Skip to main content

நக்கீரன் படங்களை காட்டி கலங்கிய பென்னிக்ஸ் சகோதரி... "நான் இருக்கிறேன்'' என நம்பிக்கை அளித்த ராகுல்...

Published on 08/03/2021 | Edited on 11/03/2021

 

rahul

 

பிப்ரவரி மாதக் கடைசியில் தென்தமிழகத்தில் ராகுல்காந்தி மக்களைச் சந்திப்பதாக தகவல் வர, நெல்லை மாவட்ட செவல்பண்ணையார் தொடங்கி ஆளாளுக்குத் தங்கள் விருந்து தரும் விருப்பங்களை ராகுலிடம் மின்னஞ்சலில் தெரிவித்த வண்ணமிருக்க, "உங்கள் வருகையின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்களை சந்திக்கலாமே..?'' என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா மின்னஞ்சலை அனுப்பிவைக்க, ராகுலின் வருகையில் அவசர அவசரமாக சாத்தான்குளம் பகுதி சேர்க்கப்பட்டது.

 

ராசியான கல்லூரி

 

இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமையன்று தூத்துக்குடி வாகைக்குள விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல்காந்தி, தென்மாவட்டங்களிலுள்ள வழக்கறிஞர்களைச் சந்திக்க தூத்துக்குடி வஉசி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், "நிலைநாட்டுவோம்! தேசத்தைக் காப்பாற்றுவோம்'' என்ற பெயரில் வழக்கறிஞர்களுடன் சிறப்பு கலந்துரையாடலை நிகழ்த்தினார்.

 

"நாட்டின் முக்கியமான அமைப்புகள்மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி அமைப்பைச் சீர்குலைத்து அழித்துவருகின்றனர். இதுகுறித்து பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எம்.எல்.ஏ.க்களை கட்சிதாவச் சொல்லி மிரட்டல் நடக்கிறது. எம்.எல்.ஏ. கட்சி தாவ மறுத்தால் மிகமோசமான நெருக்கடி கொடுக்கப்படுகிறது'' எனவும் சீனாவின் இந்திய ஆக்ரமிப்பையும் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார்.

 

நேரு குடும்பத்திற்கு ராசியான கல்லூரியாக வ.உ.சி. கல்லூரி கருதப்பட்டதால் முதல் நிகழ்ச்சியை அங்கேயே ஆரம்பித்தனர்.

 

அடுத்ததாக குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலையணித்துவிட்டு, கோவாங்காடு பகுதியிலுள்ள உப்பளத் தொழிலாளர்களை சந்திக்கச் சென்றார் ராகுல். அங்குள்ள பெண்களோ குலவையிட்டு ராகுலை வரவேற்க, "எனக்கு உங்களைப்போல் குலவையிடத் தெரியாது. இப்பொழுது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனாவிற்கு தடுப்பு மருந்தாக கண்டுப்பிடிக்கப்பட்ட கோவாக்சின் மருந்தில் உப்பு உள்ளது. எனவே கரோனா மருந்தை உட்கொள்ளும் போதாவது அத்தனை பேரும் இந்த உப்பளத் தொழிலாளர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்'' என்றார். பிரதமர் ஆனபிறகு மதுவை ஒழிக்க முதல் கையெழுத்து இட வேண்டும் என உப்பளத் தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தனர்.

 

பெர்சிக்கு நம்பிக்கையளித்த ராகுல்!

 

கோவாங்காட்டிலிருந்து புறப்பட்ட ராகுலின் வாகனம் ஆத்தூர், குரும்பூர் ஆகிய ஊர்களைக் கடந்து சாத்தான்குளம் நோக்கிச் செல்கையில், நாசரேத்திலுள்ள 92 வருட பழமையான புனித யோவான் பேராலாயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அங்கிருந்து புறப்பட்ட ராகுலின் வாகனம் அதற்கடுத்ததாக வள்ளியம்மாள்புரத்திலுள்ள டீக்கடையில் நிற்க, பாதுகாப்பு பிரிவினர் பதைபதைத்து செய்வதறியாது திகைத்துநின்ற அவ்வேளையில், அந்த சாலையோரக் கடையில் டீ குடித்து மகிழ்ந்தார்.

 

rahul

 

அங்கிருந்து புறப்பட்ட ராகுலின் வாகனம் சாத்தான்குளத்திலுள்ள காமராஜர் சிலை முன்பு நிறுத்தப்பட்ட நிலையில், பிரச்சார வாகனத்தின் மேலிருந்தே உரையாற்றத் தொடங்கினார். "தமிழக முதல்வர் மக்களுக்காகச் செயல்படுவதில்லை. அவர் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறார். அவர் ஊழல் செய்யத் தொடங்கியதிலிருந்து மோடியிடம் மண்டியிட்டுள்ளார். ஒரே மொழி, ஒரே பாரம்பரியம் என்பதை மோடி வலியுறுத்துகிறார். தமிழக பாரம்பரியம் இந்திய பாரம்பரியம் இல்லையா..? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குங்கள் அல்லது நாற்காலிகளைக் காலிசெய்யுங்கள். ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரைப் பற்றி மோடிக்கோ தமிழக முதல்வருக்கோ அக்கறை இல்லை'' என பொரிந்து தள்ளினார்.

