Skip to main content

அம்பேத்கர் சிலை உடைப்பு...வேதாரண்யம் ஜாதி மோதலின் பின்னணி...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சட்டமேதை அம்பேத்கரின் சிலை கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம். வேதாரண்யம் அருகிலுள்ள ராஜகாளிகாட்டைச் சேர்ந்தவர் பாண்டியன். முக்குலத்துப் புலிகள் அமைப்பின் மாணவரணி மா.செ.வாக இருக்கிறார். இவருக்கும் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலருக்கும் அடிக்கடி மோதல் ஈடுபட்டு, வழக்காகவும் மாறியிருக்கிறது.

 

public issues



25-ந் தேதி மாலை தனது சகாக்களுடன் வேதாரண்யத்தில் சென்று கொண்டிருந்த பாண்டியனின் கார், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற இளைஞரின்மீது மோதியது. இதைப்பார்த்து அதிர்ந்துபோன அவரது சமுதாய இளைஞர்கள் சிலர் ஓடிவந்து ராமச்சந்திரனை மருத்துவமனையில் சேர்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் செய்தி ராமகிருஷ்ணாபுரத்தில் பரவ, அங்கிருந்து ஓடிவந்த இளைஞர்கள் காவல்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பாண்டியனின் காரை சாவகாசமாக அடித்து நொறுக்கிவிட்டு, தீயிட்டுக் கொளுத்தினர்.
 

issues

பாண்டியனின் கார் கொளுத்தப்பட்ட செய்தி வேதாரண்யம் முழுவதும் உள்ள அவரது சமுதாய இளைஞர்களுக்கு தெரியவர, அரிவாள், கடப்பாரைகளோடு பெருங்கூட்டமாக திரண்டுவந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ரகளை செய்தனர். காக்கிகளிடம் இருந்து இந்தமுறையும் எதிர்வினை இல்லை. தொடர்ந்து அந்த இளைஞர்கள், காவல்நிலையத்திற்கு எதிரே பேருந்துநிலைய வாசலில் இருந்த அம்பேத்கர் சிலையின் தலையை வெட்டி உருட்டிவிட்டு, வெறித்தனமான குதூகலத்துடன் அங்கிருந்து வெளியேறினர். அடுத்துவந்த கூட்டம், தலையில்லாத அம்பேத்கர் சிலையை கடப்பாரை, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் உடைத்து சேதப்படுத்தியது. அதோடு நிறுத்தாமல் பட்டியலின சமுதாயத்தின ரின் கடைகளாக தேடித்தேடி அடித்து நொறுக்கினர். மாலை 5.15க்கு தொடங்கிய இந்த அலப்பறைகள், 6.05-க்கு நாகையில் இருந்து காவலர்கள் வந்து தடை உத்தரவு பிறப்பிக்கும்வரை நீடித்தது.

பதற்றம் தொற்றிக்கொள்ள, வேதாரண்யத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியும் முதல்வர் பழனிசாமியிடம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருமாறு முறையிட்டனர். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர் பழனிசாமி, உடனடியாக சேலம் ஆத்தூரில் இருந்து 6 அடிஉயர அம்பேத்கர் சிலையைக் கொண்டுவந்து, பழைய சிலை இருந்த இடத்திலேயே நிறுவி பதற்றத்திற்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்தார். ""இந்த சம்பவத்தில் தொடர் புடைய முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தேவேந்திர குல சமுதாயத்தினரும் இதில் அடக்கம். பாண்டியனை தேடி வருகின்றனர்''’என்றனர் அப்பகுதி வாசிகள் நம்மிடம்.

வேதாரண்யத்தின் பதற்ற நிலை அறிந்திருந்தும், அங்கி ருந்து வேளாங்கண்ணிக்கு பாதுகாப்புக்காக காவலர்களை அனுப்பி வைத்துள்ளனர் அதிகாரிகள். வேளாங்கண்ணி சர்ச்சுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து என்ற உளவுத் தகவலே இதற்குக் காரணம். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத் தைக் கண்டித்து வி.சி.க., இடதுசாரி கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து இருதரப்பு பிரச்சனைகளையும் அறிந்த காவல்துறையினரிடம் கேட்டோம்.…""டெல்டாவில் வளர்ந்துவரும் சாதிய அமைப் பாக இருக்கிறது முக்குலத்து புலிகள் அமைப்பு. மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அதே சமுதாய கட்சிகளோடு ஈடுகொடுக்க தனது இளைஞர் களை உசுப்பேத்துவதை முக்குலத்து புலிகள் அமைப்பு சமீபத்திய வேலையாக செய்து வருகிறது. இங்குள்ள அம்பேத்கர் சிலையை அகற்றவேண்டும் என தொடர்ந்து பேசி சர்ச்சைக்கு ஆளாகிவருகிறார் முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன்.


தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்து தலைவரான இமானுவேல் சேகரின் நினைவுதினமான செப்டம்பர் 11-ல்தான், ஆறு.சரவணனுக்கு பிறந்ததினம். அந்தநாளில் இமானுவேல் சேகரனுக்காக ஒட்டப்படும் போஸ்டர்களை மறைத்து தன் பிறந்ததின போஸ்டர்களை, ஒட்டுவதால் மோதல்களும் வெடித்துள்ளன.

சிலமாதங்களுக்கு முன்னர் தமிழக தேவேந்திர குல மக்கள் இயக்கத் தலைவரான குமுளி ராஜ்குமார், ராமகிருஷ்ணா புரத்தில் நடந்த திருமண விழாவுக்கு வந்திருந்தார். அவருக்கு பிரம்மாண்ட வர வேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவரை அழைத்துச் செல்வதற்காக வந்தவர்களில் சிலர், எதிரே வந்த முக்குலத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை விலகிப்போகச் சொல்லி அடித்துள்ளனர். இதையறிந்த ஆறு.சரவணன், குமுளி ராஜ் குமாரை கைதுசெய்யச் சொல்லி வாய்மேட்டில் சாலைமறியலில் இறங்கினார். வேறுவழியின்றி கோபாலசமுத்திரத்தில் குமுளி ராஜ்குமாரைக் கைதுசெய்து, சிலர்மீது குண்டாஸும் போட்டார்கள். அதிலிருந்து வெளியில் வந்தவர்களுக்கும் முக்குலத்து புலிகள் அமைப் பின் பாண்டியனுக்கும் அடிக்கடி சண்டை மூண்ட நிலையில், சிலை உடைப்பில் முடிந்திருக்கிறது''’என்றனர் விரிவாக.

தேசத்தின் அடையாளம் சட்டமேதை அம்பேத்கர். அவர் அனைத்து மக்களுக்கு மானவர். அவரை சாதிய அடையாளமாக குறுக்கு வதும், அவரது சிலைகளைத் தகர்ப்பதும் மடமையின்றி வேறில்லை. சிலைகளைக் கடந்து சித்தாந்தமாக எப் போதும் உயர்ந்து நிற்கிறார் அம்பேத்கர். 

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.