Advertisment

'அயோத்தியில் என்ன நடந்தது... எப்போது நடந்தது..' - வரலாறு ஒரு மீள்பதிவு!

1528: அயோத்தியில் முஸ்லிம் மன்னர் பாபர் ஒரு மசூதியை காட்டுகிறார். அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்துத்துவ அமைப்பினர் உரிமை கோரினார்கள்.

Advertisment

1853: இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அந்த இடத்தை இருபிரிவுகளாக பிரித்து உட்பகுதியை இஸ்லாமியர்களுக்கும், வெளிப்பகுதியை இந்துத்துவ அமைப்பினருக்கும் ஒதுக்கியது பிரிட்டிஷ் அரசு.

Advertisment

1949: சுதந்திரத்துக்கு பிறகு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படவே, இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து அது பிரச்னைக்குரிய இடம் என்று அறிவித்த மத்திய அரசு அந்த இடத்தை பூட்டி சீல் வைத்தது.

1950: ராமர் சிலைக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கவேண்டும் என இரண்டு மனுக்கள் இந்து அமைப்பினர் பைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

fd

1961 : உத்திரபிரதேச சன்னி வக்ப் வாரியத்தின் சார்பில் இடத்தைத் தங்களிடம் அளிக்கக்கோரியும் அங்குள்ள சிலைகளை அகற்றவேண்டும் என்றும் கோரியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

1986 : அயோத்தியில் பிரச்னைக்குரிய இடத்தின் கதவுகளின் பூட்டை அகற்றவும், ராமர் சிலைக்கு பூசைகள் செய்யவும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1992: இந்துத்துவ கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடு முழுதும் மோதல்கள் ஏற்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

2001 : பாபர் மசூதி இடிப்பு மற்றும் வன்முறை குறித்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட அத்வானி, கல்யாண் சிங் உள்பட 13 பேரை விடுவித்தது. வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்தது.

2010 : அயோத்தி விவகாரத்தில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழங்கிய தீர்ப்பில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை ராமர் கோவிலுக்கும், ஒரு பங்கு இடத்தை வக்ப் வாரியத்துக்கு வழங்கி தீர்ப்பளித்தது.

2011 : இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

2017 : ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

2019 மார்ச் 8 : இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிடம் பேசி முடிக்க நடுவர் குழுவுக்கு எட்டு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2019 ஆகஸ்ட் 1 : நடுவர் குழு தந்தது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

2019 ஆகஸ்ட் 2 : அயோத்தி விவகாரத்தில் நடுவர் குழு சரியான தீர்வை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

2019 நவம்பர் 9: இந்த நிலையில் நூற்றாண்டுகளாக தீர்க்க முடியாமல் இருக்க கூடிய இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ayodhya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe