Skip to main content

“ஆட்சியைக் கலைக்க இது வட இந்தியா இல்லை” - வழக்கறிஞர் மணியம்மை பளீர்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

 Advocate Maniammai  Interview

 

ஆளுநர் மற்றும் பாஜகவின் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை நம்முடன் திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் மணியம்மை பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் பேசும்போது, “ஆளுநர் தன்னுடைய பணி என்ன என்பதையே மறந்துவிட்டு பாஜககாரர் போல் செயல்பட்டு வருகிறார். பாஜகவின் ஊதுகுழல் தான் ஆளுநர். திராவிடம் என்பது யாராலும் வீழ்த்த முடியாத ஒன்று. திராவிடம் என்றால் சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை. எங்களை விமர்சிக்கும் ஹெச்.ராஜாவின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்பது அவருக்கே தெரியும். பாஜகவின் ஆட்சியில் மணிப்பூர் இன்று பற்றி எரிகிறது. மக்கள் பதற்றத்தில் துடிக்கிறார்கள். ஆளுநர், ஹெச்.ராஜா போன்றவர்கள் அங்கும் திரும்பிப் பார்க்க வேண்டும். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள் சங்கிகள். 

 

மக்களை திசை திருப்ப இவர்கள் செய்யும் முயற்சி பலிக்காது. கவுன்சிலராகக் கூடத் தகுதியில்லாதவர்கள் இங்கு ஆட்சியைக் கலைத்துவிடுவோம் என்கிறார்கள். இது வடநாடு அல்ல, தமிழ்நாடு. அதுபோக ஆட்சியைக் கலைப்பது என்பது இன்று எளிதான காரியமல்ல. இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க சங்கிகள் முயல்கின்றனர். தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே சொல்கிறார். மக்கள் அவருடைய பேச்சைக் கேட்பார்களா? அல்லது பாஜகவின் அடியாளாக இருக்கும் ஆளுநரின் பேச்சைக் கேட்பார்களா?

 

தமிழ்நாட்டில் மட்டும்தான் மது இருப்பது போல் பேசுகின்றனர். கர்நாடகாவில் மது இல்லையா? பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் மது இல்லையா? சாதாரண கூலித் தொழிலாளியின் பெண்ணான நந்தினி இன்று பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்துள்ளார். இதுதான் திராவிட மாடல். கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளே புகுந்தது. தவறு செய்பவர்கள் அனைவரின் மீதும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுத்ததை சட்டமன்றத்தில் படிக்க மாட்டேன் என்றார் ஆளுநர். கடைசியில் அவரே சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்.

 

ஆளுநர் என்ன செய்தாலும் அவருடைய கனவு இங்கு பலிக்காது. ஆரியத்துக்கு எதிரானது தான் திராவிடம். மக்களுக்கு உதவி செய்வது போல் உள்ளே நுழைந்து பழங்குடியின மக்களை ஆக்கிரமிப்பது தான் ஆர்எஸ்எஸ் ஸ்டைல். இந்தியாவில் எங்குமே இல்லாத திட்டம் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம். பூண்டு, வெங்காயம் எல்லாம் சாப்பிடக்கூடாது என்று சொன்னார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுதான் அட்சயபாத்திரம் திட்டத்திலும் இருக்கிறது. அதை இங்கு அனுமதிக்க முடியாது. மாட்டு வால் சூப் கொடுக்கச் சொல்லுங்கள். அந்தத் திட்டத்தை நாங்கள் அனுமதிக்கிறோம்.” என்றார்.

 

 


 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.