Skip to main content

ஆடு மேய்ச்சா ஆளா போகலாம்... படித்த இளைஞரின் விவசாய நம்பிக்கை...

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

Village


எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் விவசாயம் நலிந்து வருகிறது, அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், அப்போது அமைச்சரவையில் இருந்த ஒருவர், விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது. தொழிற்சாலைகளுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று பேசினார். 
 

இதை கேள்விப்பட்ட நாராயணசாமி நாயுடு, 'இந்த அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவரும் காலையில் எழுந்தவுடன் காபியும் டிபனும் சாப்பிடுவார்களா அல்லது தொழிற்சாலையில் உருவாகும் நெட்டு போல்டு போன்றவைகளை சாப்பிடுவார்களா?' என்று கேள்வி கேட்டு ஆட்சியாளர்களை திக்குமுக்காட வைத்தார். 
 

அரசுகள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தராமல் மிகவும் நலிந்து போய் உள்ளது இந்திய மக்கள் தொகை 140 கோடி. இந்த நேரத்திலும் விவசாயத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அங்கேயும் இயந்திரமயமாகி வருகின்றது. அப்படியும் விவசாயிகள் உணவு உற்பத்தி செய்து இந்த நாட்டு மக்களுக்கு உண்ண உணவு கொடுத்து வருகிறார்கள்.  
 

இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. டாக்டர் படித்த பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை, பொறியாளர் பெண்ணுக்கு பொறியாளர் மாப்பிள்ளை, அரசுப் பணியில் இருந்தால் அதே அரசுப் பணியில் உள்ள மாப்பிள்ளை, ஆசிரியையாக இருந்தால் ஆசிரியர் மாப்பிள்ளை இப்படி கிராமத்தில் மாடுகளுக்கு ஜோடி தேடுவது போல் வசதி படைத்தவர்கள் நகரத்தில் வாழ்பவர்கள் மணவாழ்க்கைக்கு ஜோடி தேடிக் கொண்டிருந்தார்கள்.
 

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் விவசாயிகள் மீதும், அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் மீதும் ஒரு மரியாதை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இப்போது இந்தக் கரோனா வந்த பிறகு வெளிநாடுகளில் வேலை செய்த தங்கள் பிள்ளைகளைப் பற்றி பெருமையாகப் பேசிய பெற்றோர்கள் எல்லாம் இப்போது தங்கள் பிள்ளைகள் வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை இங்கேயே இருந்திருக்கலாம் என்று புலம்புகின்றனர்.
 

அதேபோன்று கிராமத்தில் வாழ்ந்த சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கூட விவசாய வேலை செய்தவர்கள், அதை வெறுத்து நான் டவுனுக்கு போயி மூட்டை தூக்கியாவது பிழைத்துக் கொள்வேன் என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது கால் வயிறு, அரைவயிறு கஞ்சி குடித்தாலும் பரவாயில்லை எனக் கிராமத்தை நோக்கிப் போகிறேன் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
 

அதற்குக் காரணம் கரோனாதான். மேலும் அயல்நாடுகளில் வேலை செய்து வந்த பலர் கரோனா பாதிப்பால் வேலை இல்லாமல் நம் நாட்டுக்குத் திரும்பபோகிறார்கள். இவையெல்லாம் இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் உண்மைகள். அதனால் இப்போது நகரத்தில் கிராமத்தில் உள்ள படித்த பெண்கள் விவசாயக் குடும்பத்து மாப்பிள்ளைகளை தேர்ந்தெடுக்க முன்வந்திருக்கிறார்கள். 
 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல விவசாயக் கிராமங்களில் விவசாய மாப்பிள்ளைகளுக்கு இப்போது மதிப்பு அதிகமாகி உள்ளதாம். அங்குள்ள திருமண தகவல் மையங்கள், விவசாயக் குடும்பத்தில் பிள்ளைகள் இருந்தால் சொல்லுங்கள் நாங்கள் பெண் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று பல பெற்றோர்கள் திருமண தகவல் மையங்களில் பதிவு செய்து வருகிறார்களாம்.
 

Village


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டயப்படிப்பு படித்து வரும் சின்னப்பா மகன் வெங்கடேசன் (வயது 18), விவசாயத்தில் ஈடுபட்டு ஆடு, மாடுகள் வளர்ப்பதைத் தனது லட்சியமாகக் கொண்டுள்ளார். 
 

