Skip to main content

"ஓபிஎஸ் யூகிக்க முடியாத மர்மமான மனிதர்... அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரே.." - ஓபிஎஸ் பற்றி அஸ்பியர் சுவாமிநாதன்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

dfhg


அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு அதன் முதல் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகாலம் அதில் முதன்மையாகப் பணியாற்றிவந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், தற்போது அதிமுகவில் நடைபெற்றுவரும் பிரச்சனைகளை பற்றி என்ன நினைக்கிறார் என்று அறிந்துகொள்ளும் பொருட்டு அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

சமீபத்தில் சசிகலா விவகாரம் தொடர்பாக பேசிய ஓ. பன்னீர்செல்வம், "சசிகலாவை இணைப்பது என்பது கட்சி நிர்வாகிகள் இணைந்து எடுக்க வேண்டிய முடிவு, தலைமை அது தொடர்பாக முடிவெடுக்கும்" என்றார். பன்னீர்செல்வத்தின் இந்தப் பேச்சுக்கு கட்சியிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் சற்று கடுமையாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள், பன்னீர்செல்வத்தின் மனதில் என்ன இருக்கிறது? 

 

ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு என்ன என்பது அவர் ஒருவருக்கு மட்டும்தான் தெரியும். அவரைக் கணிக்க யாராலும் முடியாது. அவருடன் நெருங்கி பயணித்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன், அவர் என்ன நினைக்கிறார் என்பது அவர் சொல்லும்வரை யாருக்கும் தெரியாது, புரியாது என்பதே என்னுடைய கணிப்பு. அவர் ஒரு யூகிக்க முடியாத, மர்மமான மனிதராகத்தான் இருந்துவருகிறார். சசிகலா பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டபோது கூட அவர் இதே பதிலைத்தான் கூறினார். நான் கூட, “அண்ணே தலைமை என்றால் நீங்கள்தானே” என்று கேட்டேன். அவர், “இல்லை தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் தன்னுடைய முடிவில் மாறுபட்டு பேசுவதில்லை, தொடர்ந்து ஒரே நிலையில் அவர் இருந்துவருகிறார். ஆனால் நமக்கு அவர் எந்த தெளிவான பதிலும் கூறமாட்டார். நாம் இதுவா இருக்குமோ, இல்லை அதுவா இருக்குமோ என்று குழம்பிப்போய் இருக்க வேண்டியதுதான்.

 

அதிமுக, ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்தது, இரட்டை தலைமையில் தற்போது எப்படி செயல்படுகிறது? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

 

ஜெயலலிதா இருந்தபோது மிகவும் கட்டுப்பாட்டோடு, கட்சியினர் பொறுப்புடன் செயல்பட்டுவந்தனர். ஆனால் தற்போது கட்சி அப்படி செயல்படவில்லை. ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன். ஜெயலலிதா இருந்தபோது கட்சித் தலைமை ஒரு கூட்டத்தை அறிவித்தால் சில தினங்களில் மாவட்டச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட நபரை தொலைப்பேசியில் அழைத்து, எப்போது வருகிறீர்கள், எதில் வருகிறீர்கள் என அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். ஆனால் தற்போது, இவர்கள் கூட்டத்தை அறிவிக்கிறார்கள். இவர்கள் கூறிய இடத்தில் போராட்டம் நடந்ததா இல்லையா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. எனக்கே அந்த மாதிரியான இக்கட்டான நிகழ்வு நடைபெற்றுள்ளது. மாயவரத்தில் கூட்டம் என்று சென்றுவிட்டேன், ஆனால் என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை. நானே கூட்டம் நடைபெறும் இடத்திற்கும் சென்றேன், யாரும் இல்லை. வந்தது வந்துவிட்டோம் என்று வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தேன். தற்போது போராட்டத்தை அறிவித்துவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். அதைப்பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. கட்சியினரும் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. 

 

தற்போது புகழேந்தி என்ற ஒருவரைக் கட்சியைவிட்டு நீக்கியுள்ளீர்கள். அவரை என்ன காரணத்திற்காக நீக்கியுள்ளனர் என்று யாருக்காவது தெரியுமா? பாமகவை பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டார் என்ற காரணத்திற்காக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதிமுகவில் தற்போது யாரும் தலைமைக்கு எதிராகப் பேசவில்லையா? அன்வர் ராஜாவில் ஆரம்பித்து ஆளுக்கொரு கருத்தை தெரிவித்துவருகிறார்கள். அவர்களை எல்லாம் நீக்க வேண்டியதுதானே, ஏன் நீக்கப் பயப்படுகிறீர்கள். பன்னீர்செல்வத்தை பலரும் விமர்சனம் செய்கின்றனர், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்பவர்கள் அடுத்த நொடியே நீக்கப்படுகிறார்கள் என்றால் கட்சியில் எந்த மாதிரியான, யாருக்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது புரியவரும். புகழேந்திக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பது எந்த வகையிலும் சரியாக இருக்காது. எனவே காலம் இவர்கள் அனைவருக்கு தகுந்த பாடத்தை எடுக்கும்" என்றார்.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.