Skip to main content

'அயோத்தியில் என்ன நடந்தது... எப்போது நடந்தது..' - வரலாறு ஒரு மீள்பதிவு!

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

1528: அயோத்தியில் முஸ்லிம் மன்னர் பாபர் ஒரு மசூதியை காட்டுகிறார். அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்துத்துவ அமைப்பினர் உரிமை கோரினார்கள்.

1853: இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அந்த இடத்தை இருபிரிவுகளாக பிரித்து உட்பகுதியை இஸ்லாமியர்களுக்கும், வெளிப்பகுதியை இந்துத்துவ அமைப்பினருக்கும் ஒதுக்கியது பிரிட்டிஷ் அரசு.

1949: சுதந்திரத்துக்கு பிறகு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படவே, இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து அது பிரச்னைக்குரிய இடம் என்று அறிவித்த மத்திய அரசு அந்த இடத்தை பூட்டி சீல் வைத்தது.

1950: ராமர் சிலைக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கவேண்டும் என இரண்டு மனுக்கள் இந்து அமைப்பினர் பைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
 

fd



1961 : உத்திரபிரதேச சன்னி வக்ப் வாரியத்தின் சார்பில் இடத்தைத் தங்களிடம் அளிக்கக்கோரியும் அங்குள்ள சிலைகளை அகற்றவேண்டும் என்றும் கோரியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

1986 : அயோத்தியில் பிரச்னைக்குரிய இடத்தின் கதவுகளின் பூட்டை அகற்றவும், ராமர் சிலைக்கு பூசைகள் செய்யவும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

1992: இந்துத்துவ கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடு முழுதும் மோதல்கள் ஏற்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

2001 : பாபர் மசூதி இடிப்பு மற்றும் வன்முறை குறித்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக கூறப்பட்ட அத்வானி, கல்யாண் சிங் உள்பட 13 பேரை விடுவித்தது. வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்தது.

2010 : அயோத்தி விவகாரத்தில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழங்கிய தீர்ப்பில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை ராமர் கோவிலுக்கும், ஒரு பங்கு இடத்தை வக்ப் வாரியத்துக்கு வழங்கி தீர்ப்பளித்தது.

2011 : இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

2017 : ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்னை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியில் பேசி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

2019 மார்ச் 8 : இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிடம் பேசி முடிக்க நடுவர் குழுவுக்கு எட்டு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2019 ஆகஸ்ட் 1 : நடுவர் குழு தந்தது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.

2019 ஆகஸ்ட் 2 : அயோத்தி விவகாரத்தில் நடுவர் குழு சரியான தீர்வை அடையாமல் தோல்வி அடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

2019 நவம்பர் 9: இந்த நிலையில் நூற்றாண்டுகளாக தீர்க்க முடியாமல் இருக்க கூடிய இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை  இன்று வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அயோத்தியில் கேஎஃப்சி உணவகம் வைக்க அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Permission to set up a KFC restaurant in Ayodhya and condition

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க வருவதால், அவர்களின் வசதிக்காக உள்ளூர் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறப்பதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. அதே வேளையில், அந்த கோவிலைச் சுற்றியுள்ள 15 கி.மீ வரை அளவிலான இடத்தை சுற்றி அசைவ உணவகங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் இருந்து 15 கி.மீ சுற்றளவில் அமைக்கப்படும் பன்னாட்டு நிறுவனமான கேஎஃப்சி உணவகம் போன்ற பன்னாட்டு உணவகத்தில், அசைவ உணவகம் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகங்களில் சைவ உணவுப் பட்டியல் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை - அயோத்தி இடையே நேரடி விமான சேவை!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Direct flight service between Chennai - Ayodhya

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பகத்ர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும்  ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று (01.02.2024) முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை - அயோத்தி, அயோத்தி - சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. சென்னையில் இருந்து அயோத்திக்கு நண்பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 03.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும்.

அதே விமானம் மறுமார்க்கமாக மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 06.20 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த விமானம் போயிங் 737-8 வகை விமானம் என்பதால் ஒரே நேரத்தில் 180க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.