Skip to main content

“இராணுவ வீரரை கொன்ற பாஜக நபரை பற்றி அண்ணாமலை வாய் திறக்கவே இல்லை” - ராமசுப்பிரமணியன்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

bjp member army man incident bjp annamalai silent 

 

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் இறந்த சம்பவத்தில் திமுக அரசும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சரும் எந்த விதமான கருத்தும் சொல்லவில்லை என ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலையும், பாஜகவினரும் சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு கல்வியாளரும் அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியன் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அளித்த பதில் பின்வருமாறு...

 

யாராவது ஒருவர் கொலை செய்தால், முதல்வர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை; பதில் சொல்லவில்லை என்று கேட்பதை பாஜகவினர் பொதுவான பழக்கமாக வைத்து இருக்கின்றனர். கிருஷ்ணகிரி ராணுவ வீரரின் சம்பவத்தை பொறுத்த வரையில், இறந்த ராணுவ வீரர் பிரபுவும், கொலை செய்த சின்னசாமியும் நெருக்கமான உறவினர்கள் தான். அதைத் தாண்டி இதனை தேசவிரோதமானது; ஒரு ராணுவ வீரர், அதுவும் பணியில் இருப்பவரை கொன்றுவிட்டனர் என்று பேசுவது தவறு. இது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

 

இது சம்பந்தமாக சின்னசாமி உடன் சேர்த்து 10 பேர்  கைதும்  செய்யப்பட்டனர். இந்த சம்பவம் 8 ஆம் தேதி நடைபெற்றது. 14 ஆம் தேதி ராணுவ வீரர் இறந்துவிட்டார். 15 ஆம் தேதி காலை சின்னசாமியை கைது செய்துவிட்டனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “முதல் தகவல் அறிக்கையில் கொலை முயற்சி என்று பதிவு செய்தோம். ராணுவ வீரரின் இறப்புக்கு பிறகு, அதனை கொலை வழக்காக பதிவு செய்து விட்டோம்” என்று சொல்கிறார்.

 

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஆரணியில் ஒரு ராணுவ வீரரை, அவரின் மனைவியும், மனைவியின் ஆண் நண்பரும் சேர்ந்து கொலை செய்துவிட்டனர். இந்த சம்பவத்தில், ராணுவ வீரரை கொன்றுவிட்டார்கள். முதல்வர் என்ன சொல்லுகிறார் என்று ஏன் அண்ணாமலை கேட்கவில்லை. அதற்கு காரணம் அந்த பெண்ணுடன் சேர்ந்து கொலை செய்த ஆண் ஒரு பாஜககாரன். கொலை செய்யப்பட்டவர் ராணுவ வீரர் என்ற போதிலும் அண்ணாமலை ஏன் வாயை திறக்கவில்லை.

 

ராணுவ வீரர் பிரபுவின் உறவினர் குடிநீர் தொட்டி அருகில் துணியை துவைத்து உள்ளார். அதற்கு கவுன்சிலர் சின்னசாமி எதிர்ப்பு தெரிவித்து, குடிக்கிற தண்ணீர் தொட்டி அருகில் துணி துவைக்கும் போது துணி துவைத்த தண்ணீர் எல்லாம் குடிக்கும் நீரில் கலந்தால் குடிக்க முடியாமல் போய் விடும் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ராணுவ வீரரும் கடுமையான வார்த்தைகளை எல்லாம் பேசி இருக்கிறார்கள். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “இது சிறிய வாய்த்தகராறாக இருந்து பின்பு கம்பி, கட்டைகளை எல்லாம் கொண்டு தாக்கி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.