Skip to main content

“மணிப்பூருக்கு ஏன் பிரதமர் போக வேண்டும்”? - ‘பாஜக’ ஜெயலட்சுமி கேள்வி

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

BJP Jayalakshmi Interview

 

மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பாஜகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி நம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

 

திமுகவின் ஊழல் பட்டியலை எங்களுடைய தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. அதை எங்களுடைய தலைவர் வெளிப்படுத்தி வருகிறார். நேரம் வரும்போது அனைவரின் ஊழல் குறித்தும் அவர் பேசுவார். அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டுள்ள நடைபயணம் என்பது கட்சியினருக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்குமான நடைபயணம். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்கள் பலர் கலந்துகொள்கின்றனர். பல லட்சம் பேர் இதில் ரெஜிஸ்டர் செய்துள்ளனர். ஊழலை ஒழிப்பது தான் பிரதான நோக்கம்.

 

ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எங்களுடைய விருப்பம். மது ஒழிப்பும் எங்களுடைய பிரதான நோக்கம். மதுவால் பல குடும்பங்கள் சீரழிகின்றன. நம்முடைய மாநிலம் குறித்துதான் முதலில் நாம் கவலைப்பட வேண்டும். அதன் பிறகுதான் மற்ற மாநிலங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். அண்ணாமலை அவர்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பதவியை விடக் கட்சிதான் அவருக்கு முக்கியம். அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார். கட்சி வெல்ல வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள். 

 

எஸ்.வி.சேகர் போன்றவர்கள் கட்சிக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் பாதகமாக இல்லாமல் இருக்கலாம். அண்ணாமலை அவர்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் வரும் கூட்டம் எஸ்.வி.சேகருக்கு வருமா? குஷ்பு அவர்கள் தன்னுடைய பணியைத் தொடர்ந்து மேற்கொண்டுதான் வருகிறார். மணிப்பூர் பிரச்சனை என்பது இப்போது மட்டும் நடப்பது அல்ல. இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. பிரதமர் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமித்ஷா அங்கு சென்று வந்திருக்கிறார். 

 

சரியாக நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு அந்த வீடியோவை வெளியிட்டார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் தவறுகளை மட்டும்தான் இவர்கள் பேசுகிறார்கள். அனைத்து மாநிலங்களில் நடக்கும் தவறுகள் குறித்தும் பேச வேண்டும். முதலில் உங்களுடைய கட்சியில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். மணிப்பூரில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். பிபிசியில் வரும் எந்த செய்தியையும் நடுநிலையானதாக நான் பார்க்கவில்லை.

 

 

 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.