Skip to main content

"பேச தெரியலனா அமைதியா உட்காருங்க..."  -அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி குட்டு...!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

 

தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பிரதிநித்துவமாய் ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு அமைச்சர்கள். ஒருவர்  சீனியரான செங்கோட்டையன். மற்றொருவர் ஜூனியரான கே சி கருப்பண்ணன். செங்கோட்டையன் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக உள்ளார். ஆனால் கருப்பண்ணனோ நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல் பொது இடத்தில் அந்த இடமறிந்து தான் வகிக்கிற பொறுப்பை உணராமல் உளறிக் கொட்டுவதும், தாரை தப்பட்டை சவுண்ட்டு கேட்டால் குத்தாட்டம் போடுவதாகவும் உள்ளார். 

 

admk



அப்படிப்பட்ட கருப்பண்ணன் சென்ற மூன்று, நான்கு நாட்களாக ஊர் பக்கமே தென்படாமல் வீட்டுக்குள் முடங்கியிருந்துள்ளார். அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் சீனியர் அமைச்சரான செங்கோட்டையன் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார். கருப்பணன் கூட்டங்களுக்கு வராதது ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

பின்னோக்கி பார்ப்போம். முதலில் இந்த கருப்பண்ணன் அமைச்சரானது தனி கதை. அதையும் தெரிந்து கொள்வது இச்செய்திக்கு பொறுத்தமாக இருக்கும். 2016ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைந்தபோது, யார் யாரெல்லாம் அமைச்சர்கள் என்ற பட்டியலை தயாரித்து அதன்படி அமைச்சரவையை அமைத்தவர் தற்போது சிறையில் உள்ள சசிகலா மற்றும் சசிகலாவின் குடும்பம்தான். அந்த அதிகார மையங்களில் ஒன்றாக இருந்தவர் சசிகலாவின் சகோதரர் மன்னார்குடி திவாகரன். இந்த திவாகரன் மூலம்தான் கொடுக்க வேண்டியதை கொடுத்து தனக்கு அமைச்சர் பதவியை பெற்றவர் இந்த கருப்பண்ணன். இந்த தகவல் ஈரோடு அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். இப்படி எந்த தகுதியும் பின்புலமும் இல்லாமல் அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டவர் தான் இந்த கருப்பண்ணன். 
 

ஜெயலலிதா உயிரோடு உள்ளவரை கருப்பண்ணன் என்பவர் அமைச்சராக இருக்கிறாரா? என்பது கூட தெரியாது அதன் பிறகு சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கருப்பண்ணனுக்கு சம்மந்தி முறையாக இருந்ததால் மீண்டும் எடப்பாடி மூலம் அமைச்சராக அமர வைக்கப்பட்டார். அதன் பிறகு தன்னை யாரும் கடிவாளம் போட முடியாது என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பொதுவெளியில் பேச தொடங்கினார். 


 

திருப்பூர் பகுதியில் ஓடுகிற நொய்யல் ஆற்றில் அங்கு உள்ள சாய விஷக் கழிவுகள் நுரை போல் படர்ந்து வந்ததை பத்திரிக்கையாளர்கள் "நீங்கள் தானே சுற்றுச்சூழல் அமைச்சர் இப்படி சாயக்கழிவுகள் வருகிறதே?  என்று கேள்வி எழுப்பிய போது "அடபோங்கப்பா திருப்பூர் கோயம்புத்தூர்காரங்க எல்லாம் நெறையா சோப்பு போட்டு குளிக்கறாங்க அந்த நொறை தான் இது" என்று விவரம் கெட்ட முறையில் பேசினார். 
 

சென்ற ஒரு வாரத்திற்க்கு முன்பு சத்தியமங்கலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் உள்ளாட்சி மன்றத்தில் திமுககாரங்க வெற்றி பெற்று வந்தாலும் அந்த உள்ளாட்சிக்கு நிதி கொடுப்பது நம்ம ஆட்சிதான். அப்படி இருக்கும்போது திமுக உள்ளாட்சி மன்ற உறுப்பினர் பகுதிகளுக்கு குறைவான நிதியை தானே கொடுப்போம் என உளறி கொட்டினார். ஒரு அமைச்சராக இருந்து இதுபோன்று பாரபட்சமாக பேசுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றுகூட அறியாமல் வாய்க்கு வந்ததை கொட்டினார். இந்த தகவல் அரசியல் மட்டத்தில் விவாதப் பொருளானது. 
 

திமுக பொருளாளர் துரைமுருகன் கருப்பண்ணனின் இந்த பாரபட்சமான பேச்சுக்கு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார். ஆளுநர் மாளிகை இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்டது. இந்த நிலையில்தான் அமைச்சர்களை அழைத்து பொதுவெளியில் சம்பந்தமில்லாமல் பேசுவதை நிறுத்துங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். அப்போது கருப்பண்ணனுக்கு என்ன நடந்தது என்பதை கொங்குமண்டல எம்எல்ஏக்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.


 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருப்பண்ணனை பார்த்து "ஆரம்பத்துல நீங்க எப்டி எப்டியோ இருந்தீங்க. எனக்கு எல்லாமே தெரியும். இப்ப கல்வி நிலையம் நடத்திக்கிட்டு இருக்கீங்க. அங்க இருக்கிற ஆசிரியர்களிடம் மாணவர்களிடம் அதட்டலாம், உருட்டலா பேசலாம். அது உங்க சொந்த விஷயம். ஆனால் நீங்க ஒரு அமைச்சர். அமைச்சர் பதவினா என்னென்னு முதல்லே தெரியுமா? அந்த பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? பேச தெரியலனா அமைதியா உட்கார்ந்து கோனும், ஏதேதோ பேசிவிட்டு அதனால சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடாது. இனிமேல் நீங்க எதையுமே பேச வேண்டாம். இப்படி மறுபடியும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அப்புறம் அமைச்சர் பதவியில் இருக்க முடியாது தெரிஞ்சுக்குங்க... என்று கூறியிருக்கிறார் மிகவும்  கடுமையாக என்றனர்.
 

அதன் பிறகு சொந்த ஊர் வந்த கருப்பண்ணன் சில நாட்களாக வீட்டில் அமைதியாக படுத்து விட்டார். வெளியே வராமல் இருக்க முடியாமல் தவித்த ககருப்பண்ணன் அமைச்சர் செங்கோட்டையனை வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டு "அண்னே வெளியில வராம ரொம்ப கஷ்டமா இருக்குது, நானும் நிகழ்ச்சிகளுக்கு வரேன் என கேட்க, சரி அமைதியா வந்துட்டு அமைதியா போகனும், எதுவும் பேசக்கூடாது என்ன? என்று கேட்க, மூச்சே விடமாட்டேன் என கூறியிருக்கிறார் கருப்பண்ணன். இதன் பிறகே இன்று வெள்ளிக்கிழமை முதல் செங்கோட்டையன் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில் வாயில் பிளாஸ்திரி போட்டது போல் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார் கருப்பண்ணன் என்கிறார்கள் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினர்.

 

 

 

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Strong room CCTV camera malfunction; Sensation in Erode

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இதனையடுத்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாட்டுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிர்ஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.