 

சாத்தான்குள காவல் நிலைய போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலையுண்ட ஜெயராஜின் மகள் பெர்சியை சந்திக்க வாகனத்திலிருந்து கீழே இறங்கினார். வாகனத்தைவிட்டு வந்த ராகுலிடம், ஜெயராஜும், பென்னிக்ஸும் உடலெங்கும் காயத்துடன் இருக்கும் போஸ்ட்மார்ட்டம் படங்களைத் தாங்கிய 'நக்கீரன் இதழ்' பெர்சி கையால் கொடுக்கப்பட, பெர்சியின் தோளில் கைவைத்து, "வழக்கின் நிலை என்ன..?'' எனக் கேட்டறிந்து, "நான் இருக்கிறேன்'' என நம்பிக்கையளித்தார்.

 

மோடியைப் பார்த்தால் வேடிக்கையா இருக்கு!

 

முதல் நாள் வருகையின் நிறைவாக, "வாங்க, ஒரு கை பார்ப்போம்!'’ என்ற பெயரில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மைக் பிடித்த ராகுல், "தமிழகத்திற்கு வருகை தருவதென்றாலே எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்தியா எப்படி வருங்காலத்தில் இருக்க வேண்டும் என்பதை தமிழகம்தான் சுட்டிக்காட்டப் போகிறது. இந்தியாவிற்குத் தமிழகமும் தமிழர்களும்தான் வழிகாட்டுவார்கள்.

 

பிரதமர் குறித்து பேச எனக்குப் பயமில்லை. அவரைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக உள்ளது. நான் நேர்மையானவன். மக்கள் மத்தியில் மோடியின் செயல்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. மாறாக, என்னைப் பற்றியே 24 மணி நேரமும் நினைத்துக்கொண்டிருக்கிறார் மோடி. தமிழக முதல்வரும் இரவு நேரத்தில் நிம்மதியாகத் தூங்கமுடியாது. ஏனென்றால் அவர் நேர்மையற்றவர். அதனால் மோடியை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை'' என முடித்துக்கொண்டார்.

 

நெல்லையப்பர் கோவில் சாமி தரிசனம் உட்பட ராகுலின் தென்தமிழகப் பயணம் காங்கிரசாரை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

 

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

கண்ணீர் மல்க ஆதங்கப்பட்ட பட்டியலின பெண்; ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்திற்கு நுழைந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், புந்தேல்கண்டி பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள பட்டியலின பெண்களிடம் உரையாடினார். அது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பட்டியலின பெண் ஒருவர், ‘எங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். செருப்பு அணிந்து நாங்கள் கிராமத்திற்கு நுழைந்தால் எங்களை கெட்ட சகுணம் என கூறுவார்கள். செருப்பு அணிந்து ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்? என கேட்பார்கள். தண்ணீர் இறைக்க கிணற்றுக்குள் சென்றால், மணிக்கணக்கில் காத்திருக்கச் சொல்வார்கள். தூரமாகச் சென்று உட்காரு என துரத்துவார்கள். எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள்’ என்று கூறிய உடனே, ‘யார் உங்களை இப்படிச் செய்கிறார்கள்?’ என ராகுல் காந்தி அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த பெண், ‘உயர்சாதியைச் சேர்ந்த மக்கள்தான். பிராமணர்கள், தாக்கூர், அகிர் சமூகத்தினர். எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள். 

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

திருமணத்திற்கு அழைப்பார்கள். ஆனால், குப்பை தொட்டி அருகே எங்களை அமரச் சொல்வார்கள். இல்லையென்றால், கால்வாய் அருகே அமர வைப்பார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது?. எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது. இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கிக்கொண்டோம். ஆனால், எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. இது சுதந்திர நாடு எனச் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும், மிகவும் சோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன். இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன்’ என்ற கூறி தனது செருப்பை கையிலேயே வைத்திருந்தார்.

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

உடனடியாக ராகுல் காந்தி, அந்த பெண் கையில் வைத்துக்கொண்டிருந்த செருப்பை வாங்கி, ‘நீங்கள் அணிந்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி அந்த பெண்ணுக்கு செருப்பை போட்டுவிட்டார். இதனை கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள், கைகளை தட்டி வரவேற்றனர். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.