Skip to main content

"ரஜினி முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால் குரல் கொடுப்பேன் என்றாரே... போராடும் மக்களை ஏன் சந்திக்கவில்லை " - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

Published on 17/02/2020 | Edited on 18/02/2020


சில தினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். நாள் முழுவதும் நீடித்த அந்த போராட்டத்தில், திடீரென நள்ளிரவு நேரத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி அந்த கூட்டத்தை கலைத்தனர். இந்த விவகாரம் பிரச்சனை ஏற்படுத்தவே காவல்துறையினர் தற்போது முஸ்லிம் அமைரப்புகளின் நிர்வாகிகளோடு சமாதனம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷானவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

28ம் தேதி வரைக்கும் சென்னையில் போராட்டங்கள் நடைபெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளார்கள். போராட்டம் தேவையில்லாத ஒன்று என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவங்கள் தொடர்பாக உங்களின் கருத்து?

போராட்டம் நடத்தக்கூடாது என்று சொல்லிய பிறகு அந்த போராட்டாங்கள் ஆரம்பிக்க படவில்லை. அதற்கு முன்பாகவே கடந்த 10 நாட்களாக இந்த போராட்டங்கள் நடைபெற வேண்டி அவர்கள் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் போராட்டம் நடத்த இடம் தரப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் அளித்த உறுதிப்படி காவல்துறையினர் இடத்தை ஒதுக்கவில்லை. தொடர் போராட்டமும் ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட போராட்டம்தான். ஒரு நாள் போராட்டத்தை போன்று இதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான். தில்லியில் இன்று சாகின் பார்க்கில் நடைபெறுகின்ற போராட்டமும் அதை போன்றதுதான். காவல்துறையினர் ஒரு இடத்தை ஒதுக்கி கொடுப்பார்கள். அதில் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள். அவர்களாகவே எப்போது போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள். அரசு அதிகாரிகள் அவர்களை சந்தித்து உறுதி கொடுக்கும்போது அத்தகைய போராட்டங்கள் முடிவுக்கு வரும். வரலாற்றில் பல முறை இத்தகைய போராட்டங்களை நேரில் பார்த்திருக்கிறோம். ஆதலால் இது புதிய வடிவமும் அல்ல, ஜனநாயகத்துக்கு புறம்பான வடிவமும் இல்லை. தொடர் போராட்டங்கள் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறையினர் போராட்டம் நடத்த அனுமதி தருவார்கள் என்று அந்த மக்கள் கடந்த 10 நாட்களாக காத்துக்கிடந்துள்ளார்கள். 

 

jhk



இந்நிலையில், இடைப்பட்ட இந்த நேரத்தில் 28ம் தேதி வரை எந்த போராட்டமும் நடத்த கூடாது என்று சென்னை காவல்துறையினர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். இது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் உற்றுகின்ற நிகழ்வுதானே. போராட்டம் நடத்த அனுமதி தருவோம் என்று ஒருபக்கம் காவல்துறையினர் பொதுமக்களிடம் உறுதி அளித்து வரும் நிலையில், அதை நம்பி அவர்களும் காத்திருக்கும் சமயத்தில் காவல்துறையினர் இந்த அறிவிப்பை கொடுக்கிறார்கள் என்றால் இது அவர்களின் பாசிசி போக்கை தானே வெளிக்காட்டுகிறது. போராட்டமே நடக்க கூடாது என்று அச்சுறுத்த வேண்டிய தேவை தற்போது என்ன ஏற்பட்டு இருக்கின்றது. ஏதாவது தேர்தல் நேரமா? தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? போராட்டமே நடத்தக்கூடாது என்று சொல்கின்ற அளவுக்கு என்ன அசாதாரண சூழ்நிலை சென்னையில் நிலவுகிறது என்பதை முதலில் கூறுங்கள். எந்த அசம்பாவித சம்பவமும் தமிழகத்தில் இந்த போராட்டதால் நடைபெறாத போது காவல்துறையினர் எதற்காக சென்னையில் போராட்டமே நடக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். எதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள். அதனுடைய காரணம் என்ன? இந்த போராட்டத்தையே நடக்கூடாது என்று முன்கூட்டியே திட்டமிட்டு அந்த மக்களை காவல்துறையினர் ஏமாற்றியுள்ளனர். இதனால் ஏமாற்றபட்ட மக்கள் அந்த இடத்தில் கூடி போராடுகிறார்கள். எங்களுக்கு இடமும் ஒதுக்கிக்கொடுக்கவில்லை, போராட்டத்தையும் தடை செய்ய பார்க்கிறீர்கள் என்று கூறி அவர்கள் இடத்தை விட்டு நகராமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது.

என்ஆர்சி இன்னும் தொடங்கப்படவில்லை, சிஏஏ மூலம் முஸ்ஸிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நடிகர் ரஜினிகாந்த் முதல் தமிழக அமைச்சர் வரை பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நடிகர் ரஜினிகாந்த் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்கள்? அப்புறம் என்ன இதில் பிரச்சனை இருக்கின்றது? 

முஸ்லிம்களுக்கு பாதிப்பென்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால் தொடர்ந்து இவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களே அவர்களை ஏன் போராடும் இடத்திற்கு சென்று ரஜினிகாந்த் நேரில் சந்திக்கவில்லை. தன்னுடைய ஆதரவை அவர் ஏன் அந்த போராடும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசுகிறார். அந்த மக்களை 10 நாட்களாக காவல்துறையினர் அனுமதி கொடுப்பதாகக்கூறி ஏமாற்றி வந்துள்ளனர். அதை பற்றி அவருக்கு தெரியாதா, என்ன நடவடிக்கை எடுத்தார். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்தானே இவர். அவர்கள் வாக்களித்துதானே இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் போராட்டத்தை காவல்துறையினர் ஒடுக்கும் போது அதற்கு எதிராக இவர்கள் யாரேனும் பேசியிருக்கிறார்களா என்றால் அதை பற்றி இவர்கள் வாய் கூட திறக்கமாட்டார்கள் என்பதே நிஜம். 


 

 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!