Advertisment

"நான் எப்போதும் கிங்தான் யா" - கர்ஜித்த இளையராஜா

ஒரு சாமானியனின் இசை, வெறும் ஆர்மோனியத்தின் கட்டைகளின் அழுத்தத்தால் மட்டும் உருவானதா அல்லது கிராமத்தின் தெம்மாங்குகளால் உருவானதா என்று கணிக்கவே முடியாத அந்தஇசையை உருவாக்கிய ஞானி,நாட்டுப்புற இசையைபட்டிதொட்டி எங்கும் பரப்பி பாமரனுக்கும் இசை தாகத்தை ஏற்படுத்தி அந்த தாகத்தைத்தனது இசையாலேயேதணித்த, இசைக்கே ராஜாவாக காலத்தால் அழிக்க முடியாதபடிரசிகர்கள் மனதில் குடியிருக்கும் இளையராஜாவின்75-வது பிறந்த நாள் இன்று....

Advertisment

ilayaraja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

1943-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில்ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இசை மீது கொண்ட ஆர்வத்தாலும் அண்ணன் பாவலரின் தாக்கத்தாலும்ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டு,பல மேடை நாடகங்களுக்கும் கம்யூனிச சிந்தனை நாடகங்களுக்கும்இசையமைத்த அனுபவத்துடன் 1969 சமயத்தில்சினிமாவில் இசையமைக்கும் ஆர்வத்தில்சென்னை வந்தார் அந்தஇளையராஜா. திறமையுள்ள எல்லா கலைஞனுக்கும் கிடைக்கும் தொடர் தோல்வி,அவமானம் என சகல மரியாதையோடு இவரையும்வரவேற்றதுதமிழ் சினிமா. வெறும்நாட்டுப்புற மெட்டும்,ஹார்மோனியம்வாசிக்கத்தெரியும் என்பதும்மட்டும் போதாது என்று அன்றைய திரையுலகம் அவருக்கு உணர்த்த முற்பட்டது. பிறகு தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் முறையாகப்பியானோ மற்றும் கிட்டார் கற்றுக்கொண்டு இசைக்குழுக்களில்சேர்ந்து கிட்டார் வாசிக்கத்தொடங்கினார். இப்படி தனக்கான தேடுதலின் தடுப்புச்சுவராக வந்தஎல்லாவற்றையும் உடைத்துதாண்டி தனது முதல் படமான 'அன்னக்கிளி' என்ற படத்தில் இசையமைக்க ஒப்புதலானார்.

ilayaraja

அந்த முதல் படத்தின் பாடல் பதிவு பற்றி சொல்லவேண்டும். எந்த ஒரு கலைஞனும் இப்படி ஒருசூழ்நிலையைசந்தித்திருக்க முடியாது. அன்னக்கிளி படத்தில் அவருக்கு வாய்ப்பளித்தவர் பஞ்சுஅருணாச்சலம். தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியவர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் இப்படி பல முகங்களைக்கொண்டவர். அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் தம்பிதான் என்றாலும் 'இளையராஜா பார்க்க, விஷயம் தெரியாத சின்னப்பையன் போல் உள்ளாரே, இவரை நம்பி வாய்ப்பை கொடுக்கலாமா?' என சந்தேகத்திலேயே இருந்தார். ஆனால் ராஜாவோ சினிமாவில் சாதிக்கவேண்டுமெனதீவிரமாக இருந்த சமயமது. ''சரி முதலில் ஒரு ரிகர்சல் போட்டுக்காட்டு, ஒரு டம்மி ரெக்கார்டிங் போட்டுப்பார்க்கலாம், அதன் பின் சரிப்பட்டு வருமா வராதா என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்" என்று கட்டளையாகவே ராஜாவின் முன் வைத்தார் அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர்.

ilayaraja

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ராஜா அப்பொழுது சாந்தோமில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். தினமும் பல மெட்டுக்களை வாயில் முணுமுணுத்தபடி பீச் ரோட்டில் காந்திசிலை வரை நடத்து போகும் பழக்கம் அவருக்கு இருந்தது. இசையமைக்கும் முன்பேதனது வாயில் அன்னக்கிளி படத்தில் ''அன்னக்கிளி என்னை தேடுதே'' பாட்டுஆரம்பிப்பதற்குமுன்னே வரும் ஹம்மிங்கை எத்தனைமுறை பாடியிருப்பார் என்று கணக்கே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது தயாரிப்பாளர் கேட்டுவிட்டதால் ரிகர்சல் செய்து காட்டியாக வேண்டும். எனவேகவிஞர் கண்ணதாசன் வீட்டின் அருகே இருந்த பாலாஜி திருமண மண்டபத்தில் ஆர்கெஸ்ட்ரா மற்றும் பாடகர்களை ஒன்று திரட்ட திட்டமிட்டார். ஆனால் அதற்கு முன்பு தனியாக அமர்ந்து அந்தப்படத்தின்இசைக்காக நோட்ஸுகளை வாசித்து எழுதத்தொடங்கினார். சரி நோட்ஸ் எல்லாம் எழுதியாச்சு... ரெக்கார்டிங்க்கு முன்னமே''அன்னக்கிளி என்ன தேடுதே'' பாடலையும் ''மச்சானாபார்த்தீங்களா'' பாடலையும் தயாரிப்பாளர் முன்னிலையில் ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்துக்காமிக்க ஏற்பாடு செய்தார். எந்தவொரு மின்னணு கருவிகள் எதுவுமில்லாமல்ஒரு இசைக்கருவியால் மைக் இல்லாமல்எவ்வளவு ஒலிவருமோ, அந்த ஒலி அளவில் ''அன்னக்கிளி என்ன தேடுதே'' பாடலைபாடகிஜானகி அவர்களை வைத்துப்பாடவைத்தார். இந்த ஒத்திகையைக்கேட்ட அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மிகவும் பூரிப்படைந்து அதன்பிறகே முழுவாய்ப்பையும் இளையராஜா பக்கம் தந்தது.

