bagath singh

1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி மாலை ஐந்து மணி.....

Advertisment

தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது வக்கீல் பிராணநாத் மேத்தா வாங்கிக்கொண்டு வந்த புத்தகத்தை அன்று பிற்பகல் மூன்று மணியளவில் பகத்சிங் படித்துக் கொண்டிருந்தார்.

விடிவதற்குள் படித்து முடித்துவிடவேண்டும் என்பது அவரது ஆசை. விடிந்து விட்டால் தனது வாழ்க்கை முடிந்து போய்விடும் என்பது அவருக்குத் தெரியும்.

Advertisment

இன்னும் புத்தகத்தில் மேலும் பல பக்கங்கள் இருக்கின்றன.

சிறைக்கொட்டடி கதவு திறந்தது. சிறை அதிகாரி அங்கே நின்று கொண்டிருந்தார்.

"சர்தார்ஜி! உங்களைத் தூக்கிலிடுவதற்கான உத்தரவு இதோ... தயவுசெய்து தயாராகுங்கள்''.

பகத்சிங் வலதுகையிலே அந்த லெனின் புத்தகம். அதிலிருந்து பார்வையை அகற்றாமலே பகத்சிங் சொன்னார். "ஒரு புரட்சியாளன் மற்றொரு புரட்சியாளனைச் சந்திக்கிறான்.''

மேலும் சில வரிகளைப் படித்துவிட்டு பகத்சிங் சொன்னார் :"சரி... நாம் போகலாம்.''

தூக்குமேடையை நோக்கி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்றனர்.

"இன்குலாப்- ஜிந்தாபாத்' என்ற தங்கள் போர்க்கள முழக்கத்தை அவர்கள் முழங்கிக்கொண்டே சென்றனர்.

சிறைச்சாலையிலிருந்து இதர அனைத்து விதமான கைதிகளும் இந்த முழக்கத்துக்கு "இன்குலாப்- ஜிந்தாபாத்' என பதில் முழக்கம் செய்து தங்கள் அன்பிற்குரிய மூன்று தோழர்களுக்கு விடைகொடுத்தனர்.

பலிபீடத்தை நெருங்கியபோது அவர்களிடம் தங்கள் முகங்களை மூடிக்கொள்ள கறுப்புத் துணிகளை அதிகாரிகள் கொடுத்தனர்.

அந்த வீர இளைஞர்கள் அந்தக் கறுப்புத் துணியை தூக்கி வீசியெறிந்து விட்டு தூக்கு மேடையை நோக்கி, முன்னேறினர்.

முகம் தூக்கி நடைபிறழாமல் தூக்கு மேடை ஏறினர். தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர்.

"ஏகாதிபத்தியம் ஒழிக''

"இன்குலாப் - ஜிந்தாபாத்''

இவர்களது உரத்த குரலுக்கு சிறையிலிருந்த அனைத்து கைதிகளும் அங்கேயிருந்து பதில் குரல் கொடுத்தனர்.

"இன்குலாப்- ஜிந்தாபாத்''

தூக்குக் கயிற்றில் தொங்கியபோது அவர்கள் கண்கள் அக்னி புஷ்பங்களாகக் காட்சியளித்தன'' என்கிறார் அரந்தை நாராயணன்.