Skip to main content

என் மகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு... அதிமுக பெண் பிரமுகரிடம் சிக்கிய இளம்பெண் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

கடந்த 30-ஆம் தேதி இரவு 100-ஐ டயல் செய்து அவசர போலீசை அழைத்த அந்தப் பெண்குரல்... "என் பேர் லதா, சொந்த ஊர் பெங்களூரு. என் மகளை கடத்திய கும்பல், உமராபாத்ல அடைச்சி வச்சிருக்கு. மீட்கப்போன என்னை அடிக்கறாங்க'' என்றபடி அழுதது.

இந்தத் தகவல் திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமாருக்கு போனது. அவர் ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தத்துக்குத் தகவல் கொடுத்தார். இதைக்கேட்டு அதிர்ந்து போன டி.எஸ்.பி., ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நிர்மலா மற்றும் பெண் காவலர்களுடன் அந்த பெண்குரல் குறிப்பிட்டிருந்த ஸ்பாட்டுக்கு விரைந்தார். அங்கே இரண்டு பெண்கள் கடுமையாக மோதிக்கொண்டிருக்க, ஒரு இளம்பெண் அப்பாவியாக நின்றுகொண்டிருந்தார். மூவரையும் காவல்நிலையத்திற்கு அள்ளிக்கொண்டு வந்தனர். அவர்களை விசாரித்தபோதுதான் கிறுகிறு தகவல்கள் வெளிவந்தன.

 

incident



அந்தப் பெண்கள் காவல் நிலையத்துக்கு வந்த சில நிமிடங்களிலேயே "அ.தி.மு.க. பெண் பிரமுகர் விபச்சார வழக்கில் கைது'’என தொலைக்காட்சி ஊடகங்களில் பரபரசெய்தி வெளியாகத் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து விசாரணைக் காக்கிகளிடம் நாம் விசாரித்தபோது...

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர்தான் புகார் சொல்லி மாட்டிக்கொண்டிருக்கும் லதா. அவரது 17 வயது மகள் கத்ரினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்துள்ளார். அந்த பியூட்டி பார்லர் நடத்தும் லட்சுமியிடம், கத்ரினாவின் தாய் லதா, "எனக்கு 35 வயதாகிவிட்டது. போதிய வருமானம் இல்லை. அதனால் என் மகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு'ன்னு கேட்டிருக்கிறார். "உன் பணப் பிரச்சினையை நான் போக்கறேன், உன் மகளை என்னுடன் வேலூரில் இருக்கும் என் பியூட்டி பார்லருக்கு அனுப்பு. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டா தினம் 4 ஆயிரம் ரூபாய் உன் மகளுக்குத் தருகிறேன்' என்று ஆசை காட்டியிருக்கிறார் லட்சுமி.

 

incident



அப்படி என்ன அட்ஜெஸ்ட் செய்கிற வேலை என்பது தெரிந்தே, தன் மகளை லட்சுமியோடு வேலூருக்கு அனுப்பியுள்ளார் லதா.

அவர், கத்ரினாவை வேலூர்க்கு அழைத்து வந்து சிலநாள் வைத்திருந்தவர், பின்னர் அ.தி.மு.க. வேலூர் மேற்கு (திருப்பத்தூர் மாவட்டம்) மாவட்ட பேரணாம்பட்டு ஒன்றிய அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், உமராபாத் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பிரேமாவிடம் ஒப்படைத்திருக்கிறார். பெண்களை வைத்து இளமை வியாபாரம் செய்துவந்த பிரேமா, தொழிலுக்காகவே வாடகைக்கு எடுத்து வைத்துள்ள ஒரு வீட்டில் அந்த பெண்ணை தங்க வைத்துள்ளார். இவர் தன் தொழில் பார்ட்னரான வாணியம்பாடியைச் சேர்ந்த யேஜாஸ் அகமத் என்கிற புரோக்கர் மூலமாக ஏலகிரி, திருப்பத்தூர், ஏற்காடு என கஸ்டமர்களுக்கு அந்த இளம்பெண்ணை அனுப்பி ஏகத்துக்கும் சம்பாதித்துள்ளார். தினமும் 4 ஆயிரம் வீதம் லதா கணக்குக்கு 20 நாட்கள் வரை பணம் போடப்பட்டிருக்கிறது. அதன்பின் கடந்த 10 நாட்களாக லதாவின் கணக்குக்கு பணம் போகவில்லை. போன்செய்து கேட்டபோது பிரேமாவிடம் இருந்து சரியான பதில் இல்லையாம். இதனால் நேரில் கிளம்பிவந்த லதா, பிரேமாவிடம், "வரவேண்டிய பாக்கிப் பணத்தைக் கொடு... இல்லைன்னா என் மகளை என்னோடு உடனே அனுப்பு' என்று கேட்க, வாக்குவாதம் சண்டையாகி, இருவரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் 100-க்கு லதா போன் செய்து எங்களை அழைத்திருக்கிறார்.


