Skip to main content

குண்டு வெடிப்பில் அமெரிக்கா சதியா?-அதிர்ச்சியில் இலங்கை!

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

இலங்கை தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. அவருடன் அரசியல் ரீதியாக மல்லுக்கட்டும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், "இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது' என அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதிபருக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகளும் பகையும்  அதிகரித்திருக்கும் சூழலில், இருவரும் ஒரே வித சந்தேகத்தை முன்வைப்பது வெடிகுண்டு பயங்கரத்தின் மறைக்கப்படும் பக்கங்களை அம்பலப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், அமெரிக்காவுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குமிடையே இருக்கும் ரகசிய டீலிங் தற்போது அம்பலமாகியிருக்கிறது. 

 

srilanka incidents



அமெரிக்கா, சீனா, இந்தியா, நார்வே, பிரிட்டன், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் உதவியுடன் 2009-ல் நடந்த இறுதி யுத்தத்தில் தமிழீழத்தை அழித்தொழித்தனர் ராஜபக்சேவும் சகோதரர்களும். யுத்தம் முடிவுக்கு வந்தது. சீனா மற்றும் பாகிஸ்தானின்  செல்லப்பிள்ளையாக மாறினார் மகிந்தா. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா, பிரிட்டன், நார்வே நாடுகளின் உதவியுடன் 2015-ல் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்தாவை வீழ்த்த, மைத்ரியை அதிபராக கொண்டு வந்தது அமெரிக்கா. ஆனால், மைத்ரியும் ஒரு கட்டத்தில் சீனா, பாகிஸ்தானின் ஆதரவாளராக மாறிப்போனார். 

 

rajapaksay



இந்தச் சூழலில்தான், கடந்த 3 ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் மிக நெருக்கமான, அரசியல் ரீதியாக நட்பை பலப்படுத்தி வருகிறார் கோத்தபய ராஜபக்சே. இரட்டை குடியுரிமையாக அமெரிக்காவின் குடியுரிமையையும் பெற்றவர்.  இலங்கைக்கு அடுத்தாண்டு அதிபர் தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலில் மைத்ரியை வீழ்த்தி கோத்தபயவை அதிபராக்க கடந்த 6 மாதகாலமாக ரகசிய வியூகங்களை மேற்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதன் ஒரு கட்டமாக, கோத்தபயவின் அமெரிக்க குடியுரிமையை ரகசியமாகத் திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறது அமெரிக்க அரசாங்கம். அமெரிக்காவும் ராஜபக்சே சகோதரர்களும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 

srilanka primeminister



இது குறித்து நம்மிடம் பேசும் இலங்கை புலனாய்வு அமைப்புகளோடு தொடர்புடைய  தமிழீழ ஆதரவாளர்கள், "இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை  பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றிருந்த கோத்தபய, அங்கு தங்கியிருந்த 3 வாரங்களும் அமெரிக்க உயர் ஸ்தானிகர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார். தனது இமேஜுக்கு பாதிப்பில்லாமல், அமெரிக்காவே தன்னுடைய குடியுரிமையை வித்ட்ரா செய்தது போல இருக்க வேண்டும் என்பது கோத்தபயவின் கோரிக்கை. அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் கோத்தபய போட்டியிடுவது கசியக்கூடாது என்பதற்காகவே குடியுரிமை ரத்து ரகசியமாக வைக்கப்படுகிறது. கோத்தபயவின் வெற்றிக்காகத்தான் இலங்கையில் வெடிகுண்டு பயங்கரங்கள் தொடர்ந்து நடந்தேறுகின்றன. அதிபர் தேர்தல் வரை இலங்கையை பதட்டத்திலேயே வைத்திருக்க திட்டமிடுகிறது அமெரிக்கா'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

அமெரிக்க-கோத்தபயவின் இந்த ரகசிய திட்டங்களுக்கு செக் வைத்திருக்கிறார், ராஜபக்சே கும்பலால் 2009-ல் படுகொலை செய்யப்பட்ட இலங்கை "சண்டே லீடர்' பத்திரிகையின் இணையாசிரியர் லசந்தா விக்ரமதுங்கேவின் மகள் அகிம்ஷா விக்ரமதுங்கே. மகிந்தாவின் நண்பராக இருந்தபோதும் அவரது அரசியல் படுகொலைகளை அம்பலப்படுத்திய லசந்தா, இதன்காரணமாக, ராஜபக்சே சகோதரர்களால், தான் கொல்லப்படலாம் என்பதை சண்டே லீடரில் பதிவு செய்தார். அது அச்சாகி ரிலீஸ் ஆவதற்கு முதல் நாள் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தையின் படுகொலைக்கு கோத்தபயதான் காரணம் என குற்றம்சாட்டி வந்தார் லசந்தாவின் மகள் அகிம்ஷா விக்கிரமதுங்கே. 

அவரது தற்போதைய செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசும் கொழும்பு பத்திரிகையாளர்கள், "கோத்தபயவின் நடவடிக்கைகளை அறிந்த அகிம்ஷா, அமெரிக்காவில் தனது நண்பர்களான சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தார். தனது தந்தையின் படுகொலைக்கு கோத்தபயதான் காரணம் எனவும், இவர்மீது நிறைய போர்க்குற்றங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் கோத்தபயவிற்கு எதிராக ஏப்ரல் 7-ந் தேதி வழக்குத் தொடர்ந்தார் அகிம்ஷா. நீதிமன்றம் 10-ந் தேதி கோத்தபயவுக்கு சம்மன் அனுப்பியது. அமெரிக்க குடியுரிமை பெற்றவரான கோத்தபய மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும்வரையில் குடியுரிமையை ரத்து செய்யவோ, திரும்பப் பெறவோ முடியாது. கோத்தபயவை அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவே அவர் மீது அகிம்ஷா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா அரசின் உயரதிகாரிகளின் உதவியுடன் வழக்கை தடுத்து நிறுத்த கோத்தபய முயற்சிப்பார் என யோசித்த அகிம்ஷாவின் சட்ட நிபுணர்கள், கோத்தபய மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனையும்  அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்'' என விவரித்தனர். அமெரிக்கா+கோத்தபய கூட்டுச் சதியில் இலங்கை அரசியல் களம் அதிர்ந்து அலறுகிறது.

 

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.