Skip to main content

ஏழைகளின் சாப்பாட்டுக்கு வழி செய்தார்களா ஆட்சியாளர்கள்..? - பேராசிரியர் அருணன் கேள்வி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 

த



இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.  இதுவரை தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பேராசிரியர் அருணனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவரின் பதில்கள் வருமாறு, 

கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மத்திய அரசு வரும் 14ம் தேதி வரை ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஆனால் வேலை தேடி சென்ற தொழிலாளர்கள் பிற மாநிலத்தில் இருந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்படுவதை பார்க்க முடிகின்றது. தில்லியில் நடைபெற்ற அந்த வருத்தமான சம்பவத்தை சில தினங்களுக்கு முன்பு பார்த்தோம். இது பற்றிய தங்களின் கருத்து என்ன? 

தில்லியில் நடைபெற்ற அந்த காட்சி என்பது மிகவும் வருத்தமான ஒரு சம்பவம் ஆகும். ஊரடங்கு தற்போதைய சூழ்நிலையில் தேவையான ஒன்றுதான். ஆனால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு எப்படி உணவளிப்பது என்பதை அரசாங்கம் முன்கூட்டியே யோசனை செய்திருக்க வேண்டும். தில்லியில் பேருந்துகளுக்காக காத்திருந்தவர்கள் எல்லாம் அண்டை மாநிலமான, உ.பி மாநிலத்தையோ, ராஜஸ்தான் மாநிலத்தையோ சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும். 21 நாட்களுக்கு அவர்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி தான் இங்கு மிக முக்கியம். இப்போது அரசாங்கம் ஊழியர்களுக்கு இந்த 21 நாட்களுக்கும் சேர்த்தே நிறுவனங்கள் ஊதியம் தர வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளது. 

இதுமுதலில் சாத்தியமா என்று பார்க்க வேண்டும். இது நிரந்திர தொழிலாளர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் அன்றாடம் காட்சிகளாக இருக்கிறார்கள். அவர்கள் உணவிற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் உணவிற்கு தற்போது அல்லாட வைத்துள்ளார்கள். உணவில்லாமல் தான் அவர்கள் இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அதனால் தான் அவர்களை நோயை பற்றி கவலை படாமல் பேருந்துக்காக அடித்து மோதுகிறார்கள். கிடைக்கவில்லை என்றதும் நடை பயணமாகவே நடந்து அவர்கள் தங்களுடைய இடத்தை நோக்கி செல்கிறார்கள். ஏழைகளின் சாப்பாட்டிற்கு ஆட்சியாளர்கள் வழி செய்யவில்லை என்பதுதான் உண்மை நிலமை.  ஆயிரம் ரூபாய் நோட்டு, ஐநூறு ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு நிலமை இருக்கின்றது. 
 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.