Skip to main content

" பாலியல் குற்றவாளிகளின் விடுதலையை ஆதரிக்கிறார்கள்; ராஜீவ் வழக்கில் விடுதலையை எதிர்க்கிறார்கள்..." - வழக்கறிஞர் மோகன் பேட்டி

Published on 11/11/2022 | Edited on 12/11/2022

 

ுப


ராஜீவ்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனோடு இந்த வழக்கில் சிறையிலிருந்த மற்ற 6 பேரையும் விடுதலை செய்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் மோகன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். அவர் கூறியதாவது, " இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, ஆனாலும் இது ஒரு காலம் கடந்த தீர்ப்பாகவே கருதுகிறேன். இவர்கள் அனைவரும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருந்துள்ளார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு இந்த சிறைச்சாலை என்பது ஒருவரைத் திருத்துவதாக அமைந்திருக்க வேண்டுமே தவிர, ஒருவரைத் தண்டிக்கக்கூடியதாக அமைந்திருக்கக்கூடாது. அவர்களுக்குத் தண்டனை 1998ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இருந்தாலும் அவர்கள் கொடுத்த கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மிகுந்த காலதாமதம் ஆனது. இதை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் இந்த வழக்கில் தெரிவித்தார். 

 

அதனடிப்படையிலேயே அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது.  அப்போது நீதிமன்றம் தெளிவாகக் கூறியது, இவர்களை மாநில அரசுகள் நினைத்தால் விடுதலை செய்யலாம் என்று. ஆனால் அப்போது இருந்த மத்திய அரசு இவர்களை நாங்கள் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறி வழக்கை இழுத்தடித்தார்கள். அப்போதும் கூட உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 161வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுக்கு விடுதலை செய்ய அனைத்து அதிகாரங்களும் இருப்பதாகத் தெளிவாகக் கூறியது. அதற்கு பிறகும் இத்தனை ஆண்டுக்காலம் இந்த வழக்கு நீண்டுகொண்டே போனதற்கு ஆளுநர்களும், மத்திய அரசுமே காரணம். 

 

பேரறிவாளன் இந்த விவகாரத்தில் விடுதலை செய்யப்பட்டபோது அவர் சிறையில் நடந்துகொண்ட விதம், படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டே உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி அவரை விடுதலை செய்தது. அதற்கு பிறகே நளினியும், முருகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன் போன்றே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 142 பிரிவு என்பது உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரம். அதைப் பயன்படுத்தி நாங்கள் விடுதலை செய்ய முடியாது. நீங்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தீர்வு தேடிக்கொள்ளுங்கள் என்றனர். 

 

அதைத் தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் அங்கே இரண்டு நீதிபதிகள் அமர்வு பேரறிவாளனுக்குக் கிடைத்த அதே விடுதலையை இவர்களுக்கும் வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 161 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். குஜராத்தி பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் எல்லாம் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி சிறையிலிருந்து வெளியே வரும்போது, இத்தனை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த இவர்களுக்கு வெளியே வருவதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. எனவே இதை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பாகக் கருதுகிறேன்" என்றார்.

 

 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.