Skip to main content

 இப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

"சமீபத்தில் நடந்த மிகப்பெரிய வருமானவரித் துறை சோதனைகளில் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் வீட்டில் கிடைத்த 77 கோடி ரூபாய்தான் மிகப்பெரிய கேட்ச். ஆனால் அவ்வளவு பணம் வருமானவரித் துறையிடம் சிக்கியது பற்றி அன்புச்செழியன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ள வில்லை. இப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்கள் பார்த்ததில்லை' என அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

 

it raid



வருமானவரித்துறை ரெய்டு நடத்த வேண்டுமென்றால் புதிதாக துறைக்கு வந்திருக்கும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் ஒரு முழுமையான ரிப்போர்ட்டை தயார் செய்வார்கள். அதில் ரெய்டு செய்யப்போகும் இடம் அது தொடர்பான நபர், ஏன் ரெய்டு செய்யவேண்டும், ரெய்டு செய்தால் என்ன கிடைக்கும், எப்படி ரெய்டு நடத்த வேண்டும் என விரிவாக ரிப்போர்ட் தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள். அவர்கள் ஓ.கே. செய்தால்தான் ரெய்டு நடக்கும். ஆளும் மத்திய அரசுக்கு வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவர் என ஆராய்ந்துதான் ஓ.கே. கிடைக்கும். சிலசமயம் டெல்லி மேலிடமே எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனி நபர்களின் விவரங்களை எடுக்க ஜூனியர் அதிகாரிகளுக்கு கட்டளையிடும். அந்த விவரங்கள் சரிபார்த்த பின் ரெய்டுக்கு ஓ.கே. சொல்லப்படும்.
 

vijay



அப்படித்தான், "பிகில்' பட விவகாரத்தை வருமானவரித்துறையின் ஜூனியர் அதிகாரி ஒருவர் கவனித்திருக்கிறார். "பிகில்' படத்தை, நிலங்களை வாங்கி, கட்டிடம் கட்டும் வணிகரான பூமி பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர், தமிழ்நாடு முழுவதும் விநியோகித்திருக்கிறார். பொதுவாக இதில் கறுப்புப் பணம்தான் விளையாடும். ஆனால் முழு பணத்தையும் வெள்ளைப் பணமாக சினிமா துறையில் அள்ளி வீசியிருக்கிறார். "பிகில்' படம் சுமார் 300 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறது. நடிகர் விஜய்க்கு 50 கோடி ரூபாய் சம்பளம் மட்டும் தரப்பட்டிருக்கிறது. சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திற்கு கடன் கொடுத்துள்ளார். பூமி பில்டர்ஸ், கல்பாத்தி அகோரம், ஃபைனான்ஸியர் அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரை குறிவைத்து ரெய்டு நடத்தினால் நிச்சயம் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கிடைக்கும் என்கிற ஜூனியர் அதிகாரியின் ரிப்போர்ட்டை நீண்ட நாட்கள் ஆலோசனைக்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கேட்டு ஓ.கே. வாங்கினார்கள் மத்திய வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள்.
 

admk



இதில், "அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடத்துவது தவறு. அங்கு எதுவும் கிடைக்காது. அன்புச்செழியனுக்கு ரெய்டு என்பது புதிதல்ல. அவர் வீட்டை ஏற்கனவே இரண்டு முறை வருமானவரித்துறை சோதனை போட்டிருக்கிறது. அவர்தான் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநர் மணிரத்தினத்தின் மூத்த சகோதரருமான ஜி.வி. தற்கொலைக்கு காரணம். இயக்குநர் சசிகுமாரின் மச்சான் அசோக்குமாரின் தற்கொலைக்கும் அவர்தான் காரணம். அவர் மீது தமிழக போலீசார் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை' என அன்புச்செழியனின் கடந்தகாலத்தைப் பற்றி உயரதிகாரிகள் சொன்னார்கள்.

"ஒருமுறை ரெய்டு போனாலே வருமானவரித்துறை பற்றி குற்றவாளிக்கு தெளிவு பிறந்துவிடும். அதன்பிறகு எதைச் செய்தாலும் ஒருவேளை வருமானவரித்துறை ரெய்டு வந்தால் எப்படி சமாளிப்பது என சிந்தித்தே செயல்படுவார்கள்' எனச் சொன்ன உயரதிகாரிகளிடம், "ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை. இதே அன்புச்செழியனை ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்து கவனிக்க வேண்டிய வகையில் கவனித்ததோடு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்திருக்கிறார்' என இன்னொரு தகவலை இளம் அதிகாரிகள் சொன்னார்கள்.

"சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்து ஜெ. முதல்வராக இருந்த 2001 காலகட்டத்தில் சசிகலாவின் பணத்தை அன்புச்செழியன் சினிமாவில் போட்டு பல மடங்கு பெருக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஃபைனான்ஸ் விஷயமாக அன்புச்செழியன் ஒருவரை கடத்திச் சென்று அடைத்து துன்புறுத்துகிறார் என ஒரு புகார் அப்போது மதுரையில் வேலை பார்த்த எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் வந்தது. அவர் அன்புச்செழியனை கைது செய்து லாக்அப்பில் போட்டுக் கவனித்தார்.


அப்பொழுது புலனாய்வுத் துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் தொடங்கி அனைத்துப் போலீஸ் உயரதிகாரிகளும் ஓ.பி.எஸ். தொடங்கி பத்து அமைச்சர்களும் அன்புச் செழியனுக்காக அஸ்ரா கார்க்கிடம் பேசி அவரை விடுவிக்கச் சொன்னார்கள். அஸ்ரா கார்க் அன்புச்செழியனை குண்டர் சட்டத்தில் போட்டார். அது சசிகலா ராஜ்ஜியம் நடந்த காலம்.

சசிகலா தொடங்கி அனைத்து அமைச்சர்களுக்கும் இன்றுவரை சினிமா ஃபைனான்ஸ் செய்கிறார் அன்புச்செழியன். அரசு டெண்டர்களில் நடக்கும் ஊழலில் ஐம்பது கோடி கிடைத்தால் அதை அன்புச் செழியனிடம் கொடுத்துவிடுவார்கள். சினிமாவில் மீட்டர் வட்டிக்கு விட்டு அதை ஐநூறு கோடியாக்குவார் அன்பு. அன்புவை தொட்டால் தமிழக அமைச்சரவையே மாட்டும். அந்த அளவுக்கு "அன்பு'ப் பிடியில் அமைச்சர்கள் சிக்கியிருக்கிறார்கள்'' என இளம் அதிகாரிகள் சொல்ல... அன்புச்செழியன் வீட்டில் களமிறங்கியது வருமானவரித்துறை.


ரொக்கமாக 77 கோடி, ஏராளமான கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துப் பத்திரங்களை அள்ளிக்கொண்டு வந்தது. நடிகர் விஜய்யிடம் அவர் சம்பளமாக வாங்கிய 50 கோடி ரூபாய் முழுமையாக வெள்ளைப் பணம் என கண்டறிந்து அதற்கான கணக்கு விவரங்களைத் திரட்டினர். "விஜய் கணக்கு க்ளியராக இருந்தது. தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் மகள் வருமானவரித் துறையின் விசாரணைக்கு வந்து சென்றார். பூமி பில்டர்ஸ் உரிமையாளரும் விசாரணைக்கு வந்துபோனார். ஆனால் அன்புச் செழியன் வருமானவரித்துறை இரண்டு தேதிகளில் வரச் சொன்னதை மதிக்கவேயில்லை. அவர் எடப்பாடி மூலமாக பா.ஜ.க.வை சரிக்கட்டி தப்பிக்க நினைக்கிறார். அது அத்தனை எளிதல்ல. அன்புவையும் அவருடன் தொடர்பில் உள்ள அமைச்சர்களையும் மத்திய அரசு தன் பிடியில் வைத்துக்கொள்ளும் என உறுதியாகச் சொல்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.


 

 

Next Story

“சுயமரியாதை தான் முக்கியம்” - பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
BJP MLA says Self-respect is important and he Resigned his position in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிக பெரும்பான்மையாக 156 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒரு முறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பா.ஜ.க சார்பில் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ கேதன் இனாம்தார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து கேதன் இனாம்தார் கூறுகையில், “எனக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. நீண்ட காலமாக, சிறியவர்கள், முதியோர்கள் மற்றும் கட்சியில் நீண்டகாலமாக தொடர்புள்ளவர்களை கட்சி கவனிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். இது குறித்து நான் தலைமைக்கு தெரிவித்துள்ளேன். நான் 11 ஆண்டுகளுக்கு மேலாக சவ்லி தொகுதியை பிரதிநிதிப்படுத்தியுள்ளேன். பாஜகவின் தீவிர உறுப்பினரானதில் இருந்து, கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் 2020ல் நான் சொன்னது போல் சுயமரியாதையை விட பெரியது எதுவுமில்லை. இது என்னுடைய குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் குரல். மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிக்கக் கூடாது என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். நமது மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ரஞ்சன் பட் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக உழைப்பேன். ஆனால் இந்த ராஜினாமா எனது ஆழ்மனதின் விளைவு” என்று கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், கேதன் இனாம்தார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியபோது, கட்சி அதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், மீண்டும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கேதன் இனாம்தார், அதன் பின்னர் பா.ஜ.கவில் இணைந்து 2017 மற்றும் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.