Skip to main content

தலைவா பட பாணியில் பிகிலுக்கு சிக்கல்!  -அதிர்ச்சியில் விஜய்

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 

                          நடிகர் விஜய்யின் தலைவா பட பாணியில் தற்போது அவருடைய பிகில் படத்திற்கும் சிக்கல் முளைத்திருக்கிறது. இதனால், நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் அதிரிச்சியில் இருக்கிறார்கள். 

         ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ’ அரசியல் ‘ செய்து வரும் நடிகர் விஜய், அவ்வப்போது ஆளும் எடப்பாடி அரசை அட்டாக் பண்ணி வருகிறார். அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சமீபத்தில் நடந்த பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்து கைத்தட்டல் வாங்கினார் விஜய்.  இதனையடுத்து ஏகத்துக்கும் விஜய் மீது கடுப்பில் இருக்கிறது எடப்பாடி அரசு. 

 

actor vijay

       


அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர் விஜய் ஆளும் கட்சியை பகைத்துக்கொள்வது புதிதல்ல. அவர் நடித்த காவலன் படம் வெளி வரும் நேரத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. கலைஞரின் மகன் மு.க.அழகிரியின் மகனின் திரைப்பட நிறுவனம் விஜய்க்கு தொல்லைக் கொடுத்தது. இதனால் அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்தது. 

 

         
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் சந்தித்து உதவும்படி கேட்டனர். ஜெயலலிதாவும் ஆதரவு தந்தார். பட்டம் ரிலீஸானது. இதற்கு பிரதிபலனாக, தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என ஜெயலலிதா வைத்த கோரிக்கையை விஜய் தரப்பு ஏற்றது. ஆனால், புத்திசாலியான சந்திரசேகர், 2011 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை தேர்தல் களத்தில் இறக்காமல் விஜய் ரசிகர் மன்றத்தை மட்டும் அதிமுகவுக்காக தேர்தல் பணி செய்ய பணித்தார். ரசிகர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டதோடு அதிமுகவுக்காக வாக்களிக்கவும் செய்தார்கள். 

              2011 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, விஜய்யின் ரசிகர் மன்றத்தால்தான் அதிமுக ஜெயித்தது என சந்திரசேகர் கொளுத்திப்போட டென்சன் ஆனார் ஜெயலலிதா. விஜய்க்கு எதிராக கம்பு சுழற்றுமாறு அதிமுகவினருக்கு கட்டளையும் போயஸ்கார்டனிலிருந்து கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நொந்து போனார்கள் விஜய்யும் அவரது தந்தையும். 

          இந்த சூழலில்தான் தலைவா படத்துக்கு கமிட் ஆனார் விஜய். ஜெயலலிதா மீதிருந்த கோபத்தை தலைவா படத்தில் பல காட்சிகள் மூலம் சீண்டியிருந்தார் விஜய். சந்திரசேகரனின் யோசனையின் பேரில் அத்தகைய காட்சிகள் புகுத்தப்பட்டிருந்தன. தலைவா – டைம் டு லீட் என்கிற துணை தலைப்பும் விஜய்யின் ஆலோசனையின் படி இணைக்கப்பட்டது. ( தலைவா படத்தின் நோக்கம், அதன் பின்னணி குறித்து நக்கீரன் தான் முதன் முதலில் அம்பலப்படுத்தியது )   
 

             இதனையடுத்து, தலைவா படம் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகும் முதல்நாள் அப்படத்தை வெளியிட முடியாத சூழலை உருவாக்கி, தலைவா-வுக்கு சிக்கலை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு. இதனால் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்த விஜய்யும், அவரது தந்தை சந்திரசேகரும் போயஸ்கார்டனுக்கும் கொடநாடுக்கும் சென்று ஜெயலலிதாவை சந்திக்க  தவம் இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களை சந்தித்தார் ஜெயலலிதா. 

               அவர்களுக்கு ஜெயலிதா கொடுத்த ஓவர் டோஸில் ஆடிப்போனார்கள் தந்தையும் மகனும். அவர்கள் ஜெயலலிதாவிடம் மன்னிப்புக் கேட்க, அதன்பிறகே, குறிப்பிட்ட  பல காட்சிகள் கட் செய்யப்பட்டு படம் ரிலீஸானது.  இப்படி ஆளும் கட்சியோடு மோதி, பல சிக்கல்களை தனது படத்துக்கு எதிர்கொண்டவர் விஜய். அந்த வரிசையில் தற்போது பிகில் !   

  
              தலைவா படத்துக்கு ஏற்பட்ட சிக்கலை அடுத்து கொஞ்ச காலம் அரசியலே வேண்டாம் என அமைதியாக தனது தொழிலை மட்டும் கவனித்து வந்தார் விஜய். இந்த நிலையில், தற்போது கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மீண்டும் அரசியல் செய்ய துணிந்திருக்கிறார் நடிகர் விஜய். அதன் வெளிப்பாடுதான் பிகில் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் அதிமுக ஆட்சியையும் அதன் தலைவர்களையும் மறைமுக விமர்சித்திருப்பது. 
 

         நடிகர் விஜய்யின் பேச்சு ஆளும் கட்சியை கடுப்பாக்க, ஜெ.பாணியில் பிகில் படத்துக்கு சிக்கலை உருவாக்க அனைத்து செயல்திட்டங்களையும் போட்டுக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. பிகில் படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மூலம் பிரச்சனை ஏற்படுத்த காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் அரசாங்கத்தை எப்படி பகைத்துக்கொள்வது என்கிற எண்ணம் வந்திருக்கிறது. இதனையடுத்து பல கட்ட ஆலோசனைகள் அவர்கள் தரப்பில் நடந்து வருகின்றன. மேலும், சென்சார் போர்டிலும் ஆளும் தரப்பு மூக்கை நுழைத்திருக்கிறது. இதனால் 8.10.2019 வரை சென்சார் செய்வதற்கான பட்டியலில் பிகில் படம் இடம்பெறவில்லை. இதனால் நொந்து போயிருக்கும் நடிகர் விஜய், திட்டமிட்டபடி பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில்தான் தனது கௌரவம் இருப்பதாக சொல்லி வருகிறாராம்.



 

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.