Skip to main content

உண்மை சுடுவதால் மோடி தடுமாறுகிறார்: பாஜகவுக்கு ஜோதிமணி பதிலடி

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
rahul-modi


கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீதும், பாஜக அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துப் பேசிய மோடி, அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர் என குறிப்பிட்டார். பாஜகவினர், ராகுலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்கின்றனர். 
 

 

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி:-
 

பாஜகவினரின் பதில் அவர்களின் அறியாமையையும், அகம்பாவத்தையும்தான் காட்டுகிறது. ராகுல்காந்தி கேட்ட உண்மைகள் அவர்களுக்கு சுடுகிறது. ராகுல்காந்தி கேட்ட 10 கேள்விகளும் அனைத்து இந்தியர்களின் மனதிலும் இருக்கிறது. இந்த 10 கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட பிரதமரால் பதில் சொல்ல முடியவில்லை. உண்மை சுடுகிறது என்பதால், ராகுல் காந்தியை எதிர்கொள்ள முடியாமல், அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், பாஜக தடுமாறி பதற்றப்பட்டு என்னசெய்வதென்று தெரியாமல், ராகுல் காந்தி குழந்தைத்தனமாக பேசுகிறார். சின்னப்பிள்ளைத்தனமாக பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

மக்கள்தான் பாஜகவைப் பார்த்து சிரிக்கிறார்கள். ராகுலின் 10 கேள்விகளில் எந்தக் கேள்வி சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது?. தொடர்ந்து மக்கள் மீது வெறுப்பை விதைத்து, பிரிவிணையை விதைத்து, எல்லா மதமும், எல்லா இனமும் ஒற்றுமையாக வாழும் இந்தியா என்ற இமேஜை கெடுத்து ஒரு வெறுப்பின் அரசியலை நடத்துகின்றனர்.

 

 


இந்த சூழலில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் வெறுப்புக்கு எதிராக அன்பைத் தவிர வேறு எதனை முன்னிருத்த முடியும். அரசியலில் அதிகாரம் மட்டுமே நோக்கமல்ல என்று 2014 தேர்தலின்போதே ராகுல் சொன்னார். இரண்டு கட்சிகளுக்கிடையேயான போட்டி அல்ல, இரண்டு தனி மனிதர்களுக்கிடையேயான போட்டி அல்ல, இரண்டு சித்தாங்களுகிடையேயான போட்டி. ஒரு சித்தாந்தம் ஒரு தேசத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. வெறுப்பு, அதிகாரம், அகம்பாவம் என்ற சித்தாந்தத்துக்கு எதிராக அன்பு, சேவை, பொறுப்பு என்பதை மட்டுமே நிறுத்த முடியும். 
 

இந்தியா முழுவதும் நடந்த 10 இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்பு என்ன?. எப்படியாவது பாஜக அரசை வீழ்த்தி, மக்களுக்கான அரசை அமைக்க வேண்டும். அதற்கு ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  
 

பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்று மோடி குற்றம் சாட்டுகிறார். பிரதமர் பதவிக்கு ஆசையில்லாமல்தான் குஜராத்தில் இருந்து மோடி வந்தாரா? குஜராத்திலேயே இருக்க வேண்டியதுதானே? பிரதமர் யார் என்று மக்கள் தீர்மானிப்பார்கள். அதிகாரம், ஆடம்பரம், மமதை அவர்களின் கண்ணை மறைத்துள்ளது. 
 

ராகுல்காந்தி பேசும்போது மோடியை பார்த்து சொல்கிறார், என்னை தாக்கி பேசுகிறீர்கள். ஆனால், உங்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அன்புதான் இருக்கிறது. அன்பை செலுத்தி, உங்கள் மனதில் உள்ள வெறுப்பை எடுப்பதாக சொல்லிதான் மோடியை கட்டி அணைக்கிறார். அதுவெறுமனே கட்டிப்பிடிப்பது அல்ல. ஒரு சித்தாந்தத்தை விளக்குகிறார். இதனைவிட எப்படி விளக்க முடியும். 

சாதாரண டீ கடையில் இருந்து உலக அளவில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை வரை ராகுல் காந்தியின் பேச்சு சென்றடந்துள்ளது. மக்கள் மத்தியில் ராகுலின் பேச்சு சென்றடைந்திருக்கிறது என்ற புரிதல் கூட இல்லாத, தொலைதூரத்தில்தான் பாஜகவும், பிரதமரும் இருக்கிறார்கள். அதற்காக பாஜக மீது பரிதாபப்பட வேண்டியதுதான். 
 

 

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டதா காங்கிரஸ்?
 

நிச்சயமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தினால் மட்டுமே இந்திய தேசத்தை காப்பாற்ற முடியும். ஒரு தேசம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறபோது, கட்சிகள் தன்னுடைய வேறுபாடுகளை களைந்து, விட்டுக்கொடுத்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும், அப்போதுதான் இங்கு மக்களுக்கான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்கிற புரிதல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வந்துள்ளது. அந்த அடிப்படையில் காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க பெரிய கட்சி என்பதால் எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய இடத்தில் உள்ளது. அதனை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மிகப்பொறுப்புடன் திறம்பட செய்வார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.