Skip to main content

ஆப்பிரிக்கா வேர்; தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான பொந்தன்புளி மரம்! 

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

Africa root; Thousands of years old Ponthanpuli tree growing in Tamil Nadu!

 

விருதுநகர் மாவட்டம், மண்டபசாலை என்ற ஊரில் வணிகப்பெருவழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான பொந்தன்புளி மரம் வளர்ந்து வருகிறது. இதை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். 


மண்டபசாலையில் பிரமாண்டமான ஒரு மரம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் செ.ரமேஷ் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். 


இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது; ‘விருதுநகர் மாவட்டம், மண்டபசாலை கருப்பசாமி கோயில் அருகில் கமுதி செல்லும் சாலையின் கிழக்குப்பகுதியில் 7 மீட்டர் உயரமும், அடிப்பகுதி 11 மீட்டர் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான ஒரு மரம் வளர்ந்து வருகிறது. இது ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக வளர்ந்து வரும் பொந்தன்புளி மரம் ஆகும். ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம் ஆகியவை  இம்மரத்தின் சிறப்புகள். ஓராண்டில் ஆறு  மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். இம்மரங்கள் சாதாரணமாக 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை. இதன் தண்டுகளில் தண்ணீரை சேமித்து வைக்கிறது.

 

Africa root; Thousands of years old Ponthanpuli tree growing in Tamil Nadu!

 

மண்டபசாலையில் உயரமாக வளர்ந்து வந்த இம்மரத்தின் 3 கிளைகளும் சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்துள்ளது. விழுந்த அதன் கிளைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இம்மரத்து தண்டின் நடுவில் 10 பேர் அமரும் வகையில் பெரிய பொந்து உருவாகியுள்ளது. இதன் உள்ளே செல்லவும் வழியுள்ளது. இம்மரம் யானை போன்ற அமைப்பில் உள்ளது. இம்மரத்தை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம் போன்ற கடற்கரையோர ஊர்களிலும், வணிகப் பெருவழிகளிலும் இம்மரம் காணப்படுகிறது. தென்தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரையும், இயற்கையாக அமைந்த உப்பங்கழிகளும் பல இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கியுள்ளன. இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் பலர் சங்ககாலம் முதல் வணிகத்துக்காக பாண்டிய நாட்டுக்கு வந்துள்ளனர். 


அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், மதுரை அமெரிக்கன் கல்லூரி, இலங்கை மன்னார் உள்ளிட்ட பல இடங்களிலும் இம்மரம் வளர்ந்து வருகிறது. இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்தை பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பாரப்புளி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் போபாப் என்கிறார்கள். 


மண்டபசாலை அருகில் பெருநிரவியார் எனும் வணிகக்குழுவின் பெயரால் அமைந்த நீராவி எனும் ஊர் உள்ளது. கேரளாவிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக அழகன்குளம் செல்லும் வணிகப்பெருவழியில் இவ்வூரிலும் தேரிருவேலி, அழகன்குளத்திலும் இம்மரம் வளர்ந்து வருகிறது. ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் முத்துராஜா என்பவர் 5 அடி உயரத்திற்கு மரத்தைச் சுற்றி திண்டு கட்டிக் கொடுத்துள்ளதால் மரம் பாதுகாப்பாக உள்ளது. மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்பே அதில் பொந்து உண்டாகிறது. எனவே பொந்து உள்ள இம்மரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.