Skip to main content

தூண்டிவிடும் அரசு! ஏமாறாத ரசிகர்கள்! அண்ணாத்தே ஹேப்பி!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Annaatthe

 

“நான் அரசியலுக்கு வரவில்லை, ஆனால், ரஜினி மக்கள் மன்றம் செயல்படும், பொதுசேவைகள் வழக்கம் போல் நடக்கும்'' என்பதுதான் நெடுங்கால எதிர்பார்ப்புக்கு ரஜினி வைத்த முற்றுப்புள்ளி. அதையும் மீறி அவரை “வா... தலைவா வா...” என அரசியலுக்கு வரச்சொல்லி பிரார்த்தனை போராட்டம் நடத்தியதிலும் தனக்கு உடன்பாடில்லை என்பதை அறிக்கை மூலம் தெளிவுபடுத்திவிட்டார் ரஜினி.

 

அவரது ரசிகர் மன்றத்தினர் சோர்வடைந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில லட்சங்களைச் செலவு செய்து பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.

 

‘பகிர்ந்து வாழ்வோம், பாசத்தோடு பொங்கலை கொண்டாடுவோம்' என்ற பெயரில் ஜனவரி 13 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில், பொங்கல் விழாவினை முன்னிட்டு 200 ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி சிப்பம், புடவை, வேட்டி, துண்டு, கரும்பு, இனிப்பு ஆகியவற்றை மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி வழங்கினார். கடந்த மாதம் வரை ரஜினி மன்ற நிகழ்ச்சி என்றால் முன்கூட்டியே வந்த மன்ற நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, ரசிகர்கள் மட்டும் வந்திருந்தனர்.

 

நிகழ்ச்சியில் மா.செ ரவி பேசும்போது, "எதையாவது எதிர்பார்த்து செயலாற்றுபவர்களுக்குத்தான் ஏமாற்றம் வரும். நாங்கள் தலைவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, அவர் சொல்வதை செய்கிறோம். தலைவர் பெயரில் மக்களுக்கு உதவி செய்வதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம். தலைவர் எப்போதோ சொல்லிவிட்டார், ‘பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் என்னுடன் வர வேண்டாம், வந்தால் ஏமாந்து போவீர்கள்’ என்று. அவர் ஒருபோதும் எங்களை செலவு செய்யுங்கள் என்று சொல்லவில்லை. அவர் மீதுள்ள அன்பின் காரணமாக நாங்கள்தான் அவர் பெயரில் மக்களுக்கு உதவி வருகிறோம். என் இறுதி மூச்சு இருக்கும் வரை என் தலைவர் பெயரில் செய்யப்படும் உதவிகள் தொய்வின்றி நடைபெறும்'' என்றார் உறுதியான குரலில்.

 

‘அரசியல் களத்துக்கு வா தலைவா’ என ரசிகர்களின் போராட்டம் ஒருபுறம், பொங்கல் உதவிகள் செய்யும் ரசிகர்கள் ஒருபுறம் என நடப்பவை குறித்து ரஜினி என்ன நினைக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது, "‘என்னை அரசியலுக்கு வா என அழைக்கும் போராட்டத்துக்குப் போலீஸ் பாதுகாப்பும், அனுமதியும் கிடைத்தது என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் உத்தரவில்லாமல் நடந்திருக்காது. முதல்வர் ஏன் இப்படி நடந்துக்கறார்’ என எங்கள் தலைவர் வருத்தப்பட்டார். 2017ல் அவர் அரசியல் வருகை பற்றி உறுதி கொடுத்ததிலிருந்து நாங்கள் பல லட்சம் செலவு செய்திருக்கிறோம் என மன்ற நிர்வாகிகள் சிலர் மீடியாவில் பேசுவதும் தலைவரின் கவனத்துக்கு வந்தது. உண்மையாகவே அப்படி செலவு செய்து ஏழ்மையானவர்கள் இருக்கிறார்களா, என்ன செலவு செய்தார்கள்? யாருக்காக செய்தார்கள் என விசாரிக்கச் சொல்லியுள்ளார். அரசியலுக்கு வரவில்லை என சொன்னபிறகும் தன்மீது உண்மையான அக்கறையுள்ள ரசிகர்கள், மக்கள் சேவையில் இறங்கியிருப்பது அவரை நெகிழ வைத்துள்ளது'' என்றார்கள்.

 

Next Story

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Mansoor Ali Khan removed from the post of party leader

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் அ.தி.மு.க.வுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தனது கட்சியான இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து நேற்று முன்தினம் (13.03.2024) பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (15.03.2024) சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கா.கண்ணதாசனுக்கு அளிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.