Skip to main content

செந்தில் பாலாஜியை எப்படியாவது சிறையில் போடணும்... அதிமுகவின் அதிரடி திட்டம்... வெளிவராத அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

தி.மு.க. எம்.எல்.ஏ.வாகிவிட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு தீவிரமாக செயல்படுவதன் பின்னணி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செந்தில் பாலாஜியும் அவருடைய தம்பி அசோக்கும் வீட்டில் இருக்கும் நேரத்தில், அவர்களுடைய வீடுகளை சோதனை செய்து, கையோடு கைது செய்ய தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திட்டமிட்டனர்.
 

dmk



இதற்காக அவர்களுடைய வீடுகளை இரவுநேரத்தில் கண்காணித்தனர். ஆனாலும், ஜனவரி 31 ஆம் தேதி போலீஸார் சோதனை நடத்தச் சென்றபோது இருவருமே வீடுகளில் இல்லை. இது ஏமாற்றம் அளித்தாலும், தங்களுடைய சோதனையை தொடங்கினர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் 20 பேர் கொண்ட குழு கரூரில் சோதனை நடத்தியது. அந்த அதிகாலை நேரத்தில் ஐந்து இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.


செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் 16 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக 95 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாக புகார் தயாரித்து இந்தச் சோதனை நடைபெற்றது. சென்னை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் ரகசியமாக அனுமதி பெற்று வைத் திருந்தனர்.

செந்தில் பாலாஜியின் அரசியல் நடவடிக்கைகளை முடக்கவே இந்த சோதனை என்று அவருடைய வழக்கறிஞர் மணிராஜ் தெரிவித்தார். ஏற்கெனவே இதுபோல ஒரு வழக்கு பதிவுசெய்து, அது நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகியிருக்கிறது.


இந்நிலையில், சென்னையில் 9, திருவண்ணாமலையில் 2, கரூரில் 5, கும்பகோணத்தில் ஒரு இடத்தில் சோதனை நடைபெற்றது. 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோத னையில் சொத்து ஆவணங்கள், நகைகள், லேப்டாப், வங்கி காசோலைகள், வங்கிக் கணக்குகள், வங்கி இருப்பு பெட்டக சாவிகளை போலீஸார் எடுத்துச் சென்றனர்.

சோதனை குறித்து செந்தில் பாலாஜி பேசும்போது, ""எனக்கும் என் தம்பிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே முடிந்துபோன வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து வரு கின்றனர். சென்னையில் இருக்கும் எனது இல்லத்தையும், கரூரில் இருக்கும் ஜவுளி நிறுவனத்தையும் பூட்டியுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்க திட்டமிட்டு அரசும், அரசு இயந்திரமும் முழு வேகத்துடன் செயல்படுகிறது'' என்றார்.

இந்த வழக்கில் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் பெற்றுவிடாத அளவுக்கு போலீஸார் எச்சரிக்கையாக இருப்ப தாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் பணபலம், சமுதாய பலம் ஆகியவை எந்தவிதத்திலும் சட்ட மன்றத் தேர்தல் நேரத்தல் கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு சாதகமாக மாறிவிடக் கூடாது என்பதால்தான் இத்தனை தீவிரம்.

 

 

-தாவீதுராஜ்

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.