Skip to main content

ட்ரம்பிடம் சாவர்க்கர் சிலையை காட்டியிருக்கலாமே ஏன் காந்தி சிலையை காட்டினீர்கள் - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

Published on 27/02/2020 | Edited on 28/02/2020

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் சில தினங்களாக நடைபெற்ற வன்முறையில் 30க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

அமெரிக்க அதிபரும், இந்திய பிரதமரும் சந்திக்க இருந்த தினத்தில் குடியுரிமை விவகாரத்தை மையப்படுத்தி இந்தியாவை கலவர பூமியாக காட்ட இஸ்லாமியர்கள் முயற்சி செய்ததே இந்த கலவரத்துக்கு காரணம் என்று வலதுசாரி சிந்தனையாளர்கள் கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு விருந்தினர் வருகின்ற போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செய்வார்கள் என்பது இந்த விவகாரத்தில் வலதுசாரிகளின் கேள்வியாக இருக்கின்றது. ஒடிசாவில் பாதிரியார் ஒருவரை உயிரோடு எரித்துக்கொன்றார்களே அவர்கள் யார், அவர்களும் இந்த நாட்டிற்கு விருந்தினர்களாக வந்தவர்கள் தானே? அதனால் இவர்களுக்கு 
அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. அந்த வழக்கில் தொடர்புடையவர் தற்போது எங்கே இருக்கிறார். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து கொண்டிருக்கிறார். அதனால் விருந்தினர் வருகையை பற்றி இந்த கும்பல் ஏன் கவலைப்பட போகின்றது. விருந்தினர்களையே போட்டுதள்ளிய கும்பல் தான் இந்த கூட்டம். அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் எதையாவது அவர்கள் காட்ட வேண்டும். இவர்கள் உருவாக்கிய எதையாவது அவர் பார்க்க வேண்டும். அவர்கள் உருவாக்கிய எதை அவரிடம் இவர்களால் காட்ட முடியும். 3000 கோடி ரூபாய் பணத்தில் பட்டேல் சிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை அவரிடம் காட்ட முடியுமா? சாவர்க்கர் நினைவிடத்திற்கு அவரை அழைத்து சென்றார்களா? 
 

jh



ட்ரம்ப் எதையெல்லாம் பார்த்தார். அவர்களின் கொள்கைக்கு நேர் எதிரான மகாத்மா காந்தி நினைவிடத்தை பார்த்தார். எதை வரலாற்றின் துயரமாக இதுவரை சொல்லிவந்தார்களோ அந்த தாஜ்மஹாலைத்தான் முதலில் பார்த்தார். எந்த தாஜ்மஹாலை இடிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்களோ அந்த தாஜ்மஹாலைத்தான் யோகி ஆதித்யநாத் ட்ரம்புக்கு நினைவு சின்னமாக கொடுத்தார். எந்த தாஜ்மஹாலை அவமானம் என்று சொல்லிவந்தார்களோ, காந்தியை சுட்டுக்கொன்றவனை தேசபக்தர் என்று சொன்னார்களோ அவர்களே அந்த தாஜ்மஹாலுக்கும், காந்தி நினைவிடத்துக்கும் ட்ரம்புடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட அடையாளம் தான் இந்தியாவின் அடையாளம் என்று அமெரிக்க அதிபர் சொல்லிவிட்டு சென்றுள்ளார். உலகம் இந்தியாவை இதன் வழியாகத்தான் பார்க்கிறது என்று குறிப்பெழுதிவிட்டு சென்றுள்ளார். இந்த விஷயங்களில் எல்லாம் அவர்களுக்கு முரண்டாடுகள் இருந்தாலும், ஆத்திரம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதை போல் நடிக்கிறார்கள். 

ஏன் ட்ரம்பிடம் சாவர்க்கர் சிலையை காட்டியிருக்கலாமே? ஏன் காட்டவில்லை, ட்ரம்பிடம் உங்களிடம் நாங்கள் எப்படி அடிமையாக இருந்தோமே அதைப்போல உங்களின் முன்னோர்களிடம் இவர் அடிமையாக இருந்தார் என்று சொல்லியிருக்கலாமே? அதை அவர்கள் ஏன் செய்யவில்லை. சங்கிகளிடம் என்ன வரலாறு இருக்கின்றது. 100 வருடங்களில் அவர்கள் தங்களின் வரலாறாக என்ன உருவாக்கி வைத்துள்ளார்கள். கலவரம், கடையுடைப்பு, அண்டா திருட்டு இவைகளை மட்டும் தான் அவர்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை தாண்டிய வரலாறு அவர்களுக்கு என்ன இருக்கின்றது. அப்படி எதுவுமே இல்லாத காரணத்தால்தான் இன்று அவர்களுக்கு இத்தனை ஆண்டுகாலமாக பிடிக்காத நபர்களின் நினைவிடங்களுக்கும், பிடிக்காத கட்டடங்களுக்கும் ட்ரம்பை அழைத்து கொண்டு சென்றுள்ளார்கள். இதுதான் சங்ககளின் வரலாறு, அதைத்தாண்டி அவர்களிடம் வரலாறு என்று சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. 
 

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணுபிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும்,  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.  பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிக மிகுந்த மோசமான உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும் பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும், ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார் அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.  இந்த பிரச்சார கூட்டத்தின் வாயிலாக நான் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி. ராஜ்யசபா உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் இருந்து  வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போது தான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது.  அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதை காண முடிந்தது.

பாஜக அரசை  எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய பங்காற்றுகிறார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்றை எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க சிறப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் கவர்மெண்ட் நிச்சயம் மேற்கொள்ளும்.

தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால், மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால் உலக அளவில் குருடாயில் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது.  இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்சி எஸ்டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம் . இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன்,  காங் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.