாமக, தேமுதிக கொடுத்த லிஸ்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக சீனியர்களோ கூட்டணிக் கட்சிகள் கேட்ட எண்ணிக்கையும் கொடுக்க வேண்டாம். அவர்கள் கேட்ட இடங்களையும் கொடுக்க வேண்டாம். சற்று பொறுமையாக இந்த விசயத்தில் கையாளுவோம். நாடாளுமன்றத் தேர்தல் மாதிரி இதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வத்திடம் சொல்லி வருகிறார்களாம். 


 

 

இந்தநிலையில்தான் கடந்த 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மிதப்பில் இருக்கக்கூடாது என்றும் கூட்டணிக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும், அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர்.


 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.