உலக கால்நடைகள் தினத்தை முன்னிட்டு கால்நடைகளைப் போற்றும் விதமாகத் தங்களது வீட்டில் இருக்கும் 2 பசுமாடுகள் மற்றும் 2 கன்று குட்டிகளுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து மாவிலையில் தோரணம் செய்து அலங்காரம் செய்து வணங்கினார். கரோனா காலத்திலும் கால்நடைகளைப் போற்றும் விதமாக இளைஞரின் இந்தச் செயல் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 

நம்மிடம் அவர் பேசும்போது, படித்து முடித்தவுடன் விவசாயத்தில் கவனம் செலுத்தப்போகிறேன். இளைஞர்கள் பலரும் விவசாயம் செய்ய முன் வர வேண்டும் என்பதே கரோனா கற்றுத்தந்துள்ள பாடம். எங்ககிட்ட 5 ஏக்கர் நிலம் இருக்கு. கடலை போட்டு அறுவடை முடிச்சோம். இப்போ எள் போட்டிருக்கோம். நம்ம கிட்ட தொழில் இருக்க, நாம ஏன் கைகட்டி நிக்கணும். படித்தவர்கள் விவசாயத்துக்குத் திரும்பணும். மனிதன் உயிர் வாழ அவசியம் விவசாயம் மட்டுமே எனக் கரோனா பாடம் கற்பித்திருக்கு. எனது உறவினர்கள் பலரும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஊர் திரும்ப உள்ளனர். 
 

கூழோ கஞ்சியோ நம்ம வயலில் விளைந்தத வச்சி சாப்பிட்டுக்கலாம். உள்ளூரிலேயே பாதுகாப்பா இருக்கலாம். உறவினர்களோடும் பெற்றோர்களுடனும் அருகில் இருப்பதே மிகப்பெரிய பாதுகாப்பு. ஆடு மேய்ச்சா ஆளா போகலாம்... மாடு மேய்ச்சா மனுசனா போகலாம்... என்றார் மாணவர் வெங்கடேசன்.


விவசாயக் குடும்பத்து இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க முன்வரமாட்டார்கள். காரணம், விவசாயக் குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு மகளைக் கட்டிக் கொடுத்தால் காலம் முழுவதும் கஷ்டப்படவேண்டும் என்று சொன்ன பெற்றோர்கள் உண்டு. கரோனாவிற்குப் பிறகு பெற்றோர்கள், பெண்களின் மனநிலை மாற்றம் காண துவங்கியுள்ளன.
 

 

http://onelink.to/nknapp

 

சமீபகாலமாகத் திரைப்படங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதுடன், அதைக் காப்பாற்ற வேண்டும், இந்தியாவில் உணவுப் பஞ்சம் வரக்கூடாது என்று காண்பிக்கிறார்கள். இவையெல்லாம் இப்போது உள்ள படித்த இளைஞர்கள் இளம்பெண்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் இன்னும் அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். இதன் மூலம் கிராமங்கள் செழிப்படையும். 
 

 

கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இந்தியா வல்லரசாக ஆகிறதோ இல்லையோ வளமிக்க இந்தியாவாக மாறும்.   


 

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கிராம சபைக் கூட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை

Published on 30/09/2023 | Edited on 01/10/2023

 

Village council meeting C M M.K.Stal's speech

 

தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி (02.10.2023) அன்று 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மக்களதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபைக் கூட்டங்கள் என்பதை 6 ஆக உயர்த்தி அரசாணையிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் நாளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராம சபைக் கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

 

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்கவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணப்படி அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாகக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக எல்லார்க்கும் எல்லாம் என்கிற மையக் கருத்தின்படி நடத்தப்படவுள்ளது.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

இவ்வழைப்பிதழ் கிராம சபைக் கூட்டத்திற்கான கருப்பொருளான எல்லார்க்கும் எல்லாம் எனும் மையக் கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

 

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம், மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாகத் திட்டச் செயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

 

கிராமசபைக் கூட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் 02.10.2023 அன்று துவக்கி, கிராமசபை குறித்த கருத்துக்களைத் தெரிவித்திட உள்ளார். மேலும், அமைச்சர்கள் தொடர்புடைய மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கிராமசபைக் கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாகக் கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

இதில், பொதுவான விவாதப் பொருட்களாக, ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.