Skip to main content

கோஷ்டி மோதலால் மாறி மாறி பஞ்சாயத்து..! திணறும் முதல்வர் எடப்பாடி! 

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

admk

 

முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு, மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது. இதில் வடக்கு மா.செ.வாக செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன் இருக்கிறார். தெற்கு மா.செ.வாக இருந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கல்தா கொடுத்து விட்டு புதிய மா.செ.வாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்தார் எடப்பாடி. இதனால் அங்கு ஏற்படும் மோதல்கள் பற்றி நக்கீரன் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.


 
மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளை நான்காக உடைத்து, செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், முன்னாள் மா.செ.வும் திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான பெருமாள்நகர் கே.ராஜன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரையும் மா.செ.வாக்க அ.தி.மு.க மேலிடம் முடிவு செய்திருந்தது.

 

இதனையறிந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் மூலம் காய்களை நகர்த்தினார். ரெண்டு தொகுதிக்கு மட்டும் நான் மா.செ.வாக இருந்தால் கௌரவமாக இருக்காது. அதனால், தற்போதைய நிலையிலேயே மாவட்டம் இருக்கட்டும். தெற்கில் என்னை மா.செ.வாக ஆக்குங்கள் என எடப்பாடியிடம் வலியுறுத்திக் கேட்டார் அக்ரி. சேலம் இளங்கோவனின் ஆதரவினால், திருவண்ணாமலையை பிரிக்காமல் அக்ரியின் ஆசையை நிறைவேற்றினார் எடப்பாடி.

 

admk

 
இதனால் கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், பெருமாள்நகர் கே.ராஜன் மற்றும் மா.செ. பதவியை இழந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும் அவரது ஆதரவாளர்களும் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்ததுடன், தங்களது அதிருப்திகளை எடப்பாடியிடம் சொல்ல, அவரால் சமாளிக்க முடியவில்லை. இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதில் பெருமாள் நகர் ராஜனை முடக்கப் பார்த்திருக்கிறார் அக்ரி. இந்தப் பஞ்சாயத்தும் எடப்பாடியின் கவனத்துக்குப் போயிருக்கிறது.

 

இதுகுறித்து அ.தி.மு.க தலைமைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘மா.செ.பதவியை பறிகொடுத்த சேவூர் ராமச்சந்திரனால் அக்ரியை எதிர்த்து, எடப்பாடியிடம் அரசியல் செய்ய முடியவில்லை. அதேபோல், பெருமாள்நகர் ராஜனை எதிர்த்து, மாவட்டத்தில் அரசியல் செய்ய அக்ரியால் முடியவில்லை. இதனால் திருவண்ணாமலை தெற்கில் இரு தரப்பின் உறுமல்களும் அதிகளவில் எதிரொலிக்கின்றன'' என்கிறார்கள்.

 

நம்மிடம் பேசிய ர.ர.க்கள்,‘பெருமாள்நகர் ராஜன் மா.செ.வாக இருந்த சமயத்தில் அ.தி.முக.வின் கட்சி அலுவலகத்தை மிகப்பெரியளவில் கட்டியிருந்தார். ஜெ' ஆட்சியில் அக்ரி நீக்கப்பட்டபிறகு, மாவட்ட அ.தி.மு.க.வினர் பெரும்பாலும் ராஜன் பக்கம் சாய்ந்து விட்டனர். அக்ரி மீண்டும் கட்சியில் இணைந்த பிறகு ர.ர.க்களை தன் பக்கம் இழுக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை.

 

இந்தச் சூழலில்தான், "சுதந்திர தினத்தன்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்களைத் திரட்டி கொடி ஏற்றுவேன்'' எனச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்திருந்தார் ராஜன். இதனையறிந்த அக்ரி, அதனை தடுத்து நிறுத்த மாவட்ட டி.எஸ்.பி. அண்ணாமலையின் உதவியை நாடியுள்ளார். தனக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அவர்களோ 14-ஆம் தேதி ராஜனை நேரில் சந்தித்து, சுதந்திர தினத்தில் கொடியேற்றுவதை ரத்து செய்யுங்கள் எனக் கட்டளையிட, எழுத்துப் பூர்வமாக தந்தால் கேன்சல் செய்கிறேன் என்றிருக்கிறார். இதனால் ஜகா வாங்கியுள்ளது போலீஸ்.

 

admk

 

அதேசமயம், 15- ஆம் தேதி கொடியேற்ற அவர் கிளம்பியபோது, அவரை தடுத்துள்ளது போலீஸ். இதனால் போலீசுக்கும் ராஜனுக்கும் வாக்குவாதம் நடக்க, அவரை மட்டும் போக அனுமதித்துள்ளது. போலீஸ். காவல்துறை கெடுபிடியையும் மீறி கட்சி அலுவலகத்தில் பலரும் கூடிவிட்டனர். வங்கி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, கட்சி அலுவலகத்திலும் கொடியேற்றினார் ராஜன்.

 

இந்த விவகாரத்தைத்தான் எடப்பாடியிடம் அக்ரியும் ராஜனும் மாறி மாறி பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அக்ரி கிருஷ்ண மூர்த்தியிடம் இதுபற்றி கேட்ட போது, "மாவட்டத்தைப் பிரிப்பது தலைமையின் முடிவு. அதை ஏற்று கட்சிப் பணிகளை செய்து வருகிறேன். தலைமைக்கு யோசனை சொல்கிற அளவுக்கு நான் வளரவில்லை. கோஷ்டி தகராறுகள் எதுவும் மாவட்டத்தில் இல்லை. சுதந்திர தினத்தன்று நான் சென்னையில் இருந்தேன். மாவட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியாது'' என்றவர், "தன் மீதான குற்றச் சாட்டுகள் தவறானவை'' என்றார்.

 

Ad

 

 

பெருமாள்நகர் ராஜன் நம்மிடம், "கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். அது கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமே தவிர, கட்சியைப் பலவீனப்படுத்தாது. மற்றபடி கோஷ்டி தகராறுகள் எதுவும் கிடையாது'' என்றார்.

 

"திருவண்ணாமலையை போல ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கோஷ்டி மோதல்கள் எடப்பாடியை முற்றுகையிடுகின்றன. சமாளிக்க முடியாமல் தவிக்கிறார் எடப்பாடி'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தலைமைக் கழகத்தினர்.

 

 

 

 

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.