Skip to main content

மோடியின் வாக்குறுதியும் மக்களின் துயரமும்! கொண்டாடத்தக்கதா இந்த 8 ஆண்டுகள் ?

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

2014ல் ஆரம்பித்த மோடி ஆழி பேரலை, 2019ல் அலையாகி தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்தியாவின் பிரதமரானார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. இரண்டாம் முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 8ம் ஆண்டு விழாவையும் பாஜகவினர் கொண்டாடினர். ஒவ்வொரு தலைவரும் தங்கள் ஆட்சிக் காலத்தில் தங்கள் பெயர் சரித்திரத்தில் நிற்கும்படி சில காரியங்களை செய்துகொண்டே வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி, சில விஷயங்களை செய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8 மணிக்கு அதுவரை புழக்கத்தில் இருந்த உயர்ந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 ஆகியவை செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். அதேபோல், எழிலும் பதைபதைப்பும் நிறைந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370வை அதிரடியாக நீக்கினார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

இரண்டிலும் அவர் சொன்ன காரணம் தீவிரவாத ஒழிப்பு பிரதானமானது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அவர், “நாட்டில் உள்ள அத்தனை கருப்புப் பணத்தையும் ஒழித்துக் கட்டுவது; கள்ளப்பணத்தை அழிப்பது; டிஜிட்டல் பேமண்ட் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையை வளர்த்தெடுப்பது” என நியாயம் சேர்த்தார். ஆனால், இந்தியப் பிரதமரின் 8ம் ஆண்டு கொண்டாட்ட விழாவிற்கு இணையாக அவரின் நடவடிக்கையின் பிரதிபலிப்புகளும் வெளியாகி அவரின் நோக்கம் நிறைவேறியதா என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளன. 

 

முதலாவது காஷ்மீர் விவகாரம்:

 

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பண்டிட்களான வங்கி அதிகாரி, பள்ளி ஆசிரியையும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களும் ஒரு டி.வி. நடிகையும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370ஐ நீக்கும்போது, ஜம்மூ மற்றும் காஷ்மீர் ஆகியவை சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டமன்றம் அற்ற யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் அப்போது கண்டனங்கள் தெரிவித்தபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இதை விட வேறு வழியில்லை. தேவைப்பட்டால் எதிர்வரும் காலத்தில் அமைதி திரும்பினால் ஜம்மு - காஷ்மீருக்கு சட்டசபை அந்தஸ்து வழங்கப்படும்” என்றார்.

 

மேலும், ராஜ்யசபாவில் பேசிய அமித்ஷா, “இந்த நடவடிக்கையால் ஜம்மு - காஷ்மீர் போர்க்களமாக மாறும் என சில உறுப்பினர்கள் கூறினர். அவ்வாறு நடக்காது; அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு அங்கு இருந்த 370வது பிரிவு தான் தடையாக இருந்தது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் அங்கு இருக்கும் வரை அந்த மாநிலத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது” என்றும் ஊழல் மற்றும் பொருளாதாரம் குறித்தும் பேசினார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

காஷ்மீரில் பண்டிட்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஒருசார்பாக இருக்கிறது என சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட நிலையில், இப்படம் குறித்து பிரதமர் மோடி, ``பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த, மறைக்கப்பட்ட உண்மையை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் காட்டியிருக்கிறது. இது போன்ற படங்கள் மூலம், மக்கள் உண்மையை அறிந்துகொள்வதோடு, கடந்தகாலங்களில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதையும் புரிந்துகொள்கிறார்கள்.

 

பேச்சு சுதந்திரத்துக்காகக் கொடி ஏந்தியவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கடந்த 5-6 நாள்களாகக் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்தப் படத்தைப் புகழ்வதற்கு பதிலாக, இழிவுபடுத்திப் பிரசாரம் செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்! நமது எம்.பி-க்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்!" என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். 

 

இன்று காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கியதற்கான நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றால் பெரும் கேள்வியாகவே தொங்கி நிற்கிறது. 

 

இரண்டாவது பணம் மதிப்பிழப்பு:

 

பணம் மதிப்பிழப்பு மூலம், கருப்பு பணம், கள்ள பணம் ஆகியவை ஒழியும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களின் இன்னல்களுக்கு நியாயம் சேர்க்கப்பட்டது. தற்போது, அதிக மதிப்புடைய ரூ.2000 நோட்டுக்கு சில்லறை கிடைப்பதில் சிக்கல் என்பதன் காரணமாக அதன் புழக்கத்தை அரசு குறைத்துள்ளது. 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதனைக் கண்டு பாஜகவினர் உட்பட நாட்டில் உள்ள பெரும்பாலானோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79,669-ஆக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். அதேபோன்று, ரூ.2,000 கள்ள நோட்டுகளின் புழக்கமும் 54.6 சதவீதம் உயா்ந்து 13,604 என்ற எண்ணிக்கையில் இருந்தது. கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கள்ளநோட்டுகளின் புழக்கம் குறைந்திருந்த நிலையில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,08,625-லிருந்து 2,30,971-ஆக அதிகரித்துள்ளது” என்றது.  

 

கள்ளப்பணத்தை ஒழிக்க முன்னெடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தற்போது அதிகம் புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்பிலான பணம் என்பது ரூ. 500 என்றாகிவிட்டது. கள்ள நோட்டு புழக்கமும் முன்பு இருந்தைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 

 

மோடி தலைமையிலான ஆட்சியின் 8 ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் இந்த இரண்டு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் உட்பட வலது சாரி அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.