Skip to main content

எந்தக் கூட்டணிக்கும் விசுவாசம் இல்லாத பாமக! -திருமாவளவன் பேட்டி

Published on 19/02/2019 | Edited on 19/02/2019



2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். 
 

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இடம்பெறுவதற்கான முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

இது எதிர்பார்த்ததுதான். இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் கிடையாது. வழக்கம்போல இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். எந்தப் பக்கம் பேரம் படிந்ததோ அந்தப் பக்கம் போயிருக்கிறார்கள். இது திமுகவுக்கும் தெரியும், அதிமுகவுக்கும் தெரியும். திமுகவிடம் பேசிக்கொண்டே அதிமுகவிடம் பேரத்தை உயர்த்துவம், அதிமுகவிடம் பேசிக்கொண்டே திமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும்தான் அவர்களுடைய அரசியல் யுத்தி. அந்த வகையில் அதிமுகவுடன் பேரம் படிந்ததால் அவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது. 

 

thol thirumavalavan

 

இது அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்ப்பது என்பதைவிட பலவீனமாகத்தான் அமையும். மாநிலத்தில் அதிமுக ஆளும்கட்சி. மத்தியில் ஆளும் கட்சி பாஜக. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிரான உளவியல் எப்போதும் மக்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிர்வாகத் திறன் இல்லாத ஆட்சியாக உள்ளது. மத்திய அரசைப் பொறுத்தவரையில் வெளிப்படையாக மோடி எதிர்ப்பு நிலை பல்வேறு காரணங்களால் இருக்கிறது. ஆகையால் மோடி எதிர்ப்பு நிலை, எடப்பாடி எதிர்ப்பு நிலை, அதோடு எந்தக் கூட்டணிக்கும் விசுவாசம் இல்லாத பாமக இணைப்பு இவையெல்லாம் சேரும்போது அதிமுக அணி பலவீனம் அடையுமே தவிர, பலம் பெறாது. 

 

aiadmk - dmk alliance


 

ஏற்கனவே பாமக வாங்கிய வாக்கு வங்கியை கணக்கு எடுக்கிறார்கள். அந்த வாக்குகள் திமுக, அதிமுக எதிர்ப்பு என்பதை காட்டி வாங்கின வாக்குகள். அந்த நேரத்தில் திமுகவில் உள்ள வன்னியர்கள், அதிமுகவில் உள்ள வன்னியர்கள், மாற்றம் வேண்டும் என நினைத்த அதிமுக - திமுக எதிர்ப்பு வன்னியர்களும் பாமகவுக்கு ஓட்டு போட்டார்கள். இப்போது அதிமுக கூட்டணி என்ற நிலையை அவர்கள் எடுத்தவுடனேயே மற்ற கட்சியைச் சேர்ந்த வன்னியர்கள் தற்போது பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் அதிமுக அணிக்கு எந்த லாபமும் கிடையாது. ஏற்கனவே பெற்ற வாக்குகள் பாமகவுக்கு கிடைக்காது. 
 

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது?
 

இன்னும் பேச்சுவார்த்தை முறையாக தொடங்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகிறது. கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேசும்போது நாங்கள் பேசுவோம். 
 

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லியிருந்தீர்கள். திமுக தலைமை வேறு தொகுதியை ஒதுக்கினால் ஏற்பீர்களா? சிதம்பரம் தொகுதிதான் என உறுதியாக இருப்பீர்களா?
 

அப்படி ஒன்றும் கிடையாது. என்னுடைய சொந்தத் தொகுதி என்பதால் 1999, 2004, 2009, 2014 என தொடச்சியாக நான்கு முறை போட்டியிட்டுள்ளேன். சொந்த தொகுதி என்பதால் என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். இருந்தாலும் கூட்டணி தலைமையிடம் பேசித்தான் முடிவு செய்யப்படும். 
 

உங்கள் கூட்டணியில் இன்னும் யார் யார் எல்லாம் இணையலாம் என விரும்புகிறீர்கள்?
 

அது திமுகவுக்கான அதிகாரம் மற்றும் உரிமை. கூட்டணிக்கு பலம் சேர்க்க யாரிடம் பேச வேண்டும் என்ற கருத்தை நாம் சொல்ல முடியாது. அதனை திமுகதான் முடிவு செய்யும். 
 

விஜயகாந்த்தை பியூஸ் கோயல் சந்திப்பதாக கூறப்படுகிறதே?
 

இதுவும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

 

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.