Skip to main content

கேவலமா இருக்குது... வெட்கப்படுகிறோம்... அதிமுக எம்எல்ஏக்கள் குமுறல்

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற பிரச்சனைகளில் மிக முக்கியமானது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம். இதில் அதிமுக பங்கு என்பது எந்த வகையிலும் வெளிப்படையாக பேசப்படாத பொருளாகபோய்க்கொண்டிருக்கிறது.

 

ADMK MLAK's


நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. ஒட்டுமொத்தமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றி பெற்றதற்கு அதிமுகவே காரணியாக அமைத்துள்ளது. இதை பிரதான எதிர்க்கட்சியான திமுக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட்டது. இந்தநிலையில் இன்று தந்தை பெரியாரின் 46 வது நினைவுநாள் தமிழகம் முழுக்க அனுசரிக்கப்பட்டது. அதேபோல் அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் நினைவு நாளும் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினர் எம்ஜிஆரின் புகைப்படங்களை வைத்து மலர் மாலை சூடி மரியாதை செலுத்தினார்கள்.அதேபோல் தந்தை பெரியாரின் 46 வது நினைவுநாளை  ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிடர் கழகம் மற்றும் திமுக அதன் தோழமை கட்சிகள் மேலும் சமூகநல அமைப்புகள் பெரியாருக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

 

ADMK MLAK's


இந்தநிலையில் பெரியாரை பற்றி பாஜகவின் தமிழ்நாடு பிரிவு ஒரு செய்தியை டுவிட்டர் மூலமாக பதிவேற்றியது. அந்த செய்தி தந்தை பெரியாரின் புகழை, தியாகத்தை சீர்குலைப்பதாக அமைந்தது என பெரியாரிய அமைப்புகள் தமிழகம் முழுக்க கண்டன குரல் எழுப்பியதோடு போராட்டங்களில் ஈடுபட்டது. கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன அப்போது பாஜகவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள் பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும் எனவும் முழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
 

ADMK MLAK's

 

இதுபற்றி கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் நம்மிடம் பேசிய போது, சூடு சுரணை எதுவுமே இல்லாமல் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவளித்தது மிக பெரிய வெட்கக்கேடானது. எங்கள் அம்மா இருந்திருந்தால் ஒருபோதும் இதை அனுமதிருக்க மாட்டார். ஆனால் இப்போது ஆட்சி இருக்கிற சூழலில் பாஜகவின் தயவு தேவை என்பதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் திட்டமிட்டு பாஜகவிடம் கட்சியை ஆட்சியை அடமானம் வைத்துவிட்டார்கள். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எங்களுக்கும் வேறு வழியில்லை ஏதோ இருக்கிற நாட்களை ஓட்டிக்கொண்டு செல்லலாம் என்பதால் அமைதியா இருக்கிறோம். 

ஆனால் இன்றைய தினம் தந்தை பெரியாரை பற்றி தமிழ்நாடு பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை பார்க்கும் போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கிறது. தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா இதுதான் அதிமுகவின் வரிசை, ஆக கட்சியின் பிறப்பான தந்தை பெரியாரையே கொச்சைப்படுத்தி பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டது. இதை கண்டிக்கும் திராணியோ, முதுகெலும்போ இல்லாத தலைமையாக எங்கள் கட்சி மாறிவிட்டது. கொள்கை ரிதியான கேள்விக்கு கூட பதவிக்காக பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்கள். இதை எண்ணும்போது கேவலமாக இருக்கிறது. வெட்கப்பட வேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இந்த ஆட்சியை இன்னும் ஒரு வருடம் ஓட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்பதால்தான் இப்படி அதிமுக எம்எல்ஏக்கள் மனம்விட்டு கூறுகிறார்கள்.

 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.