Skip to main content

இளைஞர்களை அடிமைப்படுத்தும். சீஃப் ரேட் போதைகள்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

விஸ்கி, பிராந்தி போன்ற மதுவகைகள், பிரவுன் சுகர், அபின், ஹெராயின் கேட்டமைன் என்று போதை தரும் பல்வேறு வஸ்துகளில் இவைகள் டாப் 10 ரகம். விலை கூடியது. வசதிபடைத்தவர்களால் மட்டுமே இவைகள் கையாளப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அந்தப் பழக்கம் சமூகத்தில் பல்வேறு மட்டத்திலும் பரவி மக்களைப் அடிமைப்படுத்தியதையும் மறுப்பதற்கில்லை.
 

அங்கே இங்கே பரவித் தொலைத்த இந்த போதை, தற்போது இளைஞர்கள் சிறுவர்கள் மத்தியில் பரவியதோடு போதைக்காக அவர்களை தரை டிக்கெட் வஸ்துகளையும் நாட வைத்திருப்பது தான் அதிரவைக்கும் தகவல். அவைகளை உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே புலப்படுமே தவிர, சாதாரணமாக வெளித் தோன்றுவதில்லை. காரணம், ஒரு குறிப்பிட்ட வஸ்துக்கள் அன்றாடப் புழக்கத்திற்குப் பயன்படுபவைகளே என்று?. இயல்பான சிந்தனைக்கு வருமே தவிர, அதன் மறைமுகப் பயன்பாடுகளின் செயல் என்ன?. என்பதை அறிகிற நிலைக்கு நம்மைக் கொண்டு வருவதில்லை அது தான் விழிகளை விரியவைக்கிற சங்கதி. இதன் பயன்பாடு போதைக்காக இளைஞர்களை வசப்படுத்தியுள்ளது. இது போன்ற பழக்கங்கள் நெல்லையின் பள்ளி கல்லூரிகளின் மாணவர்கள், இளைஞர்கள், அன்றாடம் வேலை செய்து அலுத்துப் போகிறவர்களின் உடல் அசதிக்கான நிவாரணியாகவும் அதே சமயம் போதைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிற வேதனையைப் பகிர்கின்றனர் நெல்லையின் சமூக ஆர்வலர்கள் சிலர். ஆனால் அவைகளின் பக்க விளைவுகளையும் பாதிப்புகளையும் அவர்கள் உணர்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.


 

Adulthood young people. Seaf rat teachings!


 

போதையின் உச்சமாக மாணவர்களும் சிறுவர்களும், சீப் ரேட் பொருட்களையே நாடிக் செல்கின்றனர். சாதாரணமாக உள்ளூர் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கிற நைட்ரா வெட், வேலியம் 5 மில்லிகிராம், அட்டிவன் ஒன்று மற்றும் 2 மில்லி கிராம் என்று மாத்திரை ஒன்று நான்கே ரூபாய்க்குக் கிடைக்கிற மாத்திரைகள். காயம், ஆபரேஷன், பிரசவலி போன்றவைகளால் அவதிப்படுகிற நோயளிகளுக்கு டாக்டர்கள் மட்டுமே தருகிற அல்லது அவர்களால் பிரிஸ்க்ரைப் செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும். அந்த மாத்திரைகளைச் சொல்லப்படுகிற அளவு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நோயால் அவதிப்படுபவர்களின் வலியை குறைப்பதற்காக அவர்களை ஒரு விதமான உறக்கத்தில் வைக்கிற தன்மையைக் கொண்டது அந்த மாத்திரைகள்.

 

Adulthood young people. Seaf rat teachings!


