Skip to main content

பொருளாதாரத்தில் இந்தியா பெரும் சரிவை திசை திருப்ப... காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து...சிதம்பரம் கைது!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

பொருளாதாரத்தில் இந்தியா பெரும் சரிவை சந்திப்பதை திசை திருப்பவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, ப.சி. கைது என பா.ஜ.க. சீன் போடுகிறது' என விமர்சனம் எழுந்த நிலையில், கடந்தவாரம் திடீரென மீடியாக்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளுக்கு எழுபதாயிரம் கோடி ரூபாய் மறுமுதலீடாக அளிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தோடு மற்ற வங்கிகளின் வட்டி விகிதம் இணைக்கப்படும். கார்களை உற்பத்தி செய்யும் ஆட்டோமொபைல் துறைக்கு உதவிகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் பழைய கார்களை மாற்றி புதிய கார்கள் வாங்க அனுமதி அளிக்கப்படும். கார்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நீக்கப்படும். புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் நீக்கப்படும். மூலதன ஆதாயத்தின் வரிகளுக்கு மேலான சர்சார்ஜ் நீக்கப்படும். சமூக பொறுப்புகளில் சமூக நிறுவனங்கள் நடத்தும் விதிமீறல்கள் தண்டிக்கப்பட மாட்டாது'' என அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

bjp



இதில் "பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடாக அளிக்கப்படும் 70,000 கோடி ரூபாய் என்பதைத் தவிர வேறெதுவும் ஆரோக்கியமாக இல்லை' என்ற விமர்சனம் எழுந்தது. ""இல்லவே இல்லை. மற்றவர்கள் சொல்வது போல இந்திய பொருளாதாரம் பலவீனமாக இல்லை. அமெரிக்காவை விட, சீனாவை விட இந்திய பொருளாதாரம் ஆரோக்கிய மானதாகவே உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய அறி விப்புகள் பழைய பணப் புழக்கத்தை அதிகரிக்கும்'' என பதிலளித்தார் நிர்மலா.


இந்திய பொருளாதாரத்தை மிகவும் பலவீனப்படுத்திக் கொண் டிருக்கும் கிராமப்புற பொருளா தாரத்தை மேம்படுத்த எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரவில்லை. ரியல் எஸ்டேட் துறையில் பல கோடி மக்கள் வேலை செய்கிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அதில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்திருந்த ஒக & எந என்கிற கம்பெனியும் தேவான் ஹவுசிங் & பைனான்ஸ் நிறுவனம் ஆகியவை 60,000 கோடி பணப்புழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த நிறுவனங்களின் சரிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதைப் பற்றி நிர்மலாவின் அறிவிப்பில் எதுவுமில்லை.

சரிவை ஈடுகட்ட இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார்கள். அதனால் தங்கம் விலை ஒரு சவரன் 32,000 என உயரும் என்கிற எதிர்பார்ப்பு வந்துள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள சரிவுகளை சரி செய்யாமல், மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இந்தியா 10.08 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது என அரசு வெளியிட்ட பதிவுகளை அழிக்கும் வேலையை செய்வதில் கவனம் திரும்பியுள்ளதாம்.

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.