Skip to main content

இந்தியாவிற்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது... -அமிதாப் பச்சன் உருக்கம்.

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
amitabh bhachchan


 

நவம்பர் 15 2018, அன்று கஜா புயல், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களையும், டெல்டா மாவட்டங்களையும் தாக்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமகாலத்தில் நடந்த மிகப்பெரிய அழிவு. நிறைய மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். நிறைய கட்டிடங்கள் இடிந்துள்ளன. கிட்டதட்ட 3.7 இலட்சம் மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர்.  3.4 இலட்சம் வீடுகள் இடிந்துள்ளன. இந்தியாவிற்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 60 முதல் 80 சதவீதம் தென்னை மரங்கள் விழுந்துவிட்டன. இந்தியாவின் இளநீர் உற்பத்தியில் கால்பங்கு உற்பத்தியை அந்த பகுதிகள் பெற்றுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களை நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மரங்கள், மின்சார வசதி மற்றும் வாழ்க்கை சேதமடைந்துள்ளன. இது ஒரு கணிப்புதான். விவசாயம் முடங்கிப்போய் உள்ளது.


இந்த சேதங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றன. ஆனால் தன்னார்வலர்களும், சமூக நல இயக்கங்களும் தொடர்ந்து மக்களுக்காக உதவுகிறார்கள், நம்மக்களுக்காக. ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதுதான் இந்தியாவின் ஒற்றுமை. கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. சகோதரத்தை உணர்த்துவதற்கு இதுவே சிறந்த நேரம். முன்வருவோம் உதவுவதற்காக. கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர். அவரது அமைப்பான மக்கள் நீதி மய்யம் களத்திலிருந்து உழைத்துவருகிறது. உங்களின் மகத்தான பங்களிப்பை தாருங்கள். நன்றி...

 

 

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Tuticorin fishermen banned from going to sea
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.