Skip to main content

விஜயபாஸ்கருக்கும், பீலா ராஜேஷுக்கும் இடையே நடக்கும் பவர் யுத்தம்... முதல்வரிடம் அமைச்சர் கொடுத்த விளக்கம்... வெளிவந்த தகவல்! 

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

admk


அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவர் ஆப்பிள் சாப்பிட்டார், ஆங்கிலத்தில் பேசினார் எனத் தகவல்கள் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. அதுபோல கரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்? எத்தனை பேர் கரோனாவில் இருந்து குணமாகினர் என்பது பற்றி முரண்பாடான தகவல்களைத் தமிழக அரசு அளித்து வருகிறது எனக் குற்றம் சாட்டுகிறார்கள் இந்த விவகாரத்தை உற்றுக் கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள்.
 


அதேபோல் இப்பொழுது கரோனா நோய் தமிழகத்தில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது. முதலில் டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் கரோனா நோய் வந்தது என்றவர்கள், மிகவும் கவனக்குறைவோடு செயல்பட்டதால் கோயம்பேடு மூலம் கரோனா நோய் வந்தது என்றார்கள். இப்பொழுது வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் மூலமாக கரோனா நோய் வந்திருக்கிறது என மூன்றாவது காரணத்தைச் சொல்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 796 இடங்களை கரோனா நோய்ப் பாதித்த பகுதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகளுக்கு வெளியில் இருப்பவர்களுக்கும் கரோனா நோய்ப் பரவி வருகிறது. இது தமிழகத்தில் கரோனா நோய், சமூகத் தொற்று என்ற நிலையை அடைந்து விட்டது என்பதைக் காட்டுகிறது. சமூகத் தொற்று என்கிற நிலையைக் கரோனா அடைந்து விட்டால் அது யாருக்கு வேண்டுமென்றாலும் பரவும். இவருக்கு இதனால் நோய் வந்தது என யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது.
 

admk


கரோனா, அமெரிக்காவில் பரவியதைப்போல லட்சக்கணக்கில் பரவும். இப்பொழுது இந்தியாவில் ஒரு லட்சத்தைத் தொட்ட கரோனா நோய், 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர எடுத்துக்கொண்ட நாட்கள் ஏழு நாட்கள்தான். இனி 3 நாட்களில் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். அதற்குப் பிறகு இரண்டு நாட்களில் அந்த எண்ணிக்கை வரும். ஒரே நாளில் இன்று 5 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் பேர்கள் என இருக்கும் இந்திய கரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 50 ஆயிரமாக உயரும்.

ஊரடங்கு இந்தியா முழுவதும் தளர்த்தப்பட்டிருக்கிறது. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மதுபானக் கடைகள், சலூன் கடைகள் திறக்கப்பட்டி ருக்கிறது. இந்தச் சூழல் எல்லாம் கரோனா நோய்ப் பரவுவதை மிகவும் அதிகப்படுத்தும். இந்தியா முழுவதும் சமூக இடைவெளி என்பதையும் மக்கள் கடைப்பிடிப்பதில்லை. மாஸ்க் அணியும் பழக்கம், கைக் கழுவும் பழக்கம் போன்றவை, உடல்நலம் பற்றிய உச்சக்கட்ட எச்சரிக்கை கொண்ட நடுத்தர மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

ஏழை மக்கள் ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார அடியினால் தாக்கப்பட்டு கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டார்கள். இந்நிலையில் கரோனா வெகு வேகமாகப் பரவி வருகிறது. அரசு தரப்பும் கரோனாவைக் கட்டுப்படுத்தக்கூடிய சோதனை மூலம் கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பது அதன்பின் அந்த கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிப்பது, அவர்கள் குடியிருக்கும் பகுதியை அடைத்து வைப்பது, கரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப் படுத்துவது, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது என்பதையெல்லாம் கைவிட்டுவிட்டார்கள்.
 


