Skip to main content

அண்ணாமலை ஸ்கெட்ச்! கசியும் ராஜ்பவன் ரகசியங்கள்!

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Annamalai sketch! Leaked Raj Bhavan secrets!

என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றை நடத்திவருபவர் திவ்யா ஸ்வப்னா ராஜ். இவர், ஆளுநர் மாளிகையில் நடக்கும் மகளிர் தினம், பொங்கல் விழா, ஜி 20 மாநாடு, வள்ளலார் விழா, விருது வழங்கும் விழா என அனைத்து சிறப்பு நிகழ்வுகளுக்கும் விளம்பரம், ஆள் திரட்டுவதில் முக்கியமான நபராக இருந்து வந்தார். ஆளுநர் மாளிகையில் ஸ்வப்னாவுக்கு இத்தனை செல்வாக்கு எப்படி வந்தது?

திவ்யா ஸ்வப்னாவுக்கு, அமர் பிரசாத் ரெட்டி நெருங்கிய நண்பராக இருந்த காலகட்டத்தில் சில பா.ஜ.க. கூட்டங்களுக்கு திவ்யா ஸ்வப்னா பெண்களை அழைத்து வருவது வழக்கம். ஸ்வப்னா, தனது அடுத்த கட்ட நகர்வுக்கு வழிவகுக்க வேண்டி தன்னுடைய நண்பர் அமர்பிரசாத்திடம் கேட்டுள்ளார். அதன்பேரில் அமர்பிரசாத் ஏற்கெனவே ஸ்வப்னா நடத்திவந்த என்.ஜி.ஓ.வை வைத்து ஆளுநரின் கௌரவ ஆலோசகரான திருஞானசம்பந்தத்திடம் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

Annamalai sketch! Leaked Raj Bhavan secrets!

அதன்பிறகு திருஞானம் ஆளுநரால் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு நபர்களைத் திரட்டுவதற்காகவும், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் ஸ்வப்னாவுக்கு அதிகாரம் அளித்தாராம். இப்படி ஆளுநர் மாளிகையுடன் நெருக்கமான திவ்யா ஸ்வப்னா, ஆளுநருடன் இருக்கும் படத்தை வைத்து தனக்கு ஆளுநர் மாளிகை அதிகாரிகள் நெருக்கம் எனச் சொல்லி சில என்.ஜி.ஓ.க்களிடமும், தொழிலதிபர்களிடமும் கல்லா கட்டியுள்ளார். இந்த விவகாரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் முழு ஆதாரங்களுடன் புகாராகக் கொடுத்த பிறகு அவர் ஆளுநர் மாளிகைக்கு வருவதில்லையாம்.

ஆனால் அவருடைய நண்பரும் பா.ஜ.க.வின் தென்சென்னை மேற்கு மாவட்ட கல்விப் பிரிவுத் தலைவருமான பிரசன்னா அழகரை தற்போது அந்த வேலைக்கு நியமித்துள்ளார்களாம். திவ்யா இப்போது ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே இருந்தாலும் தனது தேவைகளை நண்பரான பிரசன்னா மூலமாக பூர்த்தி செய்துகொள்கிறார் என்கிறார்கள்.

Annamalai sketch! Leaked Raj Bhavan secrets!

இவர்களை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியவர்களுக்கு இதனால் என்ன பலன்?

ஆளுநர் மாளிகைக்கு வருகின்ற அரசு சம்பந்தமான பைல்கள், புகார்கள் மற்ற அனைத்து விவகாரங்களின் தகவல்கள் உடனுக்குடன் பா.ஜ.க.வினருக்கு கசியும்படி பார்த்துக்கொள்கிறார்களாம். கட்சியினரும், அதனைப் பேசுபொருளாக்கி, அதில் உடனடியாக அரசியல் குளிர்காயும் பணியை செவ்வனே செய்துவிடுகிறார்களாம்.

அப்படித்தான் ஆளுநர் மாளிகை குண்டுவெடிப்பு சம்பவம், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்க செய்யப்பட்ட பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது, அது சம்பந்தமான முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் ரகசிய பதிவும் வெளிவந்தன என்கிறார்கள்.

Annamalai sketch! Leaked Raj Bhavan secrets!

சட்டமன்றத்தில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்பொழுது ஆளுநரின் கௌரவ ஆலோசகர் திருஞானம் மற்றும் ஆளுநரின் ஓ.எஸ். ஆக பணிபுரியும் ஜானகிராமன் ஆகியோர் சேர்ந்து வீடியோ, புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை தமிழக அரசுச் செயலர் உதயச்சந்திரன் பார்த்து உடனடியாக விசாரித்து சபாநாயகர் மூலமாக இவை உரிமைமீறல் என அறிவித்து ஒரு குழுவை அமைத்து விசாரணை செய்துவருகின்றார்.

அதேபோல பட்டியல் இனமக்களுக்கு பூணூல் அணிவிப்பது, சுதந்திரப் போராட்ட தியாகிகளை சாதித் தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் என ஆளுநர் சர்ச்சையாகப் பேசியது என ஒவ்வொரு நிகழ்வையும் விவகாரமாக மாற்ற பா.ஜ.க. திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் சர்ச்சையாக்கும் நோக்கத்தில், அடுத்த நகர்வுக்கான பதிலை ஆளுநரின் எக்ஸ் பக்கத்திலும், அறிக்கையாகவும், மேடைப்பேச்சாகவும், அண்ணாமலை நியமித்த ஆலோசகர் மூலமாக பேசவைத்து அதனை அரசியலாக்குகிறார்கள்.

ஆளுநரின் ஆலோசகர் திருஞானம், ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரி ஜானகிராமன், அமர்பிரசாத் மூலமாக வந்த திவ்யா ஸ்வப்னா, இன்னும் பலர், ஆளுநரைச் சுற்றி தமிழக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் யோசனைப்படி நியமிக்கப்பட்டவர்களே. தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க, திட்டமிட்ட சர்ச்சைகளையும் சாதி, மத கலவரங்களையும் ஏற்படுத்தி, தமிழக ஆட்சியின் மீதும் தவறான அபிப்ராயம் ஏற்படுத்துவதோடு, சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக மக்களின் மனதில் எண்ணங்களை ஏற்படுத்துவதே இவர்களின் திட்டம்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் காண்டீபனிடம் பேசிய போது, "மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஆளுநர் மக்களுக்காகச் செயல்படாமல், அரசு ஆவணங்களை வைத்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக இயங்குவது உறுதியாகிறது. இதுகுறித்து ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்டபோது, அப்படி ஒரு நபர் இருப்பதாகத் தகவலே இல்லை எனவும் கொடுத்துள்ளனர். ஆனால் அதேநபர் ஆளுநரின் நிகழ்ச்சிகளில் ஆளுநருடன் புகைப்படங்களில் தட்டுப்படுகிறார். இவையனைத்தும் ஆளுநருக்குத் தெரிந்தே நடைபெறுகிறது. தமிழக அரசின் மீது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் அவப்பெயரை உண்டாக்க பா.ஜ.க. நினைக்கிறது. அதனை ஆளுநர் மூலமாகச் செயல்படுத்துகிறார்கள்'' என்றார்.

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க பாடுபடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
We will strive to stop the abuse of power by fascist forces CM MK Stalin

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சராக பொன்முடி பதவியேற்றதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

We will strive to stop the abuse of power by fascist forces CM MK Stalin

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.