Skip to main content

எடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது!!! -எஸ்.எஸ்.சிவசங்கர்

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
ddd

 

 

அதிகாரப்பூர்வமாக எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்", என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார். எடப்பாடி தப்பி விட்டார், அ.தி.மு.க தான் மாட்டிக் கொண்டது என்று அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, "அடிமை அ.தி.மு.க அரசு, அடிமை அ.தி.மு.க அரசு", என ஓயாமல் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி வந்தபோது, அ.தி.மு.க அமைச்சர்கள் வெகுண்டெழுந்து பதிலளித்து வந்தார்கள். நேற்று ஈ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு, அமித்ஷா காலில் வீழ்ந்து, உதயநிதி சொல்லை உண்மையாக்கி விட்டார்கள்.

 

சமீப காலம் வரை, "தேர்தல் வரை தான் கூட்டணி இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை" என்று சில அமைச்சர்கள் சொன்னார்கள். பிறகு, "தேர்தல் வந்தால்தான் கூட்டணி முடிவாகும்", என வேறு சில அமைச்சர்கள் சொன்னார்கள். பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என காட்ட சில வித்தைகளை எல்லாம் காட்டினார்கள். 

 

அந்த வித்தையின் உச்சகட்டம் தான், அ.தி.மு.க அரசு 'அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை கமிஷன்' அமைத்தது என்று சொல்லலாம். சூரப்பா ஓர் ஆர்.எஸ்.எஸ் ஆள். அவரை நியமிக்க சொன்னது பா.ஜ.க தலைமை. நியமித்தவர் கவர்னர். அதனால் சூரப்பா மீதான நடவடிக்கையை தங்களுக்கு எதிரானதாக ஆர்.எஸ்.எஸ் கருத வாய்ப்பு. அதன் எதிரொலி தான் அமித்ஷாவின் பயணமும், அ.தி.மு.கவின் அறிவிப்பும்.

 

இதை எப்படி தொடர்பு படுத்த முடியும் என்ற கேள்வி எழலாம். கேள்வி சரி தான், ஆனால் பதில் அது தான்.

 

'குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்' என்பது போல, உயர்கல்வித் துறை அமைச்சர் மூலம் ஆளுநரை சீண்டி, பா.ஜ.கவின் ரியாக்ஷன் என்ன என்று பார்த்தார்கள். ரியாக்ஷன் அமித்ஷா வடிவில் வந்து விட்டது.

 

பா.ஜ.க அமைதியாக இருந்திருந்தால், கூட்டணி இல்லை என்பதை நோக்கி முன்னேறி இருப்பார்கள். ஆனால் பா.ஜ.க அமைதி கலைத்து விட்டது.

 

இரண்டு கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைக்கும் முன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இருக்கும், அதற்கு பல தயாரிப்புகள் நடைபெறும். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இணைந்த போது அரங்கேறிய காட்சிகளை நினைவு கூர்ந்தால், இந்த கூட்டணி அறிவிப்பின் 'உண்மை நிலை' புரியும்.

 

திடீரென "அமித்ஷா டூரை" அறிவித்தார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். "அரசு நிகழ்ச்சி மட்டும்", என்றார். பிறகு, "கட்சி நிகழ்ச்சியும்", என்றார். 

 

அமித்ஷா கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சியை அவசர, அவசரமாக திட்டமிட்டார்கள். தமிழக அரசின் விழா அது. தமிழக அரசின் எந்த துறை நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த அமைச்சர்களை அறிவிக்க விடாமல், தானே அறிவிப்பதும், தானே விழா நடத்துவதும் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பழக்கம், வழக்கம்.

 

ஆனால் இந்த அரசு நிகழ்ச்சிக்கு அமித்ஷாவை சிறப்பு விருந்தினராக அழைத்தது அ.தி.மு.க. அதை தவிர வேறு வழியில்லை எடப்பாடிக்கு.

 

அதுவும் இது எடப்பாடி கையில் இருக்கும் துறையின் நிகழ்ச்சி. இதிலேயே அமித்ஷா சிறப்பு விருந்தினர் என்றால் இது பல செய்திகளை சொல்கிறது. இந்த நிகழ்வு எடப்பாடி கையில் இருந்து 'அதிகாரம்' அமித்ஷா கைக்கு மாறுவதை காட்டும் 'இண்டிகேட்டர்'.  ஜெயலலிதா உடலை வைத்துக் கொண்டு, அவசர அவசரமாக பதவியேற்றது போல் தான், இந்த அமித்ஷாவின் அவசர பயணமும்.

 

அமித்ஷா விமானத்தில் இருந்து இறங்கியதில் இருந்து தங்கும் அறைக்கு செல்லும் வரையும், அங்கிருந்து விழா நடக்கும் இடத்திற்கு சென்ற வரையிலும் இருபுறமும் அ.தி.மு.கவினர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தது, "அமித்ஷா தான் அடுத்த தலைமை" என்பதை காட்டுகிறது.

 

ஜெயலலிதா, எடப்பாடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போலவே, அமித்ஷாவுக்கு அளிக்கப்பட்டது இதை வெளிப்படுத்துகிறது.

 

dddd

 

அரசு நிகழ்ச்சிக்கு முன், அமித்ஷாவை ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் சந்திக்கவில்லை, நிகழ்ச்சிக்கு பிறகே சந்தித்தனர். அதனால், நிகழ்ச்சிக்கு முன்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. பேச்சுவார்த்தை இல்லாமல், நேரடியாக நிகழ்ச்சியில், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்", என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார்.

 

டெல்லியில் இருந்து வந்த கட்டளைப்படி, "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி"யை அறிவித்தார்கள் இவர்கள். அடிமைகள் அடிபணிந்ததை அமித்ஷா ஆனந்தமாக தலையசைத்து ஏற்றுக் கொண்டார். 

 

கூட்டணியை அறிவித்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். சில நாட்களுக்கு முன் கவர்னர் டெல்லி சென்றது நினைவிருக்கும், அப்போது கவர்னர் கொடுத்த "சீக்ரெட் பைல்கள்" அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல்கள், கொள்ளைகள், கோல்மால்களை பட்டியலிட்டன. அது குறித்த "எச்சரிக்கை தகவல்கள்" தான் எடப்பாடியை மீண்டும் "தெண்டனிட" வைத்தது. அவருக்கு அது பழக்கமானது தானே. ஏற்கனவே சசிகலா காலை நோக்கி தவழ்ந்து தான் முதல்வரானார். இப்போது அமித்ஷா காலில் வீழ்ந்து "ரெய்டுகளில்" இருந்து தப்பி உள்ளார். எடப்பாடி தப்பி விட்டார், அ.தி.மு.க தான் மாட்டிக் கொண்டது. இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.