Skip to main content

நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த...தலைமை மீது கொந்தளிப்பில் அ.தி.மு.க. தொண்டர்கள்!

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

சமீபத்தில் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்தை இரண்டுமுறை முற்றுகையிட்டு போராடினார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வும், தி.நகர் எம்.எல்.ஏ.வுமான சத்யா... எழுநூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வகித்து வந்த பதவிகளை ஒரே இரவில் மாற்றி உத்தரவிட்டார். அதில் பலர் எம்.ஜி.ஆர். காலத்து கட்சிக்காரர்கள். அவர்கள் பதறினார் கள். கதறினார்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என பலர் வீடுகளுக்கும் படையெடுத்தார்கள். அ.தி. மு.க. தலைமைக் கழகத்தை முற்றுகையிட் டார்கள். அவர்களில் நான்குபேர் தீக்குளிக்கவே முயன்றார்கள். மா.செ. சத்யா செய்த அத்துமீறல்களை வெளிப்படையாகவே ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார்கள். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

 

admk



மறுபடியும் தலைமைக் கழகத்திற்கு ஊர்வலமாக வந்தார்கள். இந்தமுறை தலைமைக் கழகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு ""நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்'' என எச்சரித்தது. நொந்துபோன அவர்கள் தலைமை நிலைய அலுவலரான மகாலிங்கத்திடம் மனு கொடுத்துவிட்டு "சத்யா ஒழிக' என கோஷமிட்டுவிட்டுச் சென்றார்கள். நீண்டகால அ.தி.மு.க.வினரின் பதவியைப் பிடுங்கும் சத்யாவின் தெம்புக்கு காரணம், முதல்வர் எடப்பாடிக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும் அவர் நெருக்கமாக இருப்பதுதான் என வருத்தப்படுகிறார்கள் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
 

admk



சத்யா சென்னை மாநகராட்சியில் செல்வாக்காக இருக்கிறார். சென்னை நகரம் முழுக்க சூதாட்ட விடுதிகள், மசாஜ் கிளப்புகள் நடத்து பவர்களுக்குத் துணையாக நிற்கிறார். அவருக்கு உள்ளாட்சித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் துணையாக நிற்க அமைச்சர் வேலுமணி உதவி செய்கிறார். வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எடப்பாடியிடம் மட்டுமின்றி, டெல்லியில் மோடிவரை செல்வாக்குடன் உள்ளனர். இந்த அதிகார செட்-அப் பில்தான் அ.தி.மு.க. இயங்குகிறது. அதனால் அ.தி.மு.க. மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என அனைவரும் கல்லா கட்டுகிறார்கள். மத்தியில் உள்ள மோடி அரசும் லகானை தன் கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.


ஓ.பி.எஸ். தலைமையிலான அணியை முற்றிலுமாக ஒழித்துவிட்டார் எடப்பாடி. ஒரு எம்.எல்.ஏ. கூட இன்று ஓ.பி.எஸ். வசம் இல்லை. அமைச்சர் மணிகண்டனின் பதவியை எடப்பாடி பறித்ததுகூட ஓ.பி.எஸ்.ஸுக்கு விடப்பட்ட எச்ச ரிக்கையே. எதிர்காலத்தில் ஓ.பி.எஸ்.ஸை அவைத் தலைவராக்கிவிட்டு, பொதுச்செயலாளராக எடப்பாடி வருவதற்கான எல்லா ஆயத்த வேலைகளையும் எடப்பாடி முடுக்கி விட்டுள்ளார். அதனால்தான் சசிகலாவை நீக்குவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு கூடிய பொதுக்குழுவையும் செயற்குழுவையும் தேர்தல் கமிஷன் உதவியோடு கூட்டாமலிருக்கிறார்'' விவரிக்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்.

"அதேநேரத்தில் எடப்பாடி இடத்தைப் பிடிக்கவும், தன்னிச்சையாக செயல்படவும் சீனியர் அமைச்சர்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கு டெல்லி துணையும் இருக்கிறது. இது ஈகோ போட்டியாக மாறுகிறது. வேலுமணி, மழைநீரைப் பற்றி டி.வி. விளம்பரத்தில் வந்தவுடன் எடப்பாடி யும் அதேபோல் வீடியோ வெளியிட்டார். மின்துறை விவகாரங்களில் எடப்பாடிக்கு அனுமதி இல்லை. அதேபோல் உள்ளாட்சித் துறையில் எடப் பாடி நுழையவே முடியாது. செங்கோட்டையனின் கல்வி, விஜயபாஸ்கரின் சுகாதாரம் போன்றவை முதல்வர் நுழைய முடியாத துறைகள்' என உள்ளே நடக்கும் மோதல்களையும் சொல்கிறார்கள். 
 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.