ilayaraja

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

அதன் பிறகு தனது முதல் பாடலை ரெக்கார்டிங் தியேட்டரில்பதிவு செய்தார். பாடல் பதிவின் முதல் டேக்கிற்குப்பிறகு, தான் இசையமைத்து ரெக்கார்ட் ஆன அந்த முதல் பாடலை கேட்க ரொம்ப ஆர்வமாக இருந்தார் இளையராஜா. ஆர்வ மிகுதியால் ஏவிஎம் சம்பத்திடம் தனது பாடல் பதிவை கேட்கவேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அந்த முதல் டேக்கை பிளே பண்ணிப்பார்த்தபொழுது தொழில்நுட்பக்கோளாறோஎன்னவோ தெரியவில்லைஅதில் எதுவுமே பதிவாகவில்லை. எப்படி இருந்திருக்கும் ஒரு முதல் பட இசையமைப்பாளரின்.மனநிலை?ஆனால்அதையும்பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திரும்பவும் பதிவு செய்து காட்டினார். அதன் பிறகு அந்தப்படமும் முழுதாக முடிந்து திரையில் வெளியானது. திரையில் அன்று ''அன்னக்கிளி என்ன தேடுதே'' என ஆரம்பித்த அவரது இசை பயணம் இன்னும் தேடுதல்களை நிறுத்ததியபாடில்லை.

ilayaraja

அந்த முதல் படத்தில் தொடங்கி,தற்போது ஆயிரம்திரைப்படங்களைத்தொட்டுவிட்டது அவரது இசை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும்தகுந்தாற்போல அத்தணை இசை புதுமைகளையும் தன் ரசிகர்களுக்கு அள்ளித்தெளித்தார்.70,80களில் அவருடைய பாடல்களுக்காகவே படங்கள் ஓடின. 16 வயதினிலே படத்திலே ''சோளம் வெதைக்கையிலே'' என்ற பாடலை தானேபாடினார். அதுவே அவர் பாடிய முதல் பாடல். அதன் பிறகு அவரதுஇசை மட்டுமல்ல அவரது குரலில் இருக்கும் காந்தமும் மக்களை கட்டிப்போட்டது. எல்லா இடத்திலும் ராஜா பாடல்களே... மூன்று நேர உணவு போல ராஜாவின் இசையும் மக்களின் தினசரி அங்கமானது. அதேபோல் அன்றைய காதல் செய்யும் இளவட்டங்கள், காதலில் தோற்ற இளவட்டங்கள் என எல்லாருக்குமே ஒரே தீர்வு இளையராஜாவின் பாட்டுதான். இப்படி நாட்கள் உருண்டோடிஇன்று 2018-ல் நிற்கிறோம். இன்றும் அவர் பாட்டு இல்லாத இடம் இல்லை. காலத்தால் அழிக்கமுடியாதது அவரும் அவரது இசையும்.

ilayaraja

சில மாதங்களுக்கு முன்புகூட ஏவிஎம் ஸ்டுடியோவில் ''தி ஒன் மேன் ஷோ'' என்ற இசை நிகழ்ச்சிக்கானப்ரோமோ ஷூட்டிங்கில்இளையராஜா கலந்துகொண்டார். அப்பொழுது அவர் நடந்து வருவது, கையசைப்பது, இசையமைப்பது போன்ற பல காட்சிகள் ப்ரோமோவுக்காகபடமாக்கப்பட்டது. பெரிய பெரிய ஸ்டில் போட்டோகிராபர்கள் வரவழைக்கப்பட்டு லைட் செட்டிங் எல்லாம் வைத்து அவரை ஸ்டில்போட்டோ எடுத்தனர். அப்போது பியானோவில் உட்காந்திருந்த இளையராஜாவைஒரு போட்டோகிராபர் பல விதங்களில் போட்டோ எடுத்தார். இறுதியில், "சார் 'கிங்' மாதிரி ஒரு போஸ் கொடுங்க சார்" என்றார். அடுத்த நொடியே "நான் எப்பபோவும் கிங்தான்.ராஜாகிட்டயே ராஜா மாதிரி போஸ் கொடுக்க சொன்னா...'' என சிரித்தார்.அவருக்குப்பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும்இசையில்அவர் எப்போதுமே கிங்தான்.

birthday tamil music ilayaraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe