Skip to main content

"அவன் கை, கால ஒடச்சு... படுக்க வைக்கணும்" என ஆவேசமாக பேசிய பிக் பாஸ் மீரா மிதுன்!

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

அ.அருண்பாண்டியன்


விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே ஏகப்பட்ட களேபரங்களும் பரபரப்பு சம்பவங்களும் நடக்கிறதென்றால், அந்த வீட்டிலிருந்து வெளியே வரும் அல்லது வெளியேற்றப்படும் நடிகைகளால், ஏற்படும் பரபரப்புகள் அதிர்ச்சியாக இருக்கிறது.

போன வாரம் மதுமிதா என்றால், இந்த வாரம் மீரா மிதுன். இப்போது நடந்து கொண்டிருக்கும் பரபரப்பு சம்பவத்தின் ஃப்ளாஷ்பேக் இது. மிஸ் தமிழ்நாடு, மிஸ் சௌத் இந்தியா என ரகம் வாரியாக அழகிப் போட்டியை நடத்துபவர், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர். இவரது அலுவலகம் எழும்பூரில் உள்ளது. மாடலிங் துறையிலும் சில சினிமாக்களிலும் நடித்திருக்கும் மீரா மிதுன் என்பவர் "மிஸ் சௌத் இந்தியா 2016' பட்டத்தை வெல்கிறார். 2017-ல் ஜோ மைக்கேலின் நட்பு கிடைக்கிறது மீரா மிதுனுக்கு. பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில், ஜோ மைக்கேலைவிட்டுப் பிரிந்து தனியாக அழகிப் போட்டி நடத்தும் முயற்சியில் இறங்கினார் மீரா மிதுன். இதனால் கடுப்பான ஜோ, அழகிப் பட்டம் தருவதாகச் சொல்லி ஏகப்பட்ட இளம் பெண்களிடம், மீரா மிதுன் பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டார். எனவே அவர் நடத்தும் அழகிப் போட்டிக்கு தடை விதிப்பதோடு, அவரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

 

meera mithun issues



போலீசின் எச்சரிக்கையால் அழகிப்போட்டி ரத்தானதால் டென்ஷனான மீரா மிதுன், ஜோ மைக் கேல் ஒரு ஃப்ராடு. அவர்தான் பல பெண்களிடம் வசூல்செய்து ஏமாற்றி விட்டார். ரவுடிகளை வைத்து என் னை மிரட்டினார்'' என கமிஷனர் ஆபீஸ் வாசலிலேயே ஆவேசமாக பேசினார். "விடுவேனா நான்' என களம் இறங்கிய ஜோ, மீரா மிதுனுக்கு கொடுத்த அழகிப் பட்டத்தைப் பறித்து, அதே போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாடலிங் நடிகையான சனம் ஷெட்டிக்கு கொடுத்தார். இப்படி மீரா மிதுனும் ஜோ மைக்கேலும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறிக் கொண்டிருந்த போதுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியானார் மீரா மிதுன். அப்போதும் விடாத ஜோ மைக்கேல், போலீசுக்கு பிரஷ்ஷர் கொடுக்க, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போலீஸ், விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டுத் திரும்பியது. இதனால் ஜூலை28—ஆம் தேதியன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். இவரின் வெளியேற்றத்தால் மிகவும் சந்தோஷப்பட்டவர், அதே பிக்பாஸ் வீட்டிலிருக்கும் தர்ஷன்தான். மீரா மிதுனிடமிருந்து அழகிப் பட்டத்தை வாங்கிய சனம் ஷெட்டியின் லவ்வர்தான் தர்ஷன்.

 

meera



பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு ஒரு மாதம் கழிந்த நிலையில், ஜோ மைக்கேலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மீரா மிதுன் மீது எழும்பூர் போலீஸ் இப்போது எஃப்.ஐ.ஆர். போட்டுள்ளது. என்ன பண்ணிவச்சிருக்கான் ஜோ மைக்கேல். என்னைப் பத்தி தப்புத் தப்பா பேசியிருக்கான். அவன ஆள வச்சு தூக்கு அவ்வளவுதான். இதுக்கு மேல என்னால முடியல, அவன் கை, கால ஒடச்சு ஆறு மாசம் ஆஸ்பிட்டல்ல படுக்க வைக்கணும்'' இப்படி கோபாவேசமாக மீரா மிதுன் பேசிய ஆடியோதான் வைரலாகி, போலீஸ் எஃப்.ஐ.ஆர். போடும் அளவுக்குப் போயுள்ளது.

 

meera mithun



மீரா மிதுனின் இந்தப் பேச்சின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி தேசிய பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி இருப்பதால் கூடுதல் பரபரப்பாகியுள்ளது. காரணம் அப்சரா ரெட்டியும் ஜோ மைக்கேலும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வேறு நிறுவனத்திற்குச் சென்றுவிட்டார் ஜோ மைக்கேல். அந்த நிறுவனத்தில் ஜோ மைக்கேலுக்கு கிடைத்த மரியாதையால் எரிச்சலான அப்சரா, தனது அரசியல் செல்வாக்கால் அந்த நிறுவனத்தையே சொந்தமாக்க முயன்றார். அதில் தோல்வி அடைந்ததால் தனக்கும் தனது தாயாருக்கும் ஜோ மைக்கேல் கொலை மிரட்டல் விடுத்ததாக நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்தார்.


உடனே களத்தில் இறங்கிய சப்- இன்ஸ்பெக்டர் பிரபு, ஜோ மைக்கேலை கைது பண்ணி உள்ளே தள்ளியதோடு,  எதுக்கு அடம்பிடிக்கிற, மேடம் சொல்ற மாதிரி அந்த கன்சர்னை எழுதிக் கொடுத்துரு என டீல் பேசியுள்ளார். ஆனால் அதற்கும் அசராத ஜோ மைக்கேல் ஜாமீனில் வெளியே வந்த பிறகுதான், அப்சரா ரெட்டியின் கைங்கர்யம் தெரிகிறது. இதன்பின் மீரா மிதுனுடன் ஜோவுக்கு பழக்கம் ஏற்பட்டு, பணப் பரிவர்த்தனை நடக்கிறது. அழகிப் போட்டி நடத்திய வருமானத்தில் பங்கு போடும்போது பிரச்சனை ஏற்பட்டதால் அப்சரா ரெட்டியின் உதவியை நாடியிருக்கிறார் மீரா மிதுன்.

இது குறித்து அப்சரா ரெட்டியிடம் நாம் கேட்டபோது,  அந்த ஆடியோவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் மீது அவதூறு கிளப்புகிறார்கள்'' என்றார். "நான் எதார்த்தமாக பேசியதை இப்போது பெரிதாக்கி, என்னைக் களங்கப்படுத்துகிறார் ஜோ மைக்கேல்'' என்கிறார் மீரா மிதுன்.

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.