Skip to main content

தூத்துக்குடி; ஜெ. மர்ம மரணம்; அடுத்து கொடநாடு கொலை வழக்கு? -அதிர்ச்சியில் எடப்பாடி

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையங்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும், அதன் தலைவர்களான எடப்பாடி, சசிகலா ஆகியோர் மீதும் அடுத்த ஆயுதத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறது தி.மு.க. அரசு என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

அதில் முக்கிய இடம் பெறுவது கொடநாடு வழக்கு, திருச்சி ராமஜெயம் வழக்கு. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் போலீசின் விசாரணைக் கரங்கள் சசிகலாவை நோக்கி நீள்கின்றன. திவாகரின் சம்பந்தி திருச்சியில் உதவி கமிஷனராக இருந்தபோதுதான் ராமஜெயம் கொலையும் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலனை ஜெயலலிதா உத்தரவுப்படி கொலை செய்ததாக சொல்லப்படும் திண்டுக்கல் ரவுடிகள் மற்றும் ரவி என்கிற ரவுடி ஆகியோரை ராமஜெயம் கொலைவழக்கில் இறுதிக்கட்ட விசாரணைக்கு போலீஸ் உட்படுத்தியுள்ளது. சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த இந்த ரவுடிகள், சசிகலாவின் உத்தரவுக்கேற்றவாறு ராமஜெயத்தை கொலை செய்தார்கள் என்பதை உறுதிசெய்ய இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த இருக்கிறது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

இந்த விசாரணையை இறுதி செய்ய திருச்சிக்கு வந்த ஷகில் அக்தர், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார் என்று சொல்லப்படுகிறது. சாமி, ரவி தரப்பில் "எனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை. ராமஜெயம் கொலை நடந்தபோது நான் திருப்பதியில் இருந்தேன்” என பதில் கூறுகிறார். நக்கீரன்தான் என்னை இந்த கொலை வழக்கில் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டு வருகிறது என அலறிய அவரிடம், அவர் இந்தக் கொலையில் எப்படி சம்பந்தப்படுகிறார் என, தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை போலீசார் முன்வைத்துள்ளனர்.

 

ஆக, ராமஜெயம் கொலை வழக்கு 2012ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு அனுமதிக்கப்பட செய்யப்பட்ட பரிகாரக் கொலை என சி.பி.சி.ஐ.டி. விசாரணை நகர்கிறது. இதிலும் ஆறுமுகசாமி அறிக்கை போல சசிகலா வெளியேற்றம், அவர்களுக்குள் நடந்த சண்டை, ராமஜெயம் கொலை நடந்த அன்று சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டது போன்ற விவரங்கள் விரிவாக வெளியே வரும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

ராமஜெயம் கொலை வழக்கைப் போலவே கொடநாடு வழக்கிலும் ஜெ.வின் அந்தரங்க விஷயங்கள் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா எப்பொழுது கொடநாட்டுக்கு வருவார். வெளிப்படையாக எத்தனை முறை வருவார்? யாருக்கும் தெரியாமல் கொடநாட்டுக்கு எத்தனை முறை வந்து செல்வார்? அங்கு அவர் ரிலாக்ஸாக எப்படி இருப்பார்? கொடநாட்டில் இயங்கும் ஒரு மினி மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படும்? கொடநாட்டில் அமர்ந்து ஜெ.வும், சசியும் எப்படி வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பார்கள். கோடி கோடியாகக் கொட்டப்படும் லஞ்சப் பணம் கண்டெய்னர் கண்டெய்னராக எப்படி கொநாட்டுக்கு வரும்? அவை எப்படி பிரித்தளிக்கப்படும்? கொடநாட்டில் ஜெயலலிதா தனது ரகசியங்களை பூட்டி வைத்திருந்த அறைகள் எத்தனை? அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் என்ன? அங்கிருந்த பணம் எவ்வளவு? அவை கொடநாடு கொள்ளையில் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது? என விரிவாக கொடநாடு மேனேஜர் நடராஜன் சாட்சியமளித்திருக்கிறார்.

 

போலீஸ் விசாரணையின் போது விரிவாகப் பேசிய நடராஜன், தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட சொத்துகளை சம்பாதித்திருக்கிறார். அவரை வெளியே விட்டால் ஆபத்து என சசிகலா தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். நடராஜன் மட்டுமல்ல, கொடநாட்டில் கார்பென்டர் வேலை செய்த சஜீவன், ஜெ.வின் தனிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக சாட்சியமளித்திருக்கிறார்.

 

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஜெ.வைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். அனுபவ் ரவி, எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், சேலம் இளங்கோவன் ஆகியோருக்கும் கொடநாடு கொள்ளைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

இவை அனைத்தையும் சசிகலாவிடம் கேள்விகளாக கொடநாடு விசாரணை டீம் முன்வைத்து அவரிடமும் வாக்குமூலம் வாங்கியிருக்கிறது. இந்த வாக்குமூலங்கள் அனைத்தையும் கோர்ட்டில் பதிவு செய்ததுடன் கொடநாடு விசாரணை டீம், வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்திருக்கிறது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்த வழக்கில் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட உள்ளது.

 

இந்தப் புதிய எஃப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக எடப்பாடி பழனிசாமி சேர்க்கப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்படி எடப்பாடி, சசிகலா ஆகியோரை மையப்படுத்தி சுழலப்போகும் ராமஜெயம் மற்றும் கொடநாடு வழக்குகளில் பல புதிய கைதுகள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி எங்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கிய தனது சம்பந்தியை மீட்கத்தான் பேசினார். எங்களுக்கு தி.மு.க. அரசு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. எங்களைக் காப்பாற்ற எடப்பாடி எதுவும் செய்யவில்லை என கோபத்திலிருக்கும் வேலுமணி, தங்கமணி குரூப் கொடநாடு வழக்கில் எடப்பாடியை வலுவாக சிக்க வைக்க தக்க தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்கிறார்கள் கோவை மாவட்ட அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்கள்.

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.