Skip to main content

திருவள்ளுவரை கூண்டில் அடைத்து விட்டார்கள் - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதுதொடர்பான விளக்கத்தையும், அயோத்தி தீர்ப்பு பற்றியும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " இன்று திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூச பார்க்கிறா்கள். அதனை திருவள்ளுவர் மூலம் நடைமுறை படுத்தலாம் என்று மதவாத சக்திகள் முயற்ச்சிக்கிறார்கள். தமிழக மக்கள் மொழிசார்ந்த விஷயங்களில் ஒன்றிணைகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு இதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால் அதில் அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள். சுதந்திரமாக இருந்த திருவள்ளுவர் சிலையை தற்போது கூண்டில் அடைத்துள்ளா்கள். திருவள்ளுவரை கூண்டில் அடைந்த பெருமை அவர்களையே சாரும். இன்றைக்கு அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவிக்க பயப்படுகிறார்கள். ஆனால் எதைப்பற்றியும் கவலைபடாமல் இந்தியாவிலேயே இது சமரச முயற்சி என்று சொல்லியவர் நம் தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள் மட்டும்தான். ஜனநாயக சக்திகள் கூட அதில் இருந்து பின்வாங்கும் நிலையே இருந்தது. ஆனால் நம்முடைய கட்சி எதைபற்றியும் கவலை படாமல் அந்த தீர்ப்பை பற்றி வெளிப்படையாக பேசினோம். 
 

gf



ராமர் கோயிலை இடித்துதான் மசுதி கட்டப்பட்டது என்று பல ஆண்டுகளாக மதவாத இயக்கங்கள் சொல்லிவந்த பொய் குற்றச்சாட்டுக்கள் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்ததுள்ளது. அந்த வகையில் முஸ்லிம்கள் மீது இருந்த பழி துடைக்கப்பட்டுள்ளது. மத, இன ரீதியாக மக்களை பிளவுபடுத்த மதவாதம் பேசும் கட்சிகள் காலங்காலமாக முயற்சி செய்தே வருகிறார்கள். அவர்களின் எண்ணம் தற்போது வெற்றிபெற்றதாக நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. இது அவர்களுக்கும் விரைவில் புரியவரும். இன்றைக்கு தனியார் துறையில் கூட வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக நம் தலைவர் குரல் கொடுத்து வருகிறார். இன்றைக்கு திமுக கூட பொதுக்குழுவில் தனி தீர்மானம் ஒன்றை போட்டுள்ளா்கள். நாம் மக்களை சமத்துவப்படுத்த இவ்வாறாக யோசிக்கும் நேரத்தில் அவர்கள் அதனை குலைக்கும் நோக்கத்தில் செயல்படுகிறா்கள். அவர்களை மக்கள் புறந்தள்ளும் காலம் விரைவில் வரும்.

 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.