 

ஆனால் அது போன்ற மாத்திரைகள் மெடிக்கல் ஷாப்களில் தாராளமாகக் கிடைப்பதால் இளைஞர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளைப் போதைக்காக உட்கொள்கிறார்கள். அதிக டோஸ் உடலில் ஏறும் போது உறக்கத்தையும், கிறக்கத்தன்மையை பல மணி நேரம் கொடுப்பதால் பலர் அந்த சுகத்திற்காகவே பயன்படுத்தி அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். மட்டுமல்ல, பஜாரில் சொற்ப விலைக்குக் கிடைக்கிற பேப்பரில் எழுதியவைகளை அழிக்கப் பயன்படுகிற, ’ஒயிட்னர்’ ஒரு விதமான வார்னிஷ் கலந்த மணம் கிளப்பும், பஞ்சர் ஒட்டப்பயன்படுகிற சொல்யூசன் போன்றவைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தண்ணீர் சேர்த்துக், கசக்கியும், மூக்கில் மற்றும் வாயில் வைத்து வட நாட்டினர் பயன்படுத்துகிற ஹூக்கா போன்று இழுத்துச் சுவாசிப்பதால் ஒரு வகையான போதை ஏற்பட்டு பறப்பதைப் போன்று உணர்வு உண்டாகும் இப்படி போதைக்காக பலர் இது போன்ற சீப்ரேட் வஸ்துக்களைப் பயன்படுத்துவது வெளியே தெரியாமல் நெல்லைப் பகுதியில் அதிகரித்து வருகிறது.


 

Adulthood young people. Seaf rat teachings!


 

மதுவை விடக் கஞ்சாவில் போதை அதிகம் என்பதால் அது புரோக்கர்கள் மூலமாகப் பொட்டலம் ஒன்று இருபது, முப்பது ரூபாய்க்கும் விற்கப்படுவது தொழிலாகவே மாறிவிட்டது. இந்த போதைக்கு வயது வித்தியாசமில்லாமல் பலர் அடிமையாகியுள்ளனர். தேனி மாவட்டத்தின் மேகமலை, வெள்ளிமலை கோரையூத்துப் பகுதிகளில் விளைகிற இவைகள் தென் மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்றன.
 

இது போன்ற போதைக்கு அடிமையானவர்கள் திசைமாறி குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பாளையில் போதைக் கும்பல் ஒன்று இது போன்ற சீப் ரேட் போதைக்கு இளைஞர்களை அடிமையாக்கித் தங்களின் வலைக்குள் கொண்டு வந்தததையறிந்த பாளை உதவி கமிசனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை அந்தப் போதைக் கும்பலின் சில இளைஞர்களைப் பிடித்து சிறையிலும் அடைத்திருக்கிறார். இதனால் சிலர் தலைமறைவாகி விட்டனர். பெருமாள்புரம் பகுதியில் சில பெண்களே இது போன்றவைகளை ஊக்கப்படுத்துவதாகக் கிடைத்த தகவலால் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றன.
 

Adulthood young people. Seaf rat teachings!



 

நாங்களும் முடிந்தவரை போதை இளைஞர்களைப் பிடித்தும், அவர்களுக்கு அறிவுரை சொல்லி எச்சரித்தும் வருகிறோம் ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் அது வேர் விடுகிறது என்கிறார்கள் போதைத் தடுப்புப் போலீசார்.
 

வலி நிவாரணி, மாத்திரைகளையும் சொல்யூசன், ஒயிட்னர் போன்ற கெமிக்கல்களையும் பயன்படுத்தினால் போதையுடன் கூடிய கிறக்கத் தன்மை வரும் அவைகளை அதற்காகப் பயன்படுத்தக் கூடாது தொடர்ந்து பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோயும் உண்டாகும் என்று எச்சரிக்கிறார்கள். மருத்துவர்கள். ஆனால் விளைவை உணராமல் போதைக்காக தென் மாவட்டத்தில் தலைதூக்கியிருக்கும் இந்தச் சீப் ரேட் பழக்கம் ஆபத்தனாது. ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். வளர்ந்தால், வரலாறு மன்னிக்காது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Nellai Lok Sabha Constituency Announcement of Congress candidate for the by elections!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார்.