Skip to main content

கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? அதிமுகவின் அறிவிப்பால் அரண்டுபோய் நிற்கும் கூட்டணிக் கட்சிகள்

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

 

கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியின் தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவை இருந்தன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேலூர் பாராளுமன்றத் தேர்தலிலும், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாமக, தேமுதிக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பாஜக இந்த இரு தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. பாஜக பிரச்சாரத்திற்கு வராமல் இருந்தாலே நல்லது என்று அதிமுகவும் நினைத்திருந்தது.

 

o panneerselvam and edappadi palanisamy


 

இந்த நிலையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியானதால், பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு செல்வாக்கான இடங்கள் மற்றும் இத்தனை இடங்களை தங்களுக்கு ஒதுக்கினால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பட்டியலை அளித்திருந்தன.

 

கடந்த 6ஆம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், கூட்டணி கட்சிகளிடம் எப்படி பேச வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு எந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் எந்த இடத்தில் அதிமுக போட்டியிடலாம். யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பட்டியலை தயார் செய்து அனுப்புகள் என்று அறிவுறுத்தி இருந்தனர்.


 

 

கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் சொன்னதை வைத்து, கூட்டணி கட்சியினர் தேர்தலில் இடம் ஒதுக்குவது சம்மந்தமாக குழு அமைக்கப்பட்டு அவர்கள் நம்மிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் திடீரென கடந்த 10ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. 


 

 

அதில், உள்ளாட்சித் தேர்தலில் மேயர், மாநராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்றத் தலைவர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 15, 16ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளனர். 
 

திடீரென இந்த அறிவிப்பு வெளியானதால் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரண்டுபோய் உள்ளன. கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய எந்த இடத்தையும் அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க தயாராக இல்லையா? என்று கூட்டணிக் கட்சிகள் கடும் அப்செட்டில் உள்ளன. 

 

bjp-dmdk-pmk-tmc


 

அதிமுகவின் மேலிட தலைவர்களை தொடர்புகொண்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பேச்சுவாத்தையை தொடங்கும்போதே வரும் சட்டமன்றத் தேர்தல்வரை இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். அதற்கு நாங்களும் ஒப்புக்கொண்டோம். வேலூர் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்களில் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். உள்ளாட்சித் தேர்தலோடு நமது கூட்டணி முடிந்துவிடப்போவதில்லை. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் உங்களைத்தான் ஆதரிப்போம். கூட்டணி வலிமையாகத்தான் உள்ளது. அப்படியிருக்கும்போது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வராமலேயே, கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய அனைத்து இடங்களுக்கும் விருப்ப மனு வினியோகிக்கப்படுவதாக அறிவித்திருப்பது எங்கள் கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என்று தொண்டர்கள் எங்களை கேள்வி எழுப்புகிறார்கள். நீங்கள் எங்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை திருப்திப் படுத்தும் வகையில் சில இடங்களை ஒதுக்கினால் நன்றாக இருக்கும்'' என்று சொல்லி வருகிறார்களாம். 
 

ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு சென்றுள்ளார். முதலமைச்சர் அவர் சார்ந்த பணியில் பிஸியாக இருக்கிறார். நீங்கள் உங்கள் பட்டியலை மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்து இறுதி செய்யுங்கள். தேர்தல் தேதி அறிவிக்கட்டும், ஓ.பன்னீர்செல்வமும் வரட்டும் பேசிக்கொள்ளலாம் என்று அதிமுக மேலிட தலைவர்கள் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

 

Next Story

அனல் பறக்கும் தேர்தல் களம்; தி.மு.க.வில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Important announcements in DMK for lok sabha election

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

Important announcements in DMK for lok sabha election

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, பெரம்பலூர், கோவை, ஈரோடு, தென்காசி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை நாளை (20.03.2024) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படுகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் பயணித்து மக்களை நேரில் சந்தித்து, கருத்துக்களைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் நாளை காலை வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். அதற்கு மறுநாளான 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். 

Next Story

முதல்வரின் உத்தரவு; ஒரு மணி நேரத்தில் ஓடோடி வந்த அதிகாரிகள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Padma Sri Chinnapillai's manai patta was searched for in an hour

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டுமான பணியானது இந்த மாதமே தொடங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் மதுரை சின்னப்பிள்ளைக்கு ஒரு சென்ட் மனைக்கான  கூடுதல் பட்டா அவரைத் தேடிச்சென்று அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.