தமிழகத்தில் தினமும் 12 ஆயிரம் கரோனா சோதனைகள் செய்யப்பட்டு வந்தன. அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் என 61 ஆய்வகங்களில் கரோனா சோதனை செய்யப்பட்டு வந்தது. அந்தச் சோதனைகளைத் திடீரென அரசு 10 ஆயிரமாக குறைத்துவிட்டது. அதிகபட்சமாக அதிக சோதனைகள் செய்ததினால் 700 என்ற எண்ணிக்கையில் வந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென சோதனைகள் குறைக்கப்பட்டதால் 400 என வந்தது. அதேபோல் தமிழகத்தைவிட குறைந்த கரோனா நோயாளிகள் கொண்ட மாநிலங்களில் எல்லாம் நூற்றுக்கணக்கானோர் கரோனா நோயால் இறந்து போனார்கள் என அந்த மாநிலங்கள் மத்திய சுகாதாரத்துறையிடம் தெரிவிக்கும் சூழ்நிலையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா நோயாளிகளைக்கொண்ட தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை சுமார் 80 என்கிற எண்ணிக்கையில் இருந்தது.
 

admk


உலகம் முழுவதும் கரோனா நோயில் இருந்து விடுபட்டவர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் இருக்கையில் தமிழகத்தில் மே 16ஆம் தேதி 939 பேர் ஒரே நாளில் கரோனா நோயில் இருந்து விடுபட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு கரோனா நோய்க்கு எதிராக உலகம் முழுக்க போராடி வரும் மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. உலகம் முழுக்க மருத்துவர்கள் இந்திய அரசைத் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரே நாளில் கிட்டதட்ட ஆயிரம் பேர் எப்படி கரோனா நோயில் இருந்து விடுபட்டார்கள் எனக் கேட்டார்கள். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்பட்டிருந்ததார்கள், எத்தனை பேருக்கு கரோனா இல்லை என சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது, அவர்கள் எப்படிக் கரோனா நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என அறிவித்தீர்கள் எனக் கேட்டது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மருத்துவ மனையில் இருந்தும் கரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்போது அவர்களுக்கு, பிரிவு உபச்சார விழா நடக்கும். மீடியாக்களின் கேமராக்கள் முன்பு நடத்தப்படும் அந்தப் பிரிவு உபச்சார விழாவில் கரோனாவில் இருந்து மீண்டவர்கள் பேசுவார்கள். 16ஆம் தேதி கரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு எந்த மருத்துவமனையிலும் பிரிவு உபச்சார விழா நடத்தப்படவில்லை. மீடியா அட்டென்ஷனும் கொடுக்கப்படவில்லை.

சென்னை நகர மருத்துவமனைகளில் இருந்து 300க்கும் அதிகமானவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்தது. இந்தத் தகவல் தெரிந்ததும் மீடியாக்களைச் சேர்ந்தவர்கள், ஓமந்தூரார் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கும் உடனடியாகச் சென்றார்கள். அங்கு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர்தான் கரோனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்பவர்களாக எந்தவிதமான பிரிவு உபச்சார விழாக்களும் நடத்தப்படாமல் சென்றுகொண்டிருந்தார்கள்.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருவள்ளுர், செங்கல்பட்டு எனத் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மே 16ஆம் தேதி கரோனாவில் இருந்து விடுபட்டவர்களுக்காக பிரிவு உபச்சார விழாக்கள் நடத்தப்படவே இல்லை.

யார் சிகிச்சைப் பெற்றார்கள், அவர்களுக்கு எப்படி கரோனா நோய் குணமானது என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு 939 பேர் குணமடைந்தார்கள் என மெடிக்கல் ரெக்கார்டுகள் மருத்துவமனைகளில் திருத்தப்பட்டன என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

கரோனா நோயில் இருந்து விடுபட்டவர்கள் மருத்துவமனையில் இருந்து சென்ற பிறகு 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வசிக்க வேண்டும். அப்படி 16ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து நோய்க் குணமாகி சென்றவர்கள் சிகிச்சைப் பெறுகிறார்களா என்பதைப் பற்றி எந்த ஆவணமும் அரசிடம் இல்லை. மோசடியான-குளறுபடியான கணக்கு வழக்குகளே மிஞ்சுகின்றன. இந்தக் கணக்கு வழக்குகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவு எடுக்கிறோம் என்று நழுவி விடுகிறார்கள் சுகாதாரத்துறையினர்.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போலி நியமன உத்தரவுகளுடன் பலர் பணியில் சேர்ந்தார்கள். அதை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கண்டுபிடித்தார். அது போலீசில் புகாராகப் போனது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் சுகாதாரத்துறையில் போலி நியமன ஆணைகளுடன் ஆட்களை வேலைக்குச் சேர்த்தார் என விக்கி என்கிற விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இப்போது ஜாமீனில் வெளிவந்து விட்டார். போலி நியமன உத்தரவுகளை அச்சடித்து சுகாதாரத்துறையில் பணியாளர்களை நியமித்த அந்த விக்கி இப்பொழுது அமைச்சர் விஜயபாஸ்கருடன் அவரது பி.ஏ.வாக சுற்றித் திரிகிறார் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள் சுகாதாரத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.
 

http://onelink.to/nknapp

 

admk


நோயாளிகள் கணக்கில் மட்டுமல்ல, 5 ஆயிரம் கோடிக்கு மேல் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள கரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. இதுபற்றி அமைச்சரை கூப்பிட்டு விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கும் திருப்தியான பதிலைச் சொல்லிவிட்டார்.

எடப்பாடியும் கூல் ஆகிவிட்டார். புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் அமைச்சருக்கு வேண்டியவர்கள் நடத்தும் சாய் எண்டர்பிரைசஸ் என்கிற கட்டுமான நிறுவனத்திற்கு 300 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை எடப்பாடி பரிசளித்துள்ளார். இதெல்லாம் சமீபத்தில் கரோனா காலத்து கூடுதல் கிஃப்ட் என அதிர வைக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

அமைச்சருடன் முரண்பட்டதால் இப்பொழுது சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். திருவள்ளூரில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கும் விழா நடைபெறுகிறது. அந்த விழாவிற்கான விளம்பரத்தில் பீலா ராஜேஸின் படத்தைப் போட வேண்டாம் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் கடுப்படைந்த பீலா ராஜேஷ், கரோனா நோய்த் தடுப்பிற்குத் தேவையான பி.பி.இ. ஆடைகள், மாஸ்க்குகள், மருந்து மாத்திரைகள் என எல்லாம் பற்றாக்குறையில் இருக்கும்போது 2,500 வெண்டிலேட்டர்கள் வாங்க ஏன் ஆர்டர் கொடுத்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் சுகாதாரத்துறையில் சார்பு செயலாளராக விதிகளை மீறி சுகாதாரத் துறைக்கு சம்பந்தமே இல்லாத அமைச்சரின் ஆதரவாளர் ஒருவரை ஏன் நியமித்தீர்கள் என விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார் எனச் சுகாதாரத்துறையில் நடக்கும் மோதலையும் சொல்கிறார்கள் அதிகாரிகள்.
 

ஒரு பக்கம், உண்மையை மறைக்கும் தகவல்கள். இன்னொரு பக்கம் லாபம் தரும் கொள்முதல்கள், இவற்றிற்கிடையே அதிகார மோதல் எனத் தமிழக சுகாதாரத் துறையில் கரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் கேலிக் கூத்தாகிக்கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதில் சென்னை மாநகராட்சி உரிய ஒத்துழைப்பு தரவில்லை என முதல்வரிடம் புகார் தெரிவித்திருக்கிறார் சென்னை மண்டலத்தில் கரோனா நோயை ஒழிப்பதற்காகச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்.
 

இப்படி ஆளாளுக்கு தம் விருப்பத்திற்கேற்ப குளறுபடிகள் செய்து கொண்டிருப்பதால், தமிழகத்தில் கரோனாவுக்கு கொண்டாட்டம். மக்கள் பாடுதான் திண்டாட்டம்.



 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.