லதாவின் மகளிடம் மகளிர் காக்கிகள் விசாரித்தபோது, "தினமும் 2 பேரிடம் என்னை அனுப்பினார்கள். என்னால் தாங்கமுடியாமல் உடன்பட மறுத்தப்ப, என்னைக் கடுமையாக அடிச்சாங்க...' என்று அழுதுவிட்டு, கொஞ்ச நேரத்திலேயே செல்போனில் வீடியோ கேம் விளையாட ஆரம்பித்துவிட்டார். குழந்தைத்தனம் மாறாத அந்த பெண்ணை, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு திருப்பத்தூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்திருக்கிறோம்''’என்றார்கள் விரிவாகவே.


ஆம்பூர் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்த போது, "உமராபாத்தை சேர்ந்த பிரேமாவை கடலூர் மாவட்டம் வடலூரில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர் கணவரோட வாழாமல், 15 வருஷத்துக்கு முன்பே, தாய்வீடு திரும்பி, சிலர் மூலம் இந்தத் தொழிலில் இறங்கி இருக்கிறார். வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்களையும் அழைத்துவந்து தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார். இந்த பிரேமாவின் கிளுகிளு சரித்திரம் எங்க கட்சியில் இருக்கும் எல்லாருக்குமே தெரியும். எங்க கட்சியில் இருக்கும் மேலிடத்தில் இருக்கும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் அவர்கள் விரும்பியபடியெல்லாம் இவர்தான் சப்ளை செய்துவந்தார். லோக்கல் போலீசின் ஆசியும் இவருக்கு உண்டு. இப்போது அ.ம.மு.க.வில் இருக்கும் அந்த நடிகை, 3 வருஷத்துக்கு முன்னாடி உமராபாத்துக்கு தன் ஆளுங்களோட வந்து, ஏதோ ஒரு பெண் விவகாரத்துக்காக இந்த பிரேமாவ அடிச்சி உதைச்சிது. இப்படிப்பட்டவர்களுக்குதான் கட்சியில் செல்வாக்கு கூடுது. பிரேமா இப்ப பகிரங்கமா கைதானதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்காங்க'' என்றார்கள் புன்னகையோடு.

"ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரி, பணக்காரர்களின் சொர்க்கபுரியாக மாறிவிட்டது. இங்குள்ள தங்கும் விடுதிகள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிரம்பி வழிகின்றன. பெங்களூரு, சென்னையை சேர்ந்த நடுத்தர வயதை தாண்டிய தொழிலதிபர்கள் தங்கள் உடல் தேவைக்காக சிறிய வயது இளம்பெண்களையே கேட்கின்றனர்.

அதற்காகவே அகமத் போன்ற புரோக்கர்கள் அங்குள்ள ஹோட்டல்களோடு டச்சில் இருக்கின்றனர். ஒரு இரவுக்கு 25 ஆயிரம் வரை வாங்குபவர்கள், இளம்பெண்களுக்கு அதிகபட்சம் 5 ஆயிரம் வரையே தருகிறார்கள். அதேபோல் பிரேமா விவகாரத்தை சரியாக, நேர்மையாக விசாரித்தால் பலப்பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் சிக்குவார்கள். ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் இதில் சிக்குவார்கள் என்பதால் இந்த வழக்கை நீர்த்துப்போக வைக்க மாவட்ட உயர்அதிகாரிகளுக்கு நெருக்கடிகள் தரப்படுகின்றன'' என்கிறார்கள் காவல்துறை தரப்பிலேயே.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.