Skip to main content

செம்மொழியை வைத்து அரசியல் செய்யும் பாஜக... துணைபோகும் அதிமுக... திமுக எதிர்ப்பின் பரபரப்பு பின்னணி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

bjp


தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் காலத்திலிருந்து செம்மொழித் தமிழுக்கான குரல் ஒலித்தது. தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் இருந்தபோது மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் இருந்த செல்வாக்கினால் 2007இல் தமிழுக்கு செம்மொழித் தகுதியை அதிகாரப்பூர்வமாக வழங்கியது இந்திய ஒன்றிய அரசு.
 


இதனையடுத்து, மைசூரில் இயங்கி வந்த இந்திய மொழிகள் மய்ய (Central Institute of Indian Languages) நிறுவனத்தின் அலுவலகம் சென்னைக்கு மாறுதலாகும் படி செய்து, செம்மொழித் தமிழ் உயராய்வு மையமாகக் கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் இயங்கிடச் செய்தார் கலைஞர். தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயைச் சிறந்த தமிழ் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் விருது வழங்க அறக்கட்டளை அமைக்கவும் உதவினார்.

ஆட்சி மாற்றத்தால் செம்மொழி கவனிப்பாரற்றுப் போனது. தரமணிக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தில் இயக்குநர், துணைத் தலைவர், பதிவாளர், நிதி அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகள் பலவும் காலியாகவே கிடந்தன. மொழி சார்ந்த அமைப்புக்கு தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்களைத் தற்காலிகப் பொறுப்பாளர்களாக கடந்த 13 ஆண்டுகளாக நியமித்து வந்தது மத்திய அரசு. இதனை எதிர்த்து தி.க, தி.மு.க. போன்ற இயக்கங்கள் குரல் கொடுத்தும் போராடியும் வந்தன. தமிழார்வலர்கள் பலரும் குரல் எழுப்பி வந்தனர்.

2014 இல் இயக்குநர் பதவிக்காக செம்மொழி நிறுவனத்தின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. முனைவர் மு.பாலசுப்பிரமணியன் தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் இயக்குநராக நியமனம் செய்யப் படவில்லை. பாலசுப்ரமணியன் இப்போது தஞ்சை பல்கலைக்கழகத் துணைவேந்தராக உள்ளார். தேசிய தொழில்நுட்பக் கல்லூரியான என்.ஐ.டியின் பேராசிரியர் பழனிவேல்தான் செம்மொழி மத்திய நிறுவனத்தின் தற்காலிகப் பொறுப்பில் இருந்து வந்தார்.
 

bjp


இந்நிலையில், செம்மொழி மய்யத்தின் இயக்குநர் பதவிக்கு மீண்டும் விளம்பரம் செய்யப் பட்டது. முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், பேராசிரியர் என்ற நிலையை அடைந்திருக்க வேண்டும், துறைத்தலைவைராக அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும், 5 ஆண்டுகால நிர்வாக அனுபவமும் வேண்டும் எனப் பல விதிமுறைகள் குறிப்பிட்டப்பட்டிருந்தன.
 


தகுதியுள்ளோர் விண்ணப்பித்திருந்த நிலையில்தான் செம்மொழி மத்திய நிறுவனத்தின் இயக்குநராக முனைவர் சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அதில் நடிகர் ரஜினியையும் இணைத்து ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து, செம்மொழி நிறுவனத்துக்கு முதல் இயக்குநரை நியமித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ரஜினி கடிதம் எழுத, அதுவும் ஊடகங்களில் வெளியானது. இந்தியாவின் அனைத்து மொழிகள் மீதும் பா.ஜ.க. அரசுக்கு உள்ள அக்கறை காரணமாகத்தான் செம்மொழித் தமிழை வளர்ப்பதற்காக இயக்குநர் நியமிக்கப்பட்டிருப்பதாகப் பேசப்பட்டது.

இயக்குநர் சந்திரசேகரகன் காங்கேயம் அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியர் நிலையில் உள்ளவர். அவரைவிட பணி அனுபவமும் தகுதியும் பெற்றவர்களான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இயக்குநர் பதவியின் நேர்காணலுக்குச் சென்றவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடாமல் சந்திரசேகரனை நியமித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த நியமனத்தில் காட்டப்பட்டுள்ள அவசரம் மற்றும் விதிமீறல்கள் குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.சீனுவாசன், பேராசிரியர் இரா.முரளி மற்றும் பல கல்வியாளர்கள் வெளிப்படையாகவே குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். தி.க. தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை வெளியிட்டார்.

நேர்காணலுக்குச் சென்றவர்களில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ.) இந்திய மொழிகள் மையம்-தமிழ்ப் பேராசிரியர் தாமோதரன், சென்னை உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் செல்வகுமார் ஆகியோர் உதவிப் பேராசிரியர் சந்திரசேகரனைவிட தகுதிப்பாடுகளில் மூத்தவர்கள் என்பதே கல்வியாளர்களின் வாதம். பேராசிரியர் தாமோதரன் இடதுசாரி சிந்தனை கொண்டவர். தமிழ் மொழி குறித்தும் திராவிடப் பண்பாடு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு, பெரியார் பற்றிய நூல்களை எழுதியுள்ளவர்.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் பயின்றவரான தாமோதரன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம் போன்றவற்றில் பணி அனுபவம் பெற்றபின், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதிக்குரியவர். தனது ஆய்வுகளுக்காக கலைஞர், ஜெ போன்ற முதல்வர்களின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றவர். ஜே.என்.யூ. என்றால் மத்திய பா.ஜ.க. அரசுக்குள்ள ஒவ்வாமையும், தாமோதரனின் இடதுசாரி- பெரியாரியப் பார்வையும் அவருக்குத் தகுதியிருந்தும் பதவி கிடைக்காமல் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
 

http://onelink.to/nknapp


சந்திரசேகரனுக்கு முதல்வர் எடப்பாடியின் சிபாரிசும், ஜே.என்.யூ.வை ஒதுக்கும் பா.ஜ.க அரசின் கரிசனமும் கிடைத்ததால்தான் வெறும் உதவிப் பேராசிரியரான அவருக்கு இந்தப் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

திருவள்ளுவருக்கு காவிப் பெயிண்ட் அடிப்பதுபோல, செம்மொழித் தமிழுக்கும் காவி வண்ணம் பூசும் வேலையைக் கச்சிதமாகத் தொடங்கியுள்ளது பா.ஜ.க அரசு. தி.மு.க. எதிர்ப்புணர்வு என்ற பெயரில் தமிழுக்குத் துரோகம் செய்கிறது அ.தி.மு.க. என்கிறார்கள் கல்வியாளர்கள்.

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.