Skip to main content

அத்திவரதருக்காக இரவு பகலாக பணியாற்றும் கண்ணுக்குத் தெரியாத தொழிலாளர்கள்...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வதால் அந்த சிறிய நகரம் திணறுகிறது. போலீசார் பெரும்பாடு படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் திக்குமுக்காடுகிறது. 
 

நாற்பது ஆண்டுகள் கழித்து தண்ணீரில் இருந்து வெளியே வரும் அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்று தினந்தோறும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் குவிக்கின்றனர். அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் நம் கண்ணுக்குத் தெரியாத பலர் அத்திவரதர் தரிசன நாட்களில் பணியாற்றி வருகின்றனர். 
 

தினந்தோறும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவதால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை நகராட்சி தொழிலாளர்கள் அகற்றுகின்றனர். இந்தப் பணியில் அவர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள், குளியல் அறைகள் போன்றவற்றையும் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்னர். மேலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளிலும், பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 


 

athi_varadar_darshan_kanchipuram fff


பக்தர்கள் வருவதற்கு ஒரு வழி, திரும்ப செல்வதற்கு ஒரு வழி என்பதால் இரு பாதைகளிலும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் வரும் பக்தர்கள் காலணிகளை விட்டு செல்வதால் இதுவரை 3 டன் அளவுக்கு அவை குவிந்துகிடந்தது. இவற்றை அகற்ற அவர்கள் பெரும்பாடுபட்டனர். 
 

காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள கூட்ட நெரிசலில் தண்ணீர் லாரி வருவது மிகவும் சிரமம். பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளுக்கு இரவு 12 மணிக்கு மேல் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவருவதற்கு அந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்காக ஆர்வோ வாட்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


 

24 மணி நேரமும் மின்சாரம் தொடர்ந்து இருப்பதற்கு மின்சாரத்துறை பணியாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 8 யூனிட்டாக பிரிந்து பணியாற்றி வருகிறார்கள். மேலும் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் காஞ்சிபுரம் எல்லையில் நிறுத்தப்படுவதால் உள்ளூர், வெளியூர் வாகனங்களை ஏற்பாடு செய்து பொதுமக்கள் கோவில் அருகில் கொண்டுவந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மினிபஸ்களும் விடப்பட்டுள்ளது. 
 

மேலும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் செல்வதற்கான பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தன்னார்வலர்களும் பக்தர்களின் உதவிக்காக சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார்.


 

athi_varadar_darshan_kanchipuram



திருப்பதியில் தினந்தோறும் கூட்டம் வரும். அதற்கு தனி பாதுகாப்பு அதிகாரிகள் என நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். நம்ம ஊரில் ஒரு நாள் திருவிழா, இரண்டு நாள் திருவிழா என நடக்கும். அதற்கே போலீசார் திணறுவார்கள். ஆனால் இங்கு தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரு சிறிய நகரத்தில் குவிவதால் கலெக்டர் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செல்வது மிகப்பெரிய கஷ்டம். ஆகையால் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்று வருவதால், எந்த கலெக்டருக்கும் இதுபோன்ற கூட்டத்தை சமாளிக்கும் அனுபவம் இருந்திருக்காது என்கின்றனர் காஞ்சிரத்திற்கு வரும் பக்தர்கள். மேலும் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். 


 

எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் பரிந்துரை கடிதங்கள் கலெக்டர் ஆபிசில் குவிகிறது. டோனர் பாஸ், விவிஐபி பாஸ்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் கமிசன் அடிக்கப்படுவதாகவும் புகார் கிடைக்க கலெக்டர் பொன்னையா இதுபற்றி ஆய்வு செய்தார். இருப்பினும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது. 
 

திருவள்ளூர் மாவட்ட ஏஎஸ்பி சந்திரசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களை சைரன் காரில் அழைத்து வந்து, சாமி தரிசனம் செய்ய வைப்பதும், தனி வசூல் நடப்பதும் கலெக்டருக்கு தெரிய வந்ததும், கோவில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடாது என ஏஎஸ்பி வெளியேற்றப்பட்டார்.  மேலும் சில விஜபிக்கள் வரும்போது சரியாக ஏற்பாடு செய்யவில்லை என்று மாவட்ட நிர்வாகம் மீது சிலர் குறை சொல்லி வந்தனர். எல்லா கேள்விகளும் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை நோக்கி பாய்ந்ததால், அவர் ஆய்வில் ஈடுபட்டார்.


 

athi_varadar_darshan_kanchipuram ccc


அப்போது காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவர் தன்னுடன் சிலரை நேரடியாக அழைத்துச் சென்றதால், அவரிடம் கோபத்தை காட்டியுள்ளார் கலெக்டர் பொன்னையா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 
 

இதனால் கோபம் அடைந்த காவல்துறையினர், இரவு பகல் பாராமல் இயற்கை உபாதைகள் கழிக்க வழியில்லாமல் ஆண் - பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலெக்டர் இப்படி பேசலாமா என்று கண்டித்தனர். 
 

அதே நேரத்தில் டோனர் பாஸை போலீஸ் கிழித்ததால் ஒரு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோயில் உள்ளே உள்ள மருத்துவக்குழுவினரின் பாஸ் கிழித்ததை கண்டித்து சுகாதார துறையினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நடுரோட்டில் ஆட்டோவை விறகு கட்டையால் தாக்கியதில் ஆட்டோவே சேதமானது, ரோட்டில் கடை வைத்திருந்த நரிக்குறவரை போலீஸ் தாக்கிய வீடியோவும் வைரலானது. 
 

40 நாட்களுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரு சிறிய நகரத்தில் குவிவதால் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். ஊர்கூடி இழுத்தால்தான் தேர் அதன் இடத்திற்கு சென்று அடையும் என்பார்கள். அதைப்போல மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். 

 


 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.