Skip to main content

உங்களை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடமாட்டேன்! நீயா? நானா? அ.தி.மு.க பவர் ஃபைட்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

sss

 

என்னை அசிங்கப்படுத்தறார் அமைச்சர் என அ.தி.மு.க.வின் மாநில நிர்வாகியான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தலைமையிடம் புலம்பியுள்ளார். துணை முதல்வர் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை தீராமல், உங்களை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஒருவர் களமிறங்க, பரபரப்பாகவே உள்ளது திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.

 

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக 'தூசி' மோகனும், வடக்கு மாவட்டத்துக்குள் வரும் ஆரணி தொகுதியின் எம்.எல்.ஏவாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனும் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து ஆரணி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ, வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளர் பாபுமுருகவேலை ஒதுக்குகிறார்கள் என்கிற குரல்கள் வருகின்றன. கடந்த வாரத்தில் ஆரணி நகரில், வடக்கு மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிக்கு நிர்வாகிகள் நியமனத்துக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த பாபுமுருகவேல், மா.செ 'தூசி' மோகனிடம், என்னை எதுக்குக் கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் அழைப்பதில்லை எனக் கேட்டுள்ளார்.

 

ddd

 

"நான் ஏன் உன்னை அழைக்கனும் என மா.செ பதில் சொல்ல. நானும் கட்சியில மாநில நிர்வாகியா இருக்கன். நீ மாநில நிர்வாகினா, அங்க நடக்கறதில் போய் கலந்துக்க, உன்னை இங்க அழைக்க முடியாது" எனக் காரசாரமாக விவாதமானது. அடுத்ததாக ஆரணி ஒ.செ சேகர், கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்டு பாபுமுருகவேல் வந்துள்ளார். அவர் வருவதைக் கேள்விப்பட்டு அந்த நிகழ்ச்சியை அமைச்சரும், மா.செவும் ரத்து செய்துள்ளனர். அதற்கு முன்பு இளைஞர் - இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த பாபுக்கு மேடையில் நாற்காலி தராமல் அவமானம் செய்தனராம்.

 

dddd

 

இதுபற்றி கட்சி முக்கியஸ்தர்களிடம் நாம் கேட்டபோது, பாபுமுருகவேலுக்கு ஆரணி பூர்வீகமாக இருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதால், சென்னையில் செட்டிலாகிவிட்டார். 2011 -இல், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக ஜெயித்து அ.தி.மு.கவுக்கு வந்தவர். தொகுதிப் பக்கம் வரமாட்டார். ஓ.பி.எஸ் சைடிலிருந்து இ.பி.எஸ் ஆதரவாளராக ஆனவருக்கு ஆரணியில் போட்டியிடும் ஆசை வந்துவிட்டது. அதனால்தான் அமைச்சரும், மா.செவும் தடுக்கிறார்கள். அதற்குக் காரணம், பாபுமுருகவேலை இயக்குவது அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், முன்னாள் மா.செவும், அமைப்புச் செயலாளருமான முக்கூர்.சுப்பிரமணி தான்.

 

Ad

 

கடந்த காலங்களில் முக்கூர் சுப்பிரமணியிடம்தான் சேவூர் ராமச்சந்திரனும் தூசி மோகனும் இருந்தனர். அரசியல் காற்று சுழற்றி அடித்ததில் இப்போது அவர்கள் கை ஓங்கிவிட்டது. 3 ஆண்டுகள் பொறுமையாக இருந்த முக்கூர் இப்போது இ.பி.எஸ்ஸிடம் நெருங்கி அமைப்புச் செயலாளராகி, மறுபடியும் அரசியலைக் கலக்க, பாபுமுருகவேலைக் கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்.

 

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வர் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்தபோது, முதல்வரை வரவேற்கவோ, நெருங்கவோ முக்கூர்.சுப்பிரமணியை அனுமதிக்கக் கூடாது, அப்படி நடந்தால், ஒதுங்கியுள்ள, தன்மீது அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகள் அவர் பின்னால் திரளுவார்கள் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மா.செ மோகன் இருவரும் திட்டமிட்டு, அவர் பெயரை பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால் முதல்வர் அலுவலக உத்தரவுப்படி மக்கள் பிரதிநிதிகளாக இல்லாத முக்கூர் சுப்பிரமணி, பாபுமுருகவேல் இருவர் பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் முதல்வருடன் அனுமதிக்கப்பட்டனர். இது அமைச்சர், மா.செ தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்கிறது அ.தி.மு.க தரப்பு.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.