Skip to main content

"விவாதங்களில் நம்பிக்கை இல்லாத பா.ஜ.க.வினர் நம்மைச் சீண்ட பார்க்கிறார்கள்" - ஆளூர் ஷாநவாஸ் பேச்சு!

Published on 22/05/2020 | Edited on 27/05/2020

 

jh


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
 


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் பேசிய ஜோதிமணி, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இந்தக் கரோனா நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பிரதமர் உள்ளிட்டவர்களைப் பொதுமக்கள் கல்லால் அடித்திருப்பார்கள் என்று பேசினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

எட்டுவழிச்சாலை தொடர்பாக பேசிய மன்சூர் அலி கான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் எட்டு பேரை வெட்டுவேன் என்று பேசி இருந்தார். அவர் எட்டுப்பேரை வெட்டக்கூடிய ஆளா? வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பேசினார் என்று அவரை கைது செய்தீர்கள். ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை அறுப்பேன் என்று கூறினாரே அதை எந்தப் பட்டியலில் வைப்பீர்கள். வைரமுத்துவின் தலை இந்நேரம் தரையில் உருண்டிருக்க வேண்டாமா என்று ஹெச்.ராஜா கேட்டாரே, அதை எந்தப் பட்டியலில் சேர்ப்பீர்கள். இந்துக்களைப் பற்றி இனி யாரேனும் பேசினால் அவர்களின் தலையை எடுத்து வர வேண்டும் என்று நயனார் நாகேந்திரன் பேசினாரே அதை எந்தப் பட்டியலில் சேர்க்க முடியும். 
 

 


என்னால் இது மாதிரி பெரிய பட்டியல் போட முடியும். ஆனால் அவர்கள் மீது எல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும் என்ற நேரடி பொருள்பட ஜோதிமணி பேசவில்லை. நாங்கள் உதவி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் தன்னுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அதை அவர் தவிர்த்திருக்கலாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஏனென்றால் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறதோ அப்படி நாம் ஆகிவிட கூடாது என்பதே நம்முடைய நிலைப்பாடு. எனென்றால் நாம் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. நாம் எப்போது தவறாகப் பேசி அவர்கள் வலையில் விழுவோம் என்று காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் நாம் வலை விரித்து அவர்களை நம் வலையில் விழ வைக்க வேண்டும். 

எனென்றால் உரையாடல்களின் மீது அவர்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனால், ஜோதிமணிக்கோ, நமக்கோ, காங்கிரஸ் தரப்புக்கோ உரையாடல்களின் மீது நம்பிக்கை இருக்கின்றது. எப்படிப்பட்ட விவாதங்களிலும் நம்முடைய கருத்தை எடுத்து வைக்கலாம் என்ற எண்ணம் உடையவர்கள். ஆனால் அவர்கள் அப்படிப்பட்டவர்களா என்றால் நிச்சயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை. நம்முடைய வாயில் இருந்து ஒரு வார்த்தையைப் பிடுங்கி அதை வைத்து அரசியல் செய்யப் பார்ப்பார்கள். அவர்களின் எண்ணத்திற்கு நாம் துணை போகிவிடக் கூடாது.
 

http://onelink.to/nknapp


ஜோதிமணியின் ஒரு வார்த்தை அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொல்வதும், இல்லையென்றால் அந்த அரங்கை விட்டு வெளியேறுவது தானே ஜனநாயக முறை. அதை ஏன் அவர் செய்ய மறுத்தார். ஆனால் கரு.நாகராஜன் எந்த எல்லைக்கும் சென்றார். ஜோதிமணி அரசியல் ரீதியாக வைத்த விமர்சனத்துக்குப் பதில் சொல்லாமல் தனி மனித தாக்குதலுக்கு அவர் சென்றார். இது கண்டிக்கத்தக்க ஒன்று. இதனை பா.ஜ.க. தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது, என்றார்.

 




 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.