Skip to main content

தவம் கிடந்த தேமுதிகவை மொட்டையடித்த அதிமுக: மு.ஞானமூர்த்தி

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் செந்துறை (வடக்கு) திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி. 


''தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் எந்த கூட்டணியாக இருந்தாலும் தன்னை வைத்துதான் கூட்டணி பேசுவார்கள் என்று இருமாப்பில் இருந்த தேமுதிகவுக்கு இந்த தேர்தல் கூட்டணி பேச்சு நல்ல பாடத்தை கொடுத்திருக்கிறது. 
 

தன்னைத்தான் முதலில் அழைத்து பேசுவார்கள் என்று இருந்த தேமுதிகவை அழைத்து பேசாமல் பாஜகவுடன் பேசி 5 சீட்டும், பாமகவுடன் பேசி 7+1ம் முடித்ததால் கொதித்துப்போன பிரேமலதா பொங்கி எழுந்தார். 

 

vijayakanth-ops-eps 600


''ஜெயலலிதா எங்களோடு கூட்டணி வைத்ததால்தான் முதலமைச்சர் ஆனார். தமிழ் நாட்டில் 3வது பெரியகட்சியான தேமுதிகவை அழைத்து பேசாமல் பாமகவை முதலில் அழைத்து பேசியது எந்த விதத்தில் நியாயம்?'' என பாஜக மந்திரியிடம் சுதீஷ் மூலம் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், ''அவர்களுக்கு கொடுத்த அளவுக்கு எங்களுக்கும் சீட்டு கொடுக்க வேண்டும்'' என்றும் ''அதே மரியாதையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றும் கேட்டிருக்கிறார். 


 

இப்படி பேச்சுவார்த்தை நீளவே மோடி சென்னை வந்த அன்று திமுகவோடும், அதிமுகவோடும் ஒரே நேரத்தில் தேமுதிக பேசியது ஊடகங்கள் மூலம் தெரியவே பாஜகவினர் அதிர்ந்து இப்படி ஒரு கேபலமான கட்சியை இந்தியாவிலேயே நாங்கள் பார்த்தில்லை என கூறிவிட்டு சென்று விட்டனர். 
 

மறுநாள் எப்படியாவது அதிமுகவோடு சேர்ந்து விடவேண்டும் என்ற நோக்கத்தோடு சுதீஷும், பிரேமலதாவும் மாறி மாறி ஊடகங்கள் மூலம் செய்தி கொடுத்து அதிமுகவுடன் இணையும் முயர்ச்சியை கையாண்டனர். அவர்களும் 18 சட்டமன்ற தொகுதியை மனதில் வைத்து தேமுதிகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டனர். 

 

mg-sendurai-dmk


 

நோட்டு மட்டும் எவ்வளவு வேண்டுமாலும் தருகிறோம், சீட்டு மட்டும் கேட்காதீர்கள் என்ற கட்டளையுடன் 7+1 என கேட்டுக்கொண்டிருந்த தேமுதிகவுக்கு 4 தான் அதுவும் நாங்கள் கொடுக்கும் தொகுதிதான் என மொட்டையடித்து முடித்து விட்டார்கள். 
 

பிரேமலதாவோ சீட்டு அதிகம் வாங்கி கட்சிக்காரர்களுக்கு கொடுத்தாலும் பதவிக்கு வந்ததும் நம்ம பேச்ச கேட்காம வேறு இடத்துக்கு ஓடிவிடுகிறார்கள். அதனால் சீட்டைவிட நோட்டுதான் முக்கியம் என்ற நிலைக்கு வந்துவிட்டார். 
 

எனவேதான் நோட்டாவோடு போட்டி போடும் பாஜக 5 தொகுதியை பெற்றார்கள். 10% வாக்குகள் வைத்திருக்கிறோம் என்கிற தேமுதிக 4 தொகுதியை தவம் கிடந்து பெற்றார்கள்''. இவ்வாறு கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.