Skip to main content

வீடு தானாகவே இடிந்து விழுந்ததா..? - ஆளூர் ஷானவாஸ் கேள்வி!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

சில தினங்களுக்கு முன்பு மேட்டுபாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் போதிய நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியபோது அதில் காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

மேட்டுபாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் உயரிழந்துள்ளனர். இழப்பீடு சம்பந்தமான நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை நீங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த சம்பவம் நடந்து அடுத்த 24 மணி நேரம் வரையில் வெளியான செய்திகளை பார்த்தோம் என்றால், மழையின் காரணமாக சுவர் இடிந்து 17 பேர் பலியானார்கள் என்றுதான் ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது. மழையில் சுவர் இடிவது நடக்க வாய்ப்பிருக்க கூடிய விபத்தாக இருந்தாலும், அதில் எப்படி 17 பேர் உயிரிழப்பார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. பிறகு அதை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்கும் போதுதான் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டின் மீது மற்றொருவருடைய வீட்டின் சுற்றுச்சுவர்  இடிந்து விழுந்தது தெரிய வந்தது. ஆனால் இதை ஆரம்பத்தில் அவ்வாறு குறிப்பிடாமல் வீடு இடிந்து 17 பேர் பலி என்றே அனைவருக்கும் சொல்லப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர் பள்ளிக்கரணை பகுதியில் விபத்தில் இறந்தார். அவரை லாரி மோதிய விபத்தில் இறந்தார் என்றா நாம் கூறினோம். பேனர் அவர் மீது விழுந்ததால் அவர் நிலைதடுமாறி பின்னால் வந்த லாரி மீது விழுந்து உயிரிழந்தார் என்று தானே குறிப்பிடுகிறோம். ஆனால் இங்கு மட்டும் சுவர் இடிந்ததை குறிப்பிடாமல் வீடு இடிந்து 17 பேர் பலி என்று ஏன் சொல்ல வேண்டும். எதற்காக உண்மையை மறைக்க வேண்டும். 
 

df




இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மகளிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேட்கிறார்கள், நீங்கள் உங்கள் அப்பாவை விபத்தில் இழந்திருக்கிறீர்கள், தற்போது உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கிறார்கள். அதற்கு பாட புத்தகங்களை மட்டும் கொடுங்கள் நான் அம்மாவை காப்பாற்றிக் கொள்கிறேன் என்று கண்ணீர் ததும்ப அந்த பிஞ்சு சொல்கிறது. இதை பார்த்துவிட்டு யாராலும் மனம் கணக்காமல் இருக்க முடியுமா? இந்த குழந்தையின் அழுகைக்கு யார் காரணம். மிராசுதாரர்கள், பணக்காரர்கள் என்று யார் சட்டத்தை மீறினாலும் முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும், அரசாங்கமும் தான் இந்த நிலைக்கு காரணம். எங்களை பார்க்க கூடாது, எங்களோடு எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று நினைத்து இந்த சுவர் கட்டப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இது தீண்டாமை சுவரா, தன் வீட்டை சுற்றி ஒருவர் சுவர் கட்டிக்கொள்ள கூடாதா என்று தற்போது பேசி வருபவர்களுக்கு அந்த மக்கள் அளித்த இந்த பதிலே போதுமானது என்று நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களிடத்தில் இருந்துதான் நாம் தகவல்களை பெற வேண்டும். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுதான் இயற்கை நீதியும் கூட. வலியில் இருந்து பேசுபவனிடம் பொய் வராது. அவன் அந்த வலியை உணர்ந்து இத்தனை ஆண்டுகாலமாக அங்கே வாழ்ந்து வந்திருக்கிறான். நீங்கள் நடவடிக்கை எடுப்பதில் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு அவர்கள் மீது குறை சொல்ல கூடாது.

 

 

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தொடர் விபத்து; திடீரென சாலையில் கவிழ்ந்த லாரி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 truck overturned on the Thiruvananthapuram National Highway

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்களை அதிக பாரத்தோடு கேரளாவுக்கு கடத்திச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கனிம வள கொள்ளையை தடுக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் லாரிகள், இதே பகுதியில் விபத்துகளிலும் அடிக்கடி சிக்கிக்க் கொள்கின்றன. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடக்காமலிருக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம் பெற்றது. இதனால், நாகர்கோவில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் விரிவுப்படுத்தும் பணி தொடங்கியது. அதே சமயம் இந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் பல இடங்களில் கான்கிரீட் கட்டைகளால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இது அமைக்கப்பட்ட பிறகு விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பிறகுதான் தற்போது இந்தப் பகுதியில் அதிகமாக விபத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதில் கடந்த 10 நாட்களில் மட்டுமே சுமார் 6க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி லோடு ஏதும் இல்லாமல் டாரஸ் லாரி ஒன்று சென்றுள்ளது.

அப்போது, அந்த டாரஸ் லாரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்ற அந்த டாரஸ் லாரியை, வெள்ளிக்கோடு பகுதியில் உள்ள வளைவில் ஓட்டுனநர் திருப்ப முயன்றுள்ளார். ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த டிவைடர் சிமெண்ட் கட்டையில் என மோதியுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அந்த லாரியை அங்கேயே நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது டாரஸ் லாரியை நிறுத்த ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, அந்த லாரி வேகமாக புரண்டு பெரும் சத்தத்துடன் பொத்தென்று கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.