Skip to main content

"விஜய் செல்பி எடுத்து பந்தா காட்டுகிறார்..." - அர்ஜூன் சம்பத் பேச்சு!

Published on 13/02/2020 | Edited on 15/02/2020

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுடைய காரில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

ghj



சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சமீபகாலமாக அரசியல் நோக்கத்துடன் இத்தகைய வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக ஒரு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டு வருகின்றது. இதைபற்றி நீங்களும் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தீர்கள். இந்த சோதனையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

திரு ஜோசப் விஜய் அவர்களின் திருமணத்தின் போது நாங்கள் சில விமர்சனங்களை முன்வைத்தோம். திருமணம் செய்துகொள்வது அவரின் தனிப்பட்ட உரிமை. அவர் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த சங்கீதா என்ற சைவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கிருஸ்துவ மற்றும் இந்து உள்ளிட்ட இரண்டு வழிமுறைகளிலும் திருமணம் நடைபெற்றது. அவர் இந்து பெண்ணை திருமணம் செய்துகொண்டாலும், அவர் கிருஸ்துவராகவே அவர் வளர்க்கப்பட்டார். அவரின் அம்மா ஒரு இந்து பெண். அவரின் தந்தையார் ஒரு கிருஸ்துவர். இவர் இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு அவரின் பெயரை மாற்றி, அவரை மதம் மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது. இது அவருடைய தனிப்பட்ட விரும்பம் என்று நீங்கள் கேட்கலாம், தனிப்பட்ட விருப்பமாகவே இருந்தாலும் நாங்கள் விவேகானந்தர் வழியை பின்பற்றுபவர்கள். ஒருவர் இந்து மதத்தில் இருந்து மேறு மதத்திற்கு செல்கிறார்கள் என்றால் எண்ணிக்கை ஒன்று குறைகின்றது என்று நினைக்காதீர்கள், ஒரு புதிய எதிரி உண்டாகிறார்கள் என்று நினையுங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

அதனை நாங்கள் பின்பற்றுகிறோம். அதனால் நாங்கள் அவரை விமர்சனம் செய்கிறோம். பிகில் படம் வெளியான போது பிகில் செட் என்று அந்த படத்தில் அவர் போடுகின்ற ஆடை மற்றும் பொருட்களுடன் சிலுவை மாலையையும் விற்பனை செய்தார்கள். இந்த செட்டை வாங்கினால் டிக்கெட் இலவசம் என்று அறிவித்தார்கள். இதனை கண்டித்து நாங்கள் ருத்ராட்ச மாலைகளை வழங்கினோம். தற்போது விஜய் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் கிருஸ்துவ மதத்தை புரோமோட் செய்கிறார்கள். அதை நாங்கள் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். அதை தான் செய்து வருகிறோம்.  அதனால் தான் வருமானவரித்துறையினர் அவரை சோதனை செய்துள்ளார். பல முக்கிய ஆவணங்களை வீட்டில் இருந்து எடுத்து சென்று இருக்கிறார்கள். ரஜினிகாந்த் அவர்களிடமும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வருமான வரி சோதனை செய்யப்பட்டது. எனவே இந்த சோதனைகளில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அவருக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் கட்சியினர் அறிக்கை வெளியிடுகிறார்கள். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறார். இது எல்லாம் தேவையில்லாத விஷயம்.

நெய்வேலில் விஜய் படத்தின் சூட்டிங்கின் போது பத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியானது. அங்கு ஆயிரக்கணக்கான மக்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா?

என் பின்னால் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் காட்டுவதற்காக விஜய் செல்பி எடுத்து பந்தா காட்டுகிறார். அவருக்கு அனைத்து மதத்தினரும் ரசிகர்களாக இருக்கும் போது அவர் ஏன் பிகில் படத்தின் போது சிலுவையை போட்டால்தான் படத்திற்கு டிக்கெட் கிடைக்கும் என்று சொல்கிறார். தற்போது திமுக, காங்கிரஸ் கட்சியினர் விஜயை தங்கள் பக்கத்தில் இருப்பதை போன்று காட்டிக்கொள்வதற்காக அவருக்கு ஆதரவான பேட்டிகளை கொடுக்கிறார்கள். விஜய் தன்னுடைய ரசிகர்களை மதம் மாற்றிவிடுவாரோ என்று நாங்கள் பயப்படுகிறோம். திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் இதில் அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார்கள். எங்களுக்கும் விஜய்க்கும் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவரே தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் என்று லெட்டர் பேடில் போட்டுக்கொண்டுள்ளார். அதற்காக விஜயை பாராட்டுகின்றோம். அவருத்து நிறைய பேர் ரசிகராக இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி மதமாற்றிவிடாதீர்கள் என்று கேட்கிறோம். அதனால் தான் விஜயை பார்த்து பயப்படுகிறோம். 

 

 

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“விஜய் பயந்து போய்ட்டா என்ன பண்ண முடியும்” - சீமான் கேள்வி

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Seeman spoke about his political journey with Vijay

 

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாள் பெருவிழா நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டம். அது பட்டயம் கிடையாது. இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்க வேண்டும். எதார்த்தம் அதுதானே. சரத்குமார் சொல்வது சரிதானே. ரஜினிகாந்த் கூட ஆமாம் என்று தான் சொல்கிறார். அதை ரஜினிகாந்தே ஒத்துக்கொள்கிறார். 

 

2024 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா எனக் கேட்கின்றனர். அதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அன்று தான் யோசிக்கனும். விஜய்யின் ரசிகர்களை கவர்வதற்காக பேசுவதாகச் சொல்கிறார்கள். அது அப்படி இல்லை. சூர்யா, கார்த்திக் போன்றோருக்கு நெருக்கடி வரும்பொழுதும் பேசியுள்ளேன். 

 

நாங்க தனிச்சுப் போட்டியிட எப்பொழுதும் தயாராக உள்ளோம். பேரம் பேசுவோம். கூட்டணி பேசுவோம் என்ற சிந்தனை இல்லை. வந்தாலும் அதை அன்றைக்குத்தான் பேச வேண்டும். முதலில் விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டும். கொள்கையை முன்வைக்க வேண்டும். எனக்கு சில கொள்கைகள் உள்ளது. அது போல் அவருக்கும் கொள்கைகள் இருக்க வேண்டும். நான் அவரை அமர வைத்து விட்டு பிரபாகரன் வாழ்க எனச் சொல்லி விஜய் பயந்துவிட்டால் என்ன செய்வது.

 

நான் விஜய்யை சந்திக்கவில்லை. அவரது வீட்டு வாசலில் நடந்து போனேன். நானும் பாரதிராஜாவும் நடைபயணம் மேற்கொண்டுள்ள போது வாயிற்காவலரிடம் விஜய் உள்ளாரா எனக் கேட்பேன். இதுதான் நடந்தது” எனக் கூறினார்.