Skip to main content

அவரது தனிப்பட்ட மெசேஜ்களை எனக்கு அனுப்புவார்... நித்தியை நெருங்கும் உளவுத்துறை... அமித்ஷா போட்ட உத்தரவு!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்கிற வாலிபர் ஒரு புதிய புகாருடன் நித்திக்கு எதிராக ஊடகங்களில் பேசி வருகிறார். அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் நித்திக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

"எனது அம்மா- அப்பா மற்றும் குடும்பத்தினர் நித்தியின் பக்தர்கள். நானும் நித்தியின் பக்தர் ஆனேன். அவரது ஆசிரம நிர்வாகியாக உயர்ந்தேன். நித்தி அவரது தனிப்பட்ட மெசேஜ்களை எனக்கு அனுப்புவார். அவை பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையில் சிறந்து விளங்கும் ஆண் மாடல்களின் மெசேஜ்கள். அவர்களுடன் நான், நித்தியின் செயலாளர் என நித்தியே பேசுவார். ஆபாசமான மெசேஜ்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள். அதன்பிறகு என்னை பேசச் சொல்வார். நான் "நித்தியின் உதவியாளர்' என பேசுவேன். உரையாடல்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்துள்ளேன். ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசியதை நித்தி சொன்னதன் அடிப்படையில் நான்தான் ஜனார்த்தன சர்மாவின் மகள்களை வைத்து வைரமுத்துவை திட்ட வைத்தேன். நித்தியின் ஆசிரமத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டால் அங்கிருந்து வெளியே வருவது கஷ்டம். அங்கிருப்பவர்களின் நிர்வாணப் படங்களை நித்தியே ரகசிய காமிராவில் பதிவு செய்வார். என்னிடமும் நித்தி தவறாக நடந்துகொண்டார். "உனக்கு தாலிகட்ட வேண்டும். அதுதான் பாக்கி' என அடிக்கடி சொல்வார். நித்தியை பொறுத்தவரை "முழுமையான ஆணோ- பெண்ணோ உலகில் இல்லை. ஒவ்வொரு ஆணிலும் சரிபாதி பெண்களின் குணம் இருக்கிறது, என ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்ந்து வருபவர் நித்தி' என ஒரு புகாரை தந்திருக்கிறார்.

 

nithy



சென்னை மாநகர காவல்துறை, "நித்தி எங்கே இருக்கிறார் என எங்களுக்கு தெரியாது. உங்களது புகாரில் குறிப்பிட்ட சம்பவங்கள் பெங்களூரில் நடந்தவை. அங்கு சென்று புகார் கொடுங்கள்' என நித்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டது. ஆனால் குஜராத், கர்நாடக அரசுகள் மத்திய அரசின் உதவியோடு நித்தியை தேடி வருகின்றன. மூன்று அரசுகளும் நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றன. நித்திக்கு எதிராக ஒரு மென்பொருள் போரையே நடத்தி வருகின்றன. நித்தி தினமும் வெளியிடும் வீடியோக்கள் எங்கிருந்து வருகின்றன என ஆராய்ந்தபோது, நித்தியின் திருட்டுத்தனமான தொழில்நுட்பம் கண்டு போலீஸார் வியந்து போனார்கள்.
 

bjp



"கைலாசா என் நாடு' என்ற நித்தி, ஒரு வீடியோ வைக்கூட அந்த தீவிலிருந்து வெளியிடவில்லை என போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை பெரும் பாலும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தான் வெளிவந்திருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகளை தேடிப்பிடித்த அரசின் உளவுப்பிரிவுகள், எந்த முகவரியிலிருந்து நித்தியானந்தா அங்கே அனுப்பினார் என கண்டுபிடிக்க தொடங்கின. நேபாளம், மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்துதான் வாட்ஸ்-அப் செயலி மூலம் நித்தி அந்த வீடியோக்களை அனுப்பி வெளியிட வைத்துள்ளார் என அறிந்த போலீஸார், மேலும் புலனாய்வை இறுக்கியபோது நித்தி தங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

 

vijayakumar



18-ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும், 20-ஆம் தேதி குஜராத் மாநில உயர்நீதிமன்றத்திலும் நித்தியின் இருப்பிடத்தை போலீஸார் தெரிவிக்க உள்ளனர் என்கிறது மத்திய உளவுத்துறை வட்டாரம். தன்னை போலீஸார் நெருங்கிவிட்டதை நித்தி உணர்ந்துவிட்டார். தமிழக பா.ஜ.க. பிரமுகர்களான எச். ராஜா மற்றும் எஸ்.வி. சேகரை தொடர்புகொண்டு பேசி வருகிறார். அவர்கள், "நீங்கள் "கைலாசா' என்கிற நாட்டை அங்கீகரிக்க ஐ.நா. சபைக்கு கொடுத்த மனுவில் பா.ஜ.க. அரசை "இந்துமத விரோத அரசு' என வசைபாடி விட்டீர்கள். அது மத்திய அமைச்சர் அமித்ஷாவை கோபமடைய வைத்துள்ளது' என சொல்லியுள்ளனர். அதுக்கென்ன அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டால் போச்சு என ராமர் கோவிலையும் பா.ஜ.க.வுக்கு பிடித்தமான ராமனையும் நித்தி புகழ்ந்து பேசியுள்ளார். ஆனாலும் "நித்தியை உடனே கைது செய்யுங்கள்' என மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். "எந்த விதத்திலும் அவரை ஒரு இந்து சாமியாராக மதிக்காதீர்கள்' என்றும் கோபம் காட்டியுள்ளாராம்.


மத்திய அரசின் கோபத்திற்கு காரணம் அமித்ஷா மற்றும் மோடியுடன் பேசும் ஜாக்கி வாசுதேவ்தான் என்கிறது டெல்லி வட்டாரம். கரீபியன் கடல் பகுதியிலுள்ள நித்தியை நெருங்கிக்கொண்டிருக்கிறது உளவுத்துறை.

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்