Skip to main content

கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் தனி மனிதத் தாக்குதலை முன்னெடுப்பார்கள்- ஆளூர் ஷாநவாஸ் பேச்சு!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

io


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
 


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் பேசிய ஜோதிமணி, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இந்தக் கரோனா நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பிரதமர் உள்ளிட்டவர்களைப் பொதுமக்கள் கல்லால் அடித்திருப்பார்கள் என்று பேசினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

"ஜோதிமணி மோடி குறித்து தனிமனித தாக்குதல் செய்யவில்லை. 'பப்பு' எனச் சொல் என்று குழந்தையைச் சொல்லச் சொல்லி தனிமனித தாக்குதலை முதலில் செய்தவர் பிரதமர் மோடி. அவர்கள் தனிமனித தாக்குதல் என்று சொல்வதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ராகுல் ஒன்றும் மோடியைப் பார்த்து தனிமனித தாக்குதல் செய்யவில்லை. சோனியா காந்தியை இத்தாலி இறக்குமதி என்று பா.ஜ.க.-வினர் இன்றைக்கும் பேசி வருகின்றது. ஆனால் அதுகுறித்து சோனியா காந்தி இதுவரை பேசியதில்லை. எனவே நாகரிகத்தைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி யாருக்கும் பாடமெடுக்கும் இடத்தில் பா.ஜ.க. இல்லை. அவர்களுக்கு அந்தத் தகுதி எப்போதும் இருந்தது இல்லை. விவாதங்களில் அவர்கள் கட்டற்று பேசுகிறார்கள். என்ன நினைக்கிறார்களோ அதைப் பேசுகிறார்கள். அநாகரிகமாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். 
 

 


அவர்களுக்கு விவாதங்களின் மீது நம்பிக்கை கிடையாது. ஊடகங்களில் போய்த் தகராறு செய்வதும், தொலைக்காட்சி அலுவலகங்களின் மீது அவர்கள் ஆதராளர்கள் தாக்குதல் நடத்துவது என்றும் தொடர்ச்சியாக இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அவர்களுக்கு அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கவே விருப்பம் இல்லை என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மையாக இருக்கிறது. கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் இந்த மாதிரி தனி மனிதத் தாக்குதலை முன்னெடுப்பார்கள். கரு. நாகராஜன் தொலைக்காட்சி விவாதங்களில் எப்படி எல்லாம் நடந்து கொண்டுள்ளார் என்ற வீடியோக்கள் தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகிக் கொண்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் திருமுருகன் காந்தியைத் தேவையில்லாமல் வம்பிழுக்கும் காட்சியை அனைவரும் பார்த்திருப்போம். இப்போது ஜோதிமணி கூறிய ஒரு வார்த்தையைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் இவர்கள், திருமுருகன் காந்தி நாகரிகமாகத்தானே பேசி கொண்டு வந்தார். அவர் என்ன மோடியைத் தரக்குறைவாக பேசினாரா, அவரை ஏன் அவமானப்படுத்த முயன்றீர்கள். இந்த மாதிரியான ஆட்கள் மக்கள் முன் நிச்சயம் தலைகுனிவார்கள்" என்றார்.

 

 

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.