Skip to main content

இறந்து போகும் மாணவர்களின் இடத்திற்கு யார் வருகிறார்கள்..? - வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019


சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவரின் குடும்பத்தினர் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக வழக்கறிஞர் அருள்மொழி பேசியதாவது, " ஒரு பக்குவப்பட்ட இந்த மாநிலத்தில் இந்த மாதிரியான தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பெண்ணின் அம்மா சொல்கிறார், தன்னுடைய மகளுக்கு அவளுடைய பெயரே பிரச்சனையாக இருந்துள்ளது என்று. அந்த பெண்ணுக்கு என்ன பெயர், பாத்திமானு பெயர் இருக்கு. பாத்திமானு இருக்கிற பெயர் எப்படி பிரச்சனை ஆக முடியும். அதற்கு ஏதாவது சாத்திய கூறுகள் இருக்கிறதா? பெயர் ஒரு இடத்தில் பிரச்சனை ஆகிறது என்றால் அதனை யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? சாதி ரீதியாக கொடுக்கப்பட்டிருந்த தாக்குதலை தற்போது மத ரீதியாக கொடுத்தால் அந்த சின்ன பசங்க என்ன ஆவார்கள். அவர்களால் அதனை தாக்குபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஐஐடி ரொம்ப காலமாக இருக்கிறது. தமிழக அரசுக்கு சொந்தமான வனத்துறை நிலத்தில்தான் அது உள்ளது. ஆனால் இந்த மாதிரியான தற்கொலைகள் கொஞ்ச நாட்களாக நடைபெற்று வருகிறது. அதுவும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி நாம் எல்லாம் அங்கே சென்ற பிறகுதான் நடைபெறுகிறது. நீ அங்கே வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்று சொல்கிற மாதிரியான தன்மையில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

KJ


 

தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்தமாதிரியான தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அதற்கான காரணங்களை இதுவரையில் யாராவது கண்டுபிடித்தார்களா? ஏன் அதுகுறித்து யாரும் பேசவில்லை. அவ்வாறு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் இடங்களுக்கு யார் வருகிறார்கள், இதை கண்டுப்பிடித்தாலே காவல்துறையினரின் வேலை வெகு சுலபமாகுமே? ஏன் அதனை கண்டுபிடிக்க தயங்குகிறார்கள். யாருக்காக பயப்படுகிறார்கள்.  அது மக்களின் வரி பணத்தில் நடக்கும் ஒரு நிறுவனம். அதற்கு குறிப்பிட்ட நபர்கள் உரிமை கொண்டாட முடியாது. இறந்தவர்கள் யாரும் சாதாரணமாக அந்த இடத்திற்கு வந்துவிட வில்லை. பாத்திமா அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்ததன் மூலமாகவே ஐஐடியில் சேர்ந்துள்ளார்.


வேறு மாநிலத்தை சேர்ந்தவர், அதுவும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அவள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த இடத்திற்கு வந்திருப்பாள் என்பது நமக்கு தெரியும். இன்னும் சிலர், இந்த மாதிரியான கல்வி நமக்கு தேவையா என்று கேள்வி எழுப்புகிறார்கள். பழமைவாதிகளின் கேள்விகளை எல்லாம் கடந்துதான் ஒரு இஸ்லாமிய பெண் படிக்க வருகிறாள். அந்த சமூக பெண்கள் படிக்க வருவது என்பதே மிகப்பெரிய சாதனையாக உள்ள நிலையில், அவர்களுக்கு இந்த மாதிரியான தொல்லைகளும் கல்வி நிறுவனங்களால் கொடுக்கப்படுகிறது. அதில் இருந்து தப்பித்து யார் எப்படி போனால் நமக்கென்ன என்று இருப்பவர்கள் படித்து வெளியே வரலாம். இல்லை என்றால் பாத்திமா நிலைமைதான் ஏற்படும் என்ற நிலையில்தான் தற்போது ஐஐடிகளில் சூழ்நிலைகள் நிலவுகிறது" என்றார். 

 

Next Story

“வெளியே சொல்லாததால் தடுக்க முடியவில்லை” - மாணவர்கள் மரணம் குறித்து ஐஐடி விளக்கம்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

IIT statement on students passed awaIIT statement on students passed awayy

 

சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், சென்னை ஐஐடியில் தரப்பில் இருந்து, “பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க முடிவதில்லை” என்று விளக்கம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

ஐ.ஐ.டி. இயக்குநர் தமிழக முதலமைச்சருடன் சந்திப்பு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

madras iit director meet tamilnadu chief minister for today

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (31/01/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் (சென்னை ஐ.ஐ.டி.) முனைவர் வி.காமகோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முதல்வர் பேராசிரியர் கோஷி வர்கீஸ், பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

கிராமப்புற மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. உடன் இணைந்து பயிற்சி வழங்குவது குறித்து முதலமைச்சருடன், ஐ.ஐ.டி. இயக்குநர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

 

பின்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, "சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இனிமேல் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். ஐ.ஐ.டி.யில் நேரடி வகுப்புகள் நடத்துவது பற்றி வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும். வருங்காலங்களில் விண்வெளி ஆய்வு, 